என் மலர்
நீங்கள் தேடியது "Army chief"
- இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
- பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏதுவாக அந்நாட்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. பீல்டு மார்ஷல் உச்சபட்ச பதவி என்பதால் அதில் உள்ளவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய அந்நாட்டு அரசியலமைப்பில் இடமில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசியலமைப்பு 243 பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் , பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தலைமை பதவியாக இது அமையும். நேற்று தாக்கலான அரசியலமைப்பு திருத்த மசோதாவில் ராணுவ தளபதியே, பாதுகாப்பு படைகளின் தலைவராகவும் பதவி வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று அதிபருக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
- ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம் என்று இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பேசியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பாகிஸ்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கர் மாவட்டத்தில் ராணுவ வீரர்களிடம் பேசிய உபேந்திர திவேதி, "தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் முதல் தூணாக மாறி பொதுமக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது" என்று தெரிவித்தார்.
- இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.
- நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது
மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற ஷாங்க்ரி-லா மாநாட்டில் பங்கேற்ற இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.
பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததா என்றும், 3 ரஃபேல் உட்பட ஆறு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது குறித்தும் அவரிடம் செய்தித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசுகையில், மே 7 ஆரம்ப கட்ட தாக்குதல்களில் அவற்றை இழந்தோம், ஆனால் எத்தனை போர் விமானங்கள் இழந்தோம் என்பது முக்கியமல்ல, அவற்றை ஏன் இழந்தோம் என்பதுதான் முக்கியம்.
அவை ஏன் சரிந்தன, என்ன தவறுகள் செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம். நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் சரிசெய்தோம், இரண்டு நாட்களுக்குப் பிறகு எங்கள் அனைத்து விமானங்களும் மீண்டும் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கின" என்று அனில் சவுகான் கூறினார்.
இருப்பினும் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர் மறுத்தார்.
மே 7 அன்று பாகிஸ்தானுடனான மோதல்களில் இந்திய போர் விமானங்களின் நிலை குறித்து இந்திய அரசாங்கமோ அல்லது இராணுவ அதிகாரியோ வெளிப்படையாக பேசியது இதுவே முதல் முறை.
- பாகிஸ்தான் அமைதியை நாடினாலும், தங்கள் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது
- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அசிம் முனீர் தலைமையிலான இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் மோதலில் முக்கிய முகமாக விளங்கிய அசிம் முனிர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவுடனான மோதலில் முன்மாதிரியான பங்கிற்காக முனீர் பதவி உயர்வு பெற்றதாக அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனல் பிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. ஃபீல்ட் மார்ஷல் என்பது ராணுவத்தின் உச்சபட்ச பதவியாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் அமைதியை நாடினாலும், தங்கள் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அசிம் முனீர் முன்னர் தெரிவிருந்தார்.
ராணுவ ஜெனரல் ஆவதற்கு முன்னர், முனீர் நாட்டின் உளவுத்துறை நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI)-க்கு தலைமை தாங்கினார்.
பிப்ரவரி 2019 இல் புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன.
நவம்பர் 2022 இல், ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்குப் பதிலாக ஜெனரல் அசிம் முனீர் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
அசிம் முனீர் 2022 முதல் பாகிஸ்தானில் 11வது ராணுவத் தளபதியாகப் பணியாற்றி வருகிறார். நவம்பர் 2024 இல், ராணுவத் தளபதியாக அவரது பதவிக்காலம் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அசிம் முனீர் தலைமையிலான இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
- ஜம்மு காஷ்மீரில் நாளை ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் நாளை ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.
பாதுகாப்பு, பயங்கரவாதிகளுக்கு பதிலடி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- எதையும் சமாளிக்கும் வகையில் இந்திய படைகள் தயாராக உள்ளன.
- குளிர்காலம் தொடங்கியவுடன் சில படைப்பிரிவுகள் திரும்ப வாய்ப்பு
லடாக் எல்லை பகுதியில் கடந்த 30 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள இந்தியா-சீன படைகளின் நிலை குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளதாவது:
கிழக்கு லடாக்கில் நிலைமை நிலையானது என்றாலும் கணிக்க முடியாத வகையில் உள்ளது. டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்த இரு நாடுகள் இடையேயான அடுத்த சுற்று ராணுவ பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் சீன துருப்புக்களின் பலத்தில் எந்தக் குறைவும் இல்லை. எனினும் குளிர்காலம் தொடங்கியவுடன் சில படைப்பிரிவுகள் திரும்புவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சீனாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தடையின்றி நடந்து வருகிறது.
அவர்கள் (சீன ராணுவத்தினர்) ஹெலிபேடுகள், விமானநிலையங்கள் மற்றும் சாலைகளை அமைத்து வருகின்றனர். எங்களை பொருத்தவரை, எத்தகைய செயல்களையும் சமாளிக்கும் வகையில் போதுமான படைகள் மற்றும் போதுமான இருப்புக்கள் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
எங்களின் நலன்கள் மற்றும் உணர் திறன் இரண்டையும் பாதுகாக்கும் வகையில், சீன ராணுவம் மீதான நமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக அளவீடு செய்யப்படுகின்றன. அனைத்து வகையான தற்செயல்களையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
- தலைநகர் கிளர்ச்சியைத் தொடர்ந்து பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரேசிலியா:
பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ம் தேதி பதவியேற்றார்.
இதற்கிடையில் லுடா அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8-ம் தேதி தலைநகர் பிரேசிலியாவில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் அதிபர் மாளிகை ஆகிய கட்டிடங்களுக்குள் புகுந்து சூறையாடினர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போல்சனாரோ இந்த கலவரத்தை தூண்டியதாக அதிபர் லுலா டா சில்வா குற்றம் சாட்டிய நிலையில், போல்சனாரோ அதனை திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், தலைநகரில் ஜனவரி 8-ம் தேதி கிளர்ச்சியைத் தொடர்ந்து நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா நேற்று பிரேசிலின் ராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்தார்.
இதன்படி, ஜெனரல் ஜூலியோ சீசர் டி அர்ருடா ராணுவத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பிரேசிலிய ஆயுதப் படைகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக தென்கிழக்கு ராணுவக் கட்டளைத் தலைவராக இருந்த ஜெனரல் டோமஸ் மிகுவல் ரிபேரோ பைவா நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே அதிபர் இல்ல கலவரம் தொடர்பாக 40 வீரர்களை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் லூலா உத்தரவிட்டுள்ளார்.
- ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
- ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்திய ராணுவத்தின் 29-வது ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த மே 2022-ம் ஆண்டு பதவியேற்றார்.
அதற்கு முன், ஜெனரல் மனோஜ் பாண்டே துணை தளபதியாக இருந்தார். இவர் ராணுவத்தின் என்ஜினீயர்ஸ் படை பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவருக்கு ஜூன் 30 வரை ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
மனோஜ் பாண்டே பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 26 மாத பதவிக்காலத்திற்கு பிறகு இன்று அவர் ஓய்வு பெறுகிறார்.
#WATCH | Delhi: Outgoing Army Chief Gen Manoj Pande receives Guard of Honour on his last day in office. He retires today after a 26-month tenure. pic.twitter.com/aBOzlPXKe6
— ANI (@ANI) June 30, 2024
- இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.
- ஜெனரல் உபேந்திர திவேதி ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை, அடுத்த ராணுவ தளபதியாக நியமித்து கடந்த 12-ந்தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ராணுவ துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார். இவர் ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படி கல்வீசி தாக்குதல் நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இதுபோல் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வீச்சில் ஈடுபடுவோர் மீது ராணுவம் வழக்கும் பதிவு செய்யும்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. அதை நாமும் முறியடிக்கிறோம். அதேநேரம் பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தால் வேறு விதமான பதிலடி தரவேண்டியது வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் அது எந்த மாதிரியான நடவடிக்கையாக அமையும் என்பது பற்றி ராணுவ தளபதி நேரடியாக குறிப்பிடவில்லை.
எனினும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து நடத்திய துல்லிய தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கையாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. #ArmyChief #BipinRawat
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார். அப்போது, ரஷியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளது. அதையும் மீறி, இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது.
இந்நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத், தனது 6 நாட்கள் ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இந்தியா திரும்பினார். நேற்று டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ரஷிய பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்திய ராணுவத்துடன் நல்லுறவு வைத்துக்கொள்ள ரஷியா விரும்புகிறது. ஏனென்றால், நமது ராணுவம் வலிமையானது, நமக்கு எது சரியானது என்பதை அறிந்து, அதற்காக உறுதியாக நிற்போம் என்பதை ரஷியா உணர்ந்துள்ளது.
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவது பற்றி ரஷிய கடற்படை அதிகாரி ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், “எங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படக்கூடும் என்பதை அறிவோம். இருப்பினும், நாங்கள் சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறோம்” என்று கூறினேன்.
அமெரிக்காவிடம் இருந்து சில தொழில்நுட்பங்களை பெறுவதற்காக அந்நாட்டுடன் நாங்கள் தொடர்பு வைத்திருந்தாலும், அதுகுறித்து ரஷியா கவலைப்பட வேண்டாம், நாங்கள் சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறோம் என்றும் அவர்களிடம் கூறினேன். எங்கள் நாட்டுக்கு எது நல்லதோ, அதை செய்வோம் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.
ரஷியாவிடம் இருந்து காமோவ் ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் இதர ஆயுத தளவாடங்களை வாங்குவதில் இந்தியா ஆர்வமாக இருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பங்களையும் பெற விரும்புகிறோம்.
இவ்வாறு ராணுவ தளபதி பேசினார்.
இதற்கிடையே, இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தளபதி நம்பியார், மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரபேல் போர் விமானம் மிகவும் திறன் வாய்ந்தது. நான் 2 வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது, அதில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த விமானம், விமானப்படைக்கு திருப்புமுனையாக அமையும். இந்த பகுதிக்கு ரபேல் விமானம் வந்தால், அது நல்ல பாதுகாப்பாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலும், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மனித உரிமை மீறல் நடப்பதாகவும், இதில் ராணுவமும் ஈடுபடுவதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதை நிராகரித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது ஒருதலைப்பட்சமானது எனக்கூறி கண்டனமும் பதிவு செய்தது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராணுவ தளபதி பிபின் ராவத்திடம், ஐ.நா. அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்திய ராணுவத்தின் மனித உரிமை அறிக்கை குறித்து பேசுவதற்கு தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது அனைவருக்கும் நன்கு தெரியும். காஷ்மீர் மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் நன்கு தெரியும்’ என்று கூறினார்.
எனவே ஐ.நா. அறிக்கை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை என்று கூறிய பிபின் ராவத், இத்தகைய சில அறிக்கைகள் தூண்டுதலின் பேரில் தயாரிக்கப்பட்டவை என்றும், இந்திய ராணுவத்தின் மனித உரிமை பேணும் தரவுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை என்றும் தெரிவித்தார். #UNReport #BipinRawat #Tamilnews






