என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்"

    • மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது.
    • கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது.

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தேர்தலில் மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது.  நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இடதுசாரி கூட்டணியிலிருந்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் மத்திய குழு தலைவராக AISA வேட்பாளர் அதிதி மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    DSF வேட்பாளர் சுனில் யாதவ் பொதுச் செயலாளர் பதவியையும், AISA வேட்பாளர் டேனிஷ் அலி இணைச் செயலாளர் பதவியையும் வென்றார்.

    SFI அமைப்பின் வேட்பாளர் கே. கோபிகா பாபு துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த ஆண்டு, இடதுசாரி மாணவர் அமைப்புகள் மூன்று இடங்களை வென்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்களையும் வென்றடுள்ளன.

    எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது. 

    • வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
    • ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த பேரணியை நடத்தியது.

    ஜவஹர்லால் நேரு பல்கலைகலைக்கழகத்தில் (ஜெஎன்யு) ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இடதுசாரி மாணவர் குழுக்கள் நேற்று வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.

    இந்தப் பேரணியைத் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆறு காவலர்கள் காயமடைந்ததாகவும், 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர்களில் ஜெஎன்யு மாணவர் சங்கத் தலைவர் நிதீஷ் குமார், துணைத் தலைவர் மனிஷா, பொதுச் செயலாளர் பாத்திமா ஆகியோரும் அடங்குவர்.

    முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை நடத்தியது. 

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று முதுகலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள படிக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டவாறு ஒரு மாணவர் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு இன்று காலை 11.30 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் அளித்தனர்.

    விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மாணவர் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு பட்டதாரி என்ற முதல்கட்ட தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், உயிரிழந்த மாணவர் பெயர் ரிஷி ஜோஷ்வா (24) என்பதும் அவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் இன்றிரவு தெரியவந்தது.

    எம்.ஏ. ஆங்கிலம் பயின்றுவந்த ரிஷி ஜோஷ்வா, சில நாட்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நேற்றைய செமஸ்ட்டர் தேர்வை எழுதாமல் தவறவிட்டதாகவும் அவரது சகமாணவர்கள் தெரிவித்தனர்.

    தனது மரணத்துக்கான காரணத்தை ஆங்கில பேராசிரியர் ஒருவருக்கு ஏற்கனவே அவர் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று முக்கிய பொறுப்புக்களை கைப்பற்றியுள்ளனர். #JNUSUElection2018
    புதுடெல்லி:

    தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 14-ம் தேதி காலை துவங்கியது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அகில பாரதிய வித்யா பரிஷத் (ஏ.பி.வி.பி.) என்ற மாணவர் சங்கத்துக்கு வாக்கு எண்ணிக்கை குறித்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
     
    இதையடுத்து, வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது, எதிர்ப்பாராதவிதமாக வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைந்த ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் வாக்குப்பெட்டிகளை உடைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக தேர்தல் நிர்வாகம் அறிவித்தது.

    பின்னர், நேற்றிரவு மீண்டும் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் இன்று பிற்பகல் வெளியான முடிவு நிலவரங்களின்படி,  ஐக்கிய இடதுசாரி கூட்டணியை சேர்ந்த சாய் பாலாஜி தலைவராகவும் , சரிகா சவுத்ரி துணை தலைவராகவும், ஐஜாஸ் அஹமத் ராத்தெர் பொதுச் செயலாளராகவும், அமுதா ஜெயதீப் துணை பொதுச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளனர்.

    அனைத்திந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு,  அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, டெல்லி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் இந்த ஐக்கிய இடதுசாரி கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
    #JNUSUElection2018 
    ×