என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "airspace ban"

    • இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து வான்வெளியை மூடுவதாக துருக்கி தெரிவித்தது.
    • இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு கடந்த வாரம் தடை விதித்தது.

    அங்காரா:

    இஸ்ரேல்-காசா இடையிலான போர் தொடங்கியது முதலே துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது.

    காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக கடந்த ஆண்டு மே மாதம் துருக்கி கூறியது.

    இந்நிலையில், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடன் கூறுகையில், இஸ்ரேலுடனான அனைத்து பொருளாதார மற்றும் வணிக உறவுகளையும் துண்டித்து, இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை துருக்கி மூடும் என தெரிவித்தார்.

    மேலும், பாராளுமன்றத்தின் அமர்வில் பேசிய அவர், காசா, லெபனான், ஏமன், சிரியா, ஈரான் மீதான இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச ஒழுங்கை மீறும் ஒரு பயங்கரவாத அரசு மனநிலையின் தெளிவான அறிகுறி என தெரிவித்தார்.

    ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி தங்களுடைய வான்வெளியில் பறக்க இந்திய விமானங்களுக்கு தடைவிதித்தது.
    • அந்த தடையை ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டது. அப்போது இந்தியாவுக்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்கள், பொது போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்தது.

    இந்த நிலையில் தடை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

    வருகிற 24ஆம் தேதி வரை அனைத்து பாகிஸ்தான் விமானங்களும் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் ஏப்ரல் 24ஆம் தேதி அவர்களின் வான்வெளியை பயன்படுத் தடைவிதித்தது.

    இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி பாதையை மீண்டும் திறந்து விடுவது பற்றி பாகிஸ்தான் 15-ந் தேதி முடிவு செய்கிறது.
    லாகூர்:

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தன.

    இந்த சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தான் தனது வான்வழி பாதையை முற்றிலுமாக மூடிவிட்டது. பின்னர், மார்ச் 27-ந் தேதி, மீண்டும் திறந்தது. ஆனால், டெல்லி, தாய்லாந்து தலைநகர் பாங்காக், மலேசியா தலைநகர் கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வரும் மற்றும் செல்லும் விமானங்களுக்கு மட்டும் வான்வழி பாதையை பயன்படுத்த தடை விதித்தது.

    இந்த தடை காரணமாக, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த விமானங்கள், கோலாலம்பூருக்கு 4 விமானங்களும் பாங்காக், டெல்லி ஆகியவற்றுக்கு தலா 2 விமானங்களும் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தன. இவை லாபகரமான வழித்தடம் என்பதால், இவற்றை நிறுத்தியதால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி பாதையை மீண்டும் திறந்து விடுவது குறித்து 15-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணைய செய்தித்தொடர்பாளர் முஜ்தாபா பைக் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட மந்திரிகளும், அவர்களின் அமைச்சக அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்திய விமானங்களுக்கு தடையை நீக்கலாமா? தொடரலாமா? என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். அதே நாளில் முடிவு அறிவிக்கப்படும்’’ என்றார்.



    ஆனால், பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவரும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான பவத் சவுத்ரி, ‘‘இந்தியாவில் தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவி ஏற்கும் வரை இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே, தேர்தல் முடியும் வரை, வான்வழி பாதை வி‌‌ஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும்’’ என்றார்.
    ×