என் மலர்
நீங்கள் தேடியது "Naxalite attack"
- தளபதி ஹிட்மா மற்றும் பட்டாலியன் தலைவர் தேவா உள்ளிட்ட உயர் நக்சல் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிந்தனர்.
- இப்பகுதியில் ஏராளமான IED வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட நக்சல்களைச் சுற்றி வளைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட இந்த நடவடிக்கையில் இதுவரை குறைந்தது 5 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசத்தை ஒழிக்க மார்ச் 31, 2026 வரை காலக்கெடு நிர்ணயித்த நிலையில், இந்த மிகப்பெரிய நடவடிக்கையில் பாதுகாப்புப் படை இறங்கியுள்ளது.
சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள கர்ரேகுட்டா மலைகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, நக்சல்கள் தப்பிக்கும் அனைத்து வழிகளையும் துண்டித்துள்ளனர்.
தலைமறைவான மற்றும் மிகவும் தேடப்படும் தளபதி ஹிட்மா மற்றும் பட்டாலியன் தலைவர் தேவா உள்ளிட்ட உயர் நக்சல் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுக் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
அடர்ந்த காடுகள் மற்றும் தொடர் மலைகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி, மாவோயிஸ்டுகளின் பட்டாலியன் எண் 1 இன் தளமாகக் கருதப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, நக்சல்கள் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு, மலைப்பகுதிகளுக்குள் நுழைய வேண்டாம் என்று கிராம மக்களை எச்சரித்தனர். மேலும் இப்பகுதியில் ஏராளமான IED வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர் என்று கூறப்படுகிறது.
- 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் பகுதிகளில் சுற்றுப்புற 1980-ம் ஆண்டு நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. நக்சலைட் தாக்குதல் அதே ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியான இதே நாளில் ஏலகிரியில் நக்சலைட்க்கு மூளையாக செயல்பட்டுவந்த சிவலிங்கத்தை போலீசார் மடக்கிபிடித்து ஜீப்பில் ஏற்றி சென்றனர்.
திருப்பத்தூர் அருகே சேலம் சாலையில் சென்ற போது நக்சலைட் சிவலிங்கம் மறைத்து எடுத்து வந்த 9 நாட்டு வெடிகுண்டை ஜீப்பில் வீசி விட்டு சினிமா பாணியில் எகிறி குதித்து தப்பி சென்றார். வெடிகுண்டு வெடித்ததில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு மற்றும் போலீஸ்காரர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகிய 4 பேர் பலியாகினர்.
இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி இறுதி சடங்கு நடந்தது. அதில், அப்போதைய முதல் அமைச்சர் எம். ஜி.ஆர். பங்கேற்று சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை, வேலூரில் உள்ள அண்ணாகலை அரங்கத்தில் எம்.ஜி.ஆர் நடத்தினார்.
நக்சலைட்களை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு அவர் உத்தர விட்டார். இதையடுத்து, வட ஆற்காடு சரக டி.ஐ.ஜி. யாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான போலீசார் நக்சலைட்டு களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினர்.
அப்போது, தமிழகத்தில் நக்சலைட்கள் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் துப்பாக்கியால்' சுட்டுகொல்லப்பட்டனர்.
நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த 4 போலீசாருக்கும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணி மண்டபம் கட்டப்பட்டது.
ஆண்டுதோறும் அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 43-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது.
முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் கலந் கொண்டு அஞ்சலி செலுத்தினர். வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எஸ்.பி.க்கள் ஆல்பர்ட் ஜான், மணிவண்ணன், கிரன்ஸ்ருதி, கார்த்திகேயன், அண்ணாதுரை எம்.பி. எல்.ஏ.க்கள் நல்லதம்பி, எம்.தேவராஜ், வில்வநாதன், கியூ பிரான்ச் எஸ்.பி.சசிதரன் ஓய்வு பெற்ற ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டி தொழிலதிபர்கள் ராஜாராணி என்.தாமோதரன், ஆர்.ஆறுமுகம் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம்
- முன்னாள் டிஜிபி தேவாரம் மரியாதை
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 1980-ம் ஆண்டு நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது . நக்சலைட் தாக்குதல் அதே ஆண்டு ஆகஸ்ட் 6 - ந் தேதியான இதே நாளில் , ஏலகிரியில் நக்சலைட்க்கு மூளையாக செயல்பட்டுவந்த சிவலிங்கத்தை போலீசார் மடக்கிபிடித்து ஜீப்பில் ஏற்றி சென்றனர் .
திருப்பத்தூர் அருகே சேலம் சாலையில் சென்ற போது , நக்சலைட் சிவலிங்கம் மறைத்து எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டை ஜீப்பில் வீசி விட்டு , சினிமா பாணியில் எகிறி குதித்து தப்பி சென்றார்.
ெவடிகுண்டு வெடித்ததில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி , ஏட்டு ஆதிகேசவலு மற்றும் போலீஸ்காரர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகிய 4 பேர் பலியாகினர். எம்.ஜி.ஆர் . உத்தரவு வேலூரில் இன்ஸ் பெக்டர் பழனிச்சாமி இறுதிசடங்கு நடந்தது. அதில், அப்போதைய அமைச்சர் முதல் எம்.ஜி.ஆர். பங்கேற்று சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார்.
மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை, வேலூரில் உள்ள அண்ணாகலை அரங்கத்தில் எம்.ஜி.ஆர் . நடத்தினார் .
நக்சலைட்களை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு அவர் உத்தர விட்டார். இதையடுத்து, வட ஆற்காடு சரக டி.ஐ.ஜி.யாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினர்.
அப்போது, தமிழகத்தில் நக்சலைட்கள் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். (மேலும் பலர் துப்பாக்கியால்' சுட்டு கொல்லப்பட்டனர்.
இதையடுத்து நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிர்நீத்த 4 போலீசாருக்கும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணி மண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி அதன்படி வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 42-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது.
முன்னாள் டிஜிபி தேவாரம் கலந் கொண்டு அஞ்சலி செலுத்தினர். வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, கலெக்டர் அமர் குஷ்வாஹா, எஸ்.பி.க்கள் பால கிருஷ்ணன், ராஜேஷ் கண்ணன், தீபன் சத்யா, கார்திகேயன், க்யூ பிரான்ச் போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜ், வில்வநாதன் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






