என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர் உமர் காலித்தை சுட முயற்சி - டெல்லியில் பரபரப்பு
By
மாலை மலர்13 Aug 2018 10:09 AM GMT (Updated: 13 Aug 2018 10:09 AM GMT)

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்தை உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள டெல்லி அரசியல் சாசன சபையில் வைத்து மர்ம நபர் ஒருவர் சுட முயற்சி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UmarKhalid #JNU
புதுடெல்லி:
டெல்லி அரசியல் சாசன சபையில் ‘வெறுப்புணர்வுகளுக்கு எதிரான ஒன்றினைவோம்’ என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில்,
சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கோரக்பூர் முன்னாள் டாக்டர் கபீல் கான், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான உமர் காலித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், உமர் காலித்தை குறிவைத்து மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள இந்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உமர் காலித் போலீசில் புகார் அளித்திருந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் இருக்கும் உமர் காலித், மதவாத அரசியல்களை பலமுறை விமர்சித்து பேசியிருந்தார். இதனால், அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
