search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melania Trump"

    • அமெலியா 1945ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஸ்லோவேனியாவில் வளர்ந்தவர்
    • தனது தாயாரை ஒரு இரும்பு பெண்மணி என குறிப்பிட்டுள்ளார், மெலனியா

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump).

    மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs). ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்டதால், அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.

    1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர்.

    2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.

    அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி (Miami) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாவ்ஸ் உயிரிழந்தார்.

    இத்துயர செய்தியை மெலனியா தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் மெலனியா, "அமெலியா ஒரு இரும்பு பெண்மணி. கணவர், குழந்தைகள், மருமகன் ஆகியோரிடம் மிகுந்த பாசம் உடையவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அவர் நினைவை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.


    அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் சிறுமியிடம் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. #DonaldTrump #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது கோல்மன் லாயிட் என்ற சிறுமியிடம் டிரம்ப் பேசினார்.

    அப்போது அந்த சிறுமியிடம் அவர் நலம் விசாரித்தார். கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சற்றும் எதிர்பாராத வகையில், “சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) நீ நம்புகிறாயா?” என டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

    அந்தக் கேள்வியை எதிர்பார்த்திராத அவள், “ஆமாம் சார்” என்று கூறி சமாளித்து விட்டாள். அவளிடம் அந்தப் பதிலை எதிர்பார்த்திராத டிரம்ப், “சரி, சந்தோஷமாக இருங்கள்” என்று கூறினார்.


    கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாவை நீ நம்புகிறாயா என அதிபர் டிரம்ப், சிறுமியிடம் எழுப்பிய கேள்வி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

    தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுமி, டிரம்பிடம் “சாண்டா கிளாசை நம்புகிறேன்” என கூறி விட்டாலும், அவர் கேட்ட கேள்விக்கு உண்மையிலேயே தனக்கு அர்த்தம் தெரியவில்லை என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறாள்.

    அதே நேரத்தில் நாட்டின் அதிபதியான டிரம்ப், தங்கள் மகளிடம் பேசியதில் கோல்மன் லாயிட்டின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #DonaldTrump #MelaniaTrump
    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலினியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்த தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை வெள்ளை மாளிகை பதவி நீக்கம் செய்துள்ளது. #MelaniaTrump #WhiteHouse #MiraRicardel
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக முன்னர் பராக் ஒபாமா பதவி வகித்தபோது அந்நாட்டின் வெளியுறவு துறைக்கான ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த மிரா ரிக்கார்டெல். அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்ட்டன் என்பவருக்கு உதவியாக தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக கடந்த மே மாதம் மிரா ரிக்கார்டெல் நியமிக்கப்பட்டார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடந்த மாதம் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது மெலனியாவின் உதவியாளர்களுக்கும் மிரா ரிக்கார்டெலுக்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டதாக தெரிகிறது.



    தேசிய பாதுகாப்பு தலைமை ஆலோசகர் ஜான் போல்ட்டனிடம் தனக்குள்ள நெருக்கம் மற்றும் செல்வாக்கால் மிரா ரிக்கார்டெல் வரம்புமீறி நடந்து கொள்வதாக கருதிய மெலனியா ஆத்திரமடைந்தார். நீருபூத்த நெருப்பாக அவருக்குள் கொதித்த பகைமையுணர்வை நேற்று மெலினியா வெளிப்படையாகவே கொட்டித் தீர்த்தார்.

    இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ‘இந்த வெள்ளை மாளிகையில் தொடர்ந்து பணியாற்றும் கவுரவத்தை மிரா ரெக்கார்டல் இழந்து விட்டார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மிரா ரெக்கார்டல் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அதிபரின் வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #MelaniaTrump #WhiteHouse  #MiraRicardel 
    அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் டொனால்டு டிரம்ப். இவரது மனைவி மெலனியா டிரம்ப், அதிபர் மாளிகையில் வசிப்பவர்களுக்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மெலனியா டிரம்ப் நேற்று பிலடெல்பியா மாகாணம் புறப்பட்டு செல்வதற்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானத்தில் ஏறினார்.

    சிறிது நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமான தளத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்து மெலனியா பத்திரமாக கீழே இறங்கினார்.

    இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இயந்திர கோளாறால் புகை ஏற்பட்டது என தெரிவித்தார்.

    மெலினியா டிரம்ப் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்த டொனால்ட் டிரம்ப், அவருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #MelaniaTrump
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியாவை குட்டியானை ஒன்று துதுக்கையால் இடித்து தள்ளி தாக்கியது. #MelaniaTrump
    நைரோபி:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா குழுந்தைகள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ளார்.

    கென்யா சென்ற அவர் நைரோபியில் உள்ள டேவிட் ஷெல்டிரிக் வன விலங்குகள் சரணாலயம் சென்றார். அங்கு யானைகளுக்கு உணவு வழங்கினார்.

    அவரை குட்டியானை ஒன்று துதுக்கையால் இடித்து தள்ளி தாக்கியது. இதை எதிர்பாராத அவர் சிறிது தடுமாறி பின்னர் சுதாரித்துக் கொண்டார். நடந்த சம்பவத்தை வாய் மூடி சிரித்து சமாளித்தார். #MelaniaTrump
    அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் அடைக்கப்பட்டுள்ள முகாமுக்கு நேற்று சென்ற டிரம்ப் மனைவி அணிந்திருந்த கோட்டில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MelaniaTrump
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகளை தனியாக பிரித்து அடைத்து வைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை டிரம்ப் கொண்டு வந்தார். இதன்படி, சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை விட்டு தனியாக பிரித்து வைக்கப்பட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர்.

    ஐ.நா உள்ளிட்ட பல நாடுகள் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கூட இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தார். இதனை அடுத்து, பெற்றோர் - குழந்தைகளை பிரிக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள குழந்தைகள் முகாமை அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் நேற்று பார்வையிட்டார். காரில் இருந்து இறங்கிச்சென்ற அவர் அணிந்திருந்த கோட்டில் “I really don’t care, do u?”(நிஜமாகவே எனக்கு கவலையில்லை. உங்களுக்கு?) என எழுதப்பட்டிருந்தது.

    முகாமை பார்வையிட்ட பின் மீண்டும் அவர் காருக்கு திரும்பும் போதும் இதே கோட்டை அணிந்திருந்தார். இதனை அடுத்து, இணையத்தில் பலர் மெலனியாவின் இந்த கோட் கருத்தை விமர்சிக்க தொடங்கினர். 

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த மெலானியாவின் செய்தி தொடர்பாளர், “அது வெறும் கோட்தான். அதில் உள்ள கருத்துக்கு எந்த உள் அர்த்தமும் கற்பிக்க வேண்டாம். முக்கியமாக அவர் குழந்தைகள் முகாமுக்கு சென்றுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த உடையின் மீது மீடியாக்கள் கவனம் செலுத்த வேண்டாம்” என கூறினார்.

    சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் (48). இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக மெலானியா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனவே இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #MelaniaTrump 
    ×