search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "us citizenship"

    • அமெலியா 1945ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஸ்லோவேனியாவில் வளர்ந்தவர்
    • தனது தாயாரை ஒரு இரும்பு பெண்மணி என குறிப்பிட்டுள்ளார், மெலனியா

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump).

    மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs). ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்டதால், அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.

    1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர்.

    2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.

    அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி (Miami) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாவ்ஸ் உயிரிழந்தார்.

    இத்துயர செய்தியை மெலனியா தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் மெலனியா, "அமெலியா ஒரு இரும்பு பெண்மணி. கணவர், குழந்தைகள், மருமகன் ஆகியோரிடம் மிகுந்த பாசம் உடையவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அவர் நினைவை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.


    அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே மகப்பேறு சுற்றுலாவாக வெளிநாட்டில் இருந்து பல கர்ப்பிணிகள் இங்கு வருகின்றனர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #Birthright #UScitizenship #birthtourism #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள கொலம்பியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து கரிப்பிணிப் பெண்கள் அமெரிக்காவுக்கு வருகின்றனர்.

    இங்கு வந்து குழந்தை பெற்றுகொண்டால் அந்த குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்தும் உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இங்கு ‘பிரசவ சுற்றுலா’ வரும் வெளிநாட்டினரின் என்ணிக்கை பெருகி விட்டது என டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    சீனாவில் இருந்தும் இன்னும் சில ஆசிய நாடுகளில் இருந்தும் இதுபோல் அதிகமான பெண்கள் வருகின்றனர். இது இப்போது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. அவர்கள் நமது நாட்டின் எதிரியாக இருக்கலாம். நம்மீது போர் தொடர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம். ஒருவர் நம்மை வெறுப்பவராகவும் தனது நாட்டின் சர்வாதிகாரியாகவும் இருக்கலாம். 

    ஆனால், அவரது மனைவி அமெரிக்காவில் குழந்தை பெற்றுவிட்டால் அவரது மகனுக்கோ, மகளுக்கோ அமெரிக்க குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    நமது நாட்டின் மண்ணில் கால்பதித்த சில வினாடிகளில் அந்த பெண்களுக்கு குழந்தை பிறந்து விட்டாலும் அன்னியர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள்.

    இதுபோன்ற கேலிக்கூத்தான, பைத்தியக்காரத்தனமான கொள்கையால் சட்டவிரோதமாக வருபவர்களுக்கு பிறக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நாம் குடியுரிமை அளிக்க வேண்டியுள்ளது. இந்த முறைக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். #Birthright #UScitizenship #birthtourism #Trump
    கடந்த 2017-ம் ஆண்டில் 50, 802 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. #USCitizenship #indians
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் எச்-1பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வழி வகை செய்யும் விதத்தில் எச்-1பி விசா வழங்குவதில் கடுமையான நடைமுறைகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    மேலும் எச்-1பி விசாவில் பணிபுரிவோரின் துணைவர்கள் வேலை பார்க்க வழங்கப்படும் எச்-4 விசாவை ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவில் ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 2017-ம் ஆண்டில் 50, 802 பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    இது கடந்த 2016-ம் ஆண்டைவிட 4 ஆயிரம் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2016-ம் ஆண்டில் 46,188 பேரும், 2015-ம் ஆண்டில் 42,213 பேரும் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

    இவர்களில் 12 ஆயிரம் பேர் கலிபோர்னியாவிலும், நியூஜெர்சியில் 5,900 பேரும், டெக்காசில் 3,700 பேரும், நியூயார்க், பென்சில்வேனியாவில் 7,100 பேரும் தங்கியுள்ளனர்.

    மொத்ததில் கடந்த 2016-ம் ஆண்டில் 7 லட்சத்து 7 ஆயிரத்து 265 பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து18 ஆயிரத்து 559 பேர் மெக்சிகோவை சேர்ந்தவர்கள்.

    இவர்கள் தவிர சீனாவை சேர்ந்த 37,674 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டினர் 36,828 பேரும், டெமெனி குடியரசை சேர்ந்த 29,734 பேரும், நியூயார்கை சேர்ந்த 25,961 பேரும் குடியுரிமை பெற்றவர்களில் அடங்குவர்.

    குடியுரிமை பெற்றவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகப்பேர் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 10 ஆயிரத்து 987 பேரும், பெண்களில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 234 பேரும் ஆவர். குடியுரிமை பெற்றவர்களில் மெக்சிகோ நாட்டினர் முதலிடத்திலும், இந்தியர்கள் 2-வது இடத்தையும் பெற்று உள்ளனர். #USCitizenship #indians
    ×