என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு திடீர் பதவி உயர்வு.. என்ன காரணம்?
    X

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு திடீர் பதவி உயர்வு.. என்ன காரணம்?

    • பாகிஸ்தான் அமைதியை நாடினாலும், தங்கள் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது
    • பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அசிம் முனீர் தலைமையிலான இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது.

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் மோதலில் முக்கிய முகமாக விளங்கிய அசிம் முனிர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவுடனான மோதலில் முன்மாதிரியான பங்கிற்காக முனீர் பதவி உயர்வு பெற்றதாக அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனல் பிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. ஃபீல்ட் மார்ஷல் என்பது ராணுவத்தின் உச்சபட்ச பதவியாக கருதப்படுகிறது.

    பாகிஸ்தான் அமைதியை நாடினாலும், தங்கள் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அசிம் முனீர் முன்னர் தெரிவிருந்தார்.

    ராணுவ ஜெனரல் ஆவதற்கு முன்னர், முனீர் நாட்டின் உளவுத்துறை நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI)-க்கு தலைமை தாங்கினார்.

    பிப்ரவரி 2019 இல் புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன.

    நவம்பர் 2022 இல், ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்குப் பதிலாக ஜெனரல் அசிம் முனீர் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.

    அசிம் முனீர் 2022 முதல் பாகிஸ்தானில் 11வது ராணுவத் தளபதியாகப் பணியாற்றி வருகிறார். நவம்பர் 2024 இல், ராணுவத் தளபதியாக அவரது பதவிக்காலம் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அசிம் முனீர் தலைமையிலான இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×