என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முப்படை தலைமை தளபதி"

    • எதிர்காலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் இன்னும் விரைவான, கடுமையான மற்றும் தீவிரமான பதிலடி கொடுக்கும்.
    • பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் முப்படைகளின் தலைவர் பதவியை அந்நாட்டு அரசாங்கம் புதிதாக உருவாக்கியது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்ததால் இந்த பதவியை உருவாக்கியது. அதன்படி முப்படைகளின் தலைவராக ராணுவ தளபதியாக இருந்த பீல்டு மார்ஷ் அசிம் முனீர் நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் முப்படைகளின் தலைவராக பதவியேற்ற பிறகு அசிம் முனீர் இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-

    வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, முப்படைகள் ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் அதன் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவது அவசியம்.

    எதிர்காலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் இன்னும் விரைவான, கடுமையான மற்றும் தீவிரமான பதிலடி கொடுக்கும். இதனால் இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது.

    எந்தவொரு சுய-ஏமாற்றம் அல்லது அனுமானத்திற்கும் இந்தியா பலியாகக்கூடாது. பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு. ஆனால் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை யாரும் சோதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

    • கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
    • ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு

    முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 2026 வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் டிசம்பர் 2021 இல் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு அனில் சவுகான் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

    இந்திய இராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனில் சவுகான் பல உயரிய பதக்கங்களை பெற்றுள்ளார். அவருக்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு.

    இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்படைத் தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராக அனில் சௌஹானின் பதவிக்காலம் 2026 மே 30-ஆம் தேதி வரையில் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சமீபத்திய முடிவு இந்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரிகிறது.
    • இது ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்திற்கான ஒரு முக்கிய படியாகும்.

    நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் மத்திய அரசு முக்கிய சீர்திருத்ததை மேற்கொண்டுள்ளது.

    ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.

    அதன்படி, மூன்று படைகளுக்கும் கூட்டு உத்தரவுகள் மற்றும் வழிமுறைகளை வெளியிடும் அதிகாரம் முப்படைத் தலைமை தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

    முன்னதாக, ஒவ்வொரு படை வாரியாக அறிவுறுத்தல்கள் அல்லது வழிமுறைகளை தனித்தனியாக வெளியிடும் நடைமுறை இருந்தது.

    சமீபத்திய முடிவு இந்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரிகிறது.

    பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளுக்கும் பொதுவான அறிவுறுத்தல்கள் மற்றும் பொதுவான உத்தரவுகளை பிறப்பிக்க முப்படைத் தலைமை தளபதி (அனில் சவுகான்) மற்றும் இராணுவ விவகாரத் துறை செயலாளருக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். இது ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்திற்கான ஒரு முக்கிய படியாகும்" என்று கூறப்பட்டுள்ளது.

    • அனில் சவுகான் 2021-ம் ஆண்டு ராணுவத்தின் கிழக்குப் பகுதியின் கமாண்டராக பணி ஓய்வு பெற்றார்.
    • முப்படை தலைமை தளபதி மட்டுமின்றி இந்திய இராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார்

    புதுடெல்லி:

    முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் புதிய தளபதியை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்திவந்தது.

    இந்த நிலையில், இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் (வயது 61) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரலான அனில் சவுகான், கடந்த 40 ஆண்டுகளாக பல முக்கிய ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

    1961-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி பிறந்த அனில் சவுகான், கடக்வாஸ்லாவில் உள்ள என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். பின்னர் 1981-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கோர்க்கா ரைபிள்ஸ் படைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். இவர் 2021-ம் ஆண்டு ராணுவத்தின் கிழக்குப் பகுதியின் கமாண்டராக பணி ஓய்வு பெற்றார். மேலும் இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநராகவும், ஐ.நா சபை திட்டங்களிலும் பணியாற்றி உள்ளார்.

    ×