என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BTS"

    2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் BTS மிகப்பெரிய உலகளாவிய இசைப் பயணத்தை மேற்கொள்ளும் பிடிஎஸ்.

    உலகப்புகழ் பெற்ற BTS இசைக்குழுவின் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் புதிய ஆல்பம் வரும் மார்ச் 20ம் தேதி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று புத்தாண்டை முன்னிட்டு, BTS உறுப்பினர்கள் தங்களது ரசிகர்களான 'ARMY'-க்கு எழுதிய கையெழுத்துக் கடிதங்கள் வாயிலாக இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.

    2022-ல் வெளியான 'Proof' ஆல்பத்திற்குப் பிறகு, அனைத்து 7 உறுப்பினர்களும் (RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook) இணைந்து வெளியிடும் முதல் முழு ஆல்பம் இதுவாகும்.

    அனைத்து உறுப்பினர்களும் தங்களது கட்டாய ராணுவ சேவையை 2025 ஜூன் மாதத்தில் வெற்றிகரமாக முடித்த பிறகு வெளியாகும் முதல் இசைத் தொகுப்பு இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஆல்பம் வெளியானதைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் BTS மிகப்பெரிய உலகளாவிய இசைப் பயணத்தை (World Tour) மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக 'Bighit Music' நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் #BTSComeback மற்றும் #March20 போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

    இந்நிலையில், பிடிஎஸ் இசைக்குழு புதிய ஆல்பம் வெளியிடவுள்ளதை அடுத்து, பிரத்தியேக கவுண்ட்டவுன் தளத்தை தொடங்கியுள்ளது.

    இதன்மூலம், '2026bts.com' என்ற தளத்தை அறிமுகம் செய்து Comeback கொடுப்பதை BTS உறுதி செய்துள்ளது.

     

    BTS மிகப்பெரிய உலகளாவிய இசைப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டம்.

    உலகப்புகழ் பெற்ற BTS இசைக்குழுவின் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் புதிய ஆல்பம் வரும் மார்ச் 20ம் தேதி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று புத்தாண்டை முன்னிட்டு, BTS உறுப்பினர்கள் தங்களது ரசிகர்களான 'ARMY'-க்கு எழுதிய கையெழுத்துக் கடிதங்கள் வாயிலாக இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.

    2022-ல் வெளியான 'Proof' ஆல்பத்திற்குப் பிறகு, அனைத்து 7 உறுப்பினர்களும் (RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook) இணைந்து வெளியிடும் முதல் முழு ஆல்பம் இதுவாகும்.

    அனைத்து உறுப்பினர்களும் தங்களது கட்டாய ராணுவ சேவையை 2025 ஜூன் மாதத்தில் வெற்றிகரமாக முடித்த பிறகு வெளியாகும் முதல் இசைத் தொகுப்பு இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஆல்பம் வெளியானதைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் BTS மிகப்பெரிய உலகளாவிய இசைப் பயணத்தை (World Tour) மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக 'Bighit Music' நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் #BTSComeback மற்றும் #March20 போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

    • 2026 மே முதல் டிசம்பர் வரை சுமார் 60 முதல் 65 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்.
    • 2026ம் ஆண்டின் முற்பகுதியில் மும்பையில் இசை நிகழ்ச்சியை நடத்த என தகவல்.

    பிரபல தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), 2026-ஆம் ஆண்டில் தங்களின் பிரம்மாண்ட உலகளாவிய இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2026ம் ஆண்டின் முற்பகுதியில் மும்பையில் இசை நிகழ்ச்சியை நடத்த BTS குழுவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 27ம் தேதி அன்று ஒரு நேரலை நிகழ்ச்சியில், BTS உறுப்பினர் கிம் டேஹியுங் (Kim Taehyung - V), இந்திய ரசிகர்களை நோக்கி "நமஸ்தே இந்திய ஆர்மி, அடுத்த ஆண்டு சந்திப்போம்" என்று கூறியது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    BTS-ன் ஏழு உறுப்பினர்களும் (RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook) தங்களின் கட்டாய இராணுவப் பணியை 2025 ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டனர்.

    அவர்கள் தற்போது புதிய ஆல்பம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், 2026 மே முதல் டிசம்பர் வரை சுமார் 60 முதல் 65 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    BTS-ன் மேலாண்மை நிறுவனமான HYBE, கடந்த செப்டம்பர் 2025-ல் மும்பையில் 'HYBE India' என்ற தனது அலுவலகத்தைத் தொடங்கியது. இது BTS போன்ற பெரிய குழுக்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துகிறது.

    இருப்பினும், இதுவரை இந்த இசைக்குழுவின் நிறுவனமான BIGHIT MUSIC அல்லது HYBE, இந்தியாவுக்கான தேதிகள் அல்லது இடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    • விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.
    • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ''கோல்டன்' தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார்.

    49-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் விழா கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் நடந்தது. 1975-ம் ஆண்டு முதல் 'மக்கள் தேர்வு' விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.

    பாப் பாடல், இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் கலைஞர்' விருதை 'BTS'இசைக்குழுவை சேர்ந்த ஜங்குக் பெற்றுள்ளார். மக்களின் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யப்படும் இவ்விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.


    தற்போது ஜங்குக் ராணுவத்தில் சேர்ந்துள்ளதால் விருதை நேரில் பெற வர முடியவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ''கோல்டன்' தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார். இந்த விருது கிடைத்த செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் ஜங்குக்வுக்கு இணைய தளத்தில் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

    • 21.07 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
    • BTS உறுப்பினர் V-ன் பதிவு 21.01 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக்கோப்பையை வென்ற புகைப்படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் 21.07 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    ஆசியாவில் அதிக லைக்குகள் வாங்கிய இன்ஸ்டாகிராம் பதிவு என்ற BTS உறுப்பினர் V-ன் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    V பதிவிட்டிருந்த தனது செல்லப்பிராணியின் புகைப்படங்கள் 21.01 மில்லியன் லைக்குகள் பெற்றிருந்த நிலையில், விராட் கோலி பதிவிட்ட டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்ட புகைப்படங்கள் 21.07 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது.

    இதற்கு முன்பு நடிகை கியாரா, சித்தார்த்தின் திருமண புகைப்படம் தான் இந்தியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் வாங்கி சாதனை புடைத்திருந்தது. அந்த சாதனையை அண்மையில், விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை புகைப்படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜே-ஹோப் [30 வயது] தனது ராணுவ சேவையை முடித்துள்ளார்
    • ராணுவ சேவையை நல்ல உடல்நலத்தோடு, பாதுகாப்பாக முடித்ததாக தெரிவித்தார்

    தென் கொரியாவில் 7 இளைஞர்களால் உருவான BTS இசைக்குழு எல்லைகள் கடந்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த கே- பாப் இசைக்கு ரசிகர்கள் அதிகம்.

    ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களைக் கொண்ட இந்த இசைக்குழு உலகம் முழுவதும் சென்று தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்கிடையே தென் கொரியாவில் இளைஞர்கள் கட்டாயம் ராணுவ சேவை செய்யவேண்டும் என்ற விதி உள்ளதால் BTS குழுவைச் சேர்ந்தவர்களும் ராணுவ  சேவைக்கு  சென்றனர். இதில் ஜின்னின் சேவைக் காலம் கடந்த ஜூன் மாதம் முடிந்தது.

    தொடர்ந்து தற்போது ஜே-ஹோப் [30 வயது] தனது ராணுவ  சேவையை முடித்துக் கொண்டு நேற்று முன் தினம் [வியாழக்கிழமை] வெளியே வந்துள்ளார். கேங்வான் மாகாணத்தில் உள்ள வோன்ஜுவில் உள்ள ராணுவ தளத்தில் தனது  சேவையை முடித்துக்கொண்டு அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்த அவரை பார்க் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஜின்னும் அங்கு வந்து அவரை வரவேற்றார்.

     

    தொடர்ந்து பயிற்சி குறித்து பேசிய ஜே-ஹோப், ராணுவ சேவையை நல்ல உடல்நலத்தோடு, பாதுகாப்பாக முடித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து BTS குழு வேளைகளில் அவர் மீண்டும் ஈடுபட உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

    ×