என் மலர்
நீங்கள் தேடியது "மெலனியா டிரம்ப்"
- அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
- அதில், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.
அங்காரா:
அமெரிக்கா அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பிரிவினால் வாடும் குழந்தைகளை காரணம் காட்டி உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், துருக்கி அதிபர் தாயீப் எரோடகனின் மனைவி எமினே, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ஏற்பட புதினுக்கு கடிதம் எழுதியிருந்ததைப் பாராட்டினார்.
தொடர்ந்து, நீண்ட நாட்களாக நீடித்து வரும் காசா போரை உடனடியாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.
பின்னர் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என தெரிவித்தார். மேலும், "ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளும் இதில் சிறிது தலையிட வேண்டும். ஆனால் முக்கிய பொறுப்பு ஜெலென்ஸ்கியிடம் உள்ளது" என்று கூறினார்.
இதனிடையே அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது புதினிடம் டிரம்ப் தனது மனைவி மெலனியா எழுதிய கடிதத்தை வழங்கினார். அதில் உக்ரைனில் போரால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அக்கடிதத்தில், "புவியியல், அரசாங்கம் மற்றும் சித்தாந்தத்திற்கு மேலே நிற்கும் ஒரு அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும். இந்த குழந்தைகளின் அப்பாவித்தனத்தைப் பாதுகாப்பதில், நீங்கள் ரஷியாவிற்கு மட்டும் சேவை செய்வதை விட அதிகமாகச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த குழந்தைகளுக்கு நீங்கள் பேனாவால் கையெழுத்திடுவது மூலம் உதவ முடியும்" என்று மெலனியா தெரிவித்தார் .
- அமெலியா 1945ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஸ்லோவேனியாவில் வளர்ந்தவர்
- தனது தாயாரை ஒரு இரும்பு பெண்மணி என குறிப்பிட்டுள்ளார், மெலனியா
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump).
மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs). ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்டதால், அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.
1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர்.
2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.
அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி (Miami) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாவ்ஸ் உயிரிழந்தார்.
இத்துயர செய்தியை மெலனியா தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் மெலனியா, "அமெலியா ஒரு இரும்பு பெண்மணி. கணவர், குழந்தைகள், மருமகன் ஆகியோரிடம் மிகுந்த பாசம் உடையவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அவர் நினைவை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது கோல்மன் லாயிட் என்ற சிறுமியிடம் டிரம்ப் பேசினார்.
அப்போது அந்த சிறுமியிடம் அவர் நலம் விசாரித்தார். கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சற்றும் எதிர்பாராத வகையில், “சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) நீ நம்புகிறாயா?” என டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுமி, டிரம்பிடம் “சாண்டா கிளாசை நம்புகிறேன்” என கூறி விட்டாலும், அவர் கேட்ட கேள்விக்கு உண்மையிலேயே தனக்கு அர்த்தம் தெரியவில்லை என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறாள்.
அதே நேரத்தில் நாட்டின் அதிபதியான டிரம்ப், தங்கள் மகளிடம் பேசியதில் கோல்மன் லாயிட்டின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #DonaldTrump #MelaniaTrump
அமெரிக்க அதிபராக முன்னர் பராக் ஒபாமா பதவி வகித்தபோது அந்நாட்டின் வெளியுறவு துறைக்கான ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த மிரா ரிக்கார்டெல். அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்ட்டன் என்பவருக்கு உதவியாக தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக கடந்த மே மாதம் மிரா ரிக்கார்டெல் நியமிக்கப்பட்டார்.

தேசிய பாதுகாப்பு தலைமை ஆலோசகர் ஜான் போல்ட்டனிடம் தனக்குள்ள நெருக்கம் மற்றும் செல்வாக்கால் மிரா ரிக்கார்டெல் வரம்புமீறி நடந்து கொள்வதாக கருதிய மெலனியா ஆத்திரமடைந்தார். நீருபூத்த நெருப்பாக அவருக்குள் கொதித்த பகைமையுணர்வை நேற்று மெலினியா வெளிப்படையாகவே கொட்டித் தீர்த்தார்.
இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ‘இந்த வெள்ளை மாளிகையில் தொடர்ந்து பணியாற்றும் கவுரவத்தை மிரா ரெக்கார்டல் இழந்து விட்டார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மிரா ரெக்கார்டல் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அதிபரின் வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #MelaniaTrump #WhiteHouse #MiraRicardel
இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவதற்கு எதிரான பிரசாரத்தை அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் தொடங்கியுள்ளார்.
இது குறித்து ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், வலுவான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்து உள்ளேன். என்னைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் உண்மையில் பார்க்க வேண்டும்.
அதனால்தான் எனது சிறந்த முன்முயற்சி சமூக ஊடக மற்றும் ஆன்லைன் நடத்தையை மையமாகக் கொண்டது. இது போன்ற கிண்டல்களை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளையும் தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக உணர்ச்சிப் பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும், அதனால் அவர்கள் வளர்ந்து வரும் போது இது போன்ற சிக்கல்களை சமாளிப்பார்கள் என அவர் தெரிவித்தார். #MelaniaTrump
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா குழுந்தைகள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ளார்.
கென்யா சென்ற அவர் நைரோபியில் உள்ள டேவிட் ஷெல்டிரிக் வன விலங்குகள் சரணாலயம் சென்றார். அங்கு யானைகளுக்கு உணவு வழங்கினார்.
அவரை குட்டியானை ஒன்று துதுக்கையால் இடித்து தள்ளி தாக்கியது. இதை எதிர்பாராத அவர் சிறிது தடுமாறி பின்னர் சுதாரித்துக் கொண்டார். நடந்த சம்பவத்தை வாய் மூடி சிரித்து சமாளித்தார். #MelaniaTrump






