என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனில் சவுகான்"

    • கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
    • ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு

    முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 2026 வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் டிசம்பர் 2021 இல் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு அனில் சவுகான் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

    இந்திய இராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனில் சவுகான் பல உயரிய பதக்கங்களை பெற்றுள்ளார். அவருக்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு.

    இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்படைத் தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராக அனில் சௌஹானின் பதவிக்காலம் 2026 மே 30-ஆம் தேதி வரையில் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானின் மறைமுகப் போர் உத்தி இரண்டாவது பெரிய சவால்.
    • வெளிப்புற சக்திகள் தலையிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆறு முக்கிய சவால்கள் உள்ளன என்று முப்படை தலைமை தளபதி (CDS) அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அனில் சவுகான், சீனாவுடனான தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். பாகிஸ்தானின் மறைமுகப் போர் உத்தி இரண்டாவது பெரிய சவால். இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமானவை அல்ல. அதனால்தான் தயார்நிலை அவசியம்.

    மூன்றாவது பெரிய சவால் அண்டை நாடுகளில் உள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மை. இது வெளிப்புற சக்திகள் தலையிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

    நான்காவது சவால் போரின் தன்மையில் முழுமையான மாற்றம். தற்போது போர்கள் விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸ் வரை பரவியுள்ளன.

    பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அணுசக்தித் திறன்கள் ஐந்தாவது சவால். இராணுவ தொழில்நுட்பத்தில் விரைவான மாற்றங்கள் ஆறாவது பெரிய சவால்" என்று தெரிவித்தார்.

    எனவே அவற்றை எதிர்கொள்ள நாடு தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  

    • தவறை சரிசெய்து மீண்டும் முயற்சிக்க முடியும். நீங்கள் பயத்தில் உட்காரக்கூடாது.
    • பாகிஸ்தானைப் பொறுத்தவரை, நான் இரண்டு அனுமானங்களைச் செய்ய முடியும்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சில போர் விமானங்கள் இழந்ததை ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, முப்படைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான் அதுகுறித்து பேசியுள்ளார்.

    சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் 'எதிர்காலப் போர்கள் - போரின் பாணிகள்' என்ற தலைப்பில் ஜெனரல் சவுகான் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

    அப்போது பேசிய அவர், " படைகள் பின்னடைவுகள் அல்லது இழப்புகளால் பாதிக்கப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன். போரில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும், உயர்ந்த மன உறுதியைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம்.

    சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்க முடிவது ஒரு தொழில்முறை ராணுவப் படையின் முக்கிய பண்பு. என்ன தவறு நடந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், தவறை சரிசெய்து மீண்டும் முயற்சிக்க முடியும். நீங்கள் பயத்தில் உட்காரக்கூடாது.

    தற்காலிக இழப்புகள் ராணுவத்தை வலிமையை வெளிப்படுத்துவதில் பாதிக்காது. இதுபோன்ற பின்னடைவுகளை விட இறுதி முடிவு மிக முக்கியமானது. கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணி எத்தனை விக்கெட்டுகளை இழக்கிறது என்பது முக்கியமல்ல, இறுதியில் யார் வென்றார்கள் என்பதுதான் முக்கியம்" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தானைப் பொறுத்தவரை, நான் இரண்டு அனுமானங்களைச் செய்ய முடியும். ஒன்று, அவர்கள் நீண்ட தூரத்திலிருந்து ஏவும் ஆயுதங்களை விரைவாக இழக்கிறார்கள்.

    இது இன்னும் சிறிது காலம் தொடர்ந்தால், அவர்கள் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று உணர்ந்திருக்கலாம், அதனால்தான் அவர்கள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தனர்" என்று தெரிவித்தார்.

    • ஜெனரல் அனில் சவுகான், பிபின் ராவத்தைப் போன்றே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
    • இந்தியாவில் 3 நட்சத்திர அந்தஸ்துடன் ஓய்வு பெற்ற ஒருவர் 4 நட்சத்திர அந்தஸ்து பதவிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் முதல் முறையாக 2020-ம் ஆண்டு சி.டி.எஸ். என்று அழைக்கப்படுகிற முப்படைகளின் தலைமைத்தளபதி பதவி உருவாக்கப்பட்டு, அதில் அமர்த்தப்பட்டவர், பிபின் ராவத். ஆனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.

    அதன்பின்னர் 9 மாதங்கள் ஆன நிலையில் அந்தப் பதவியில் இப்போது அனில் சவுகான் (வயது 61) நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் டெல்லியில் நேற்று முப்படைகளின் தலைமைத்தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அத்துடன் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளர் பொறுப்பையும் இவர் வகிப்பார்.

    முன்னதாக அவர் இந்தியா கேட் வளாகத்தில், நாட்டுக்காக உயிர் நீத்த முப்படை வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.

    முப்படைகளின் தலைமைத்தளபதி பொறுப்பை ஏற்ற பின்னர் ஜெனரல் அனில் சவுகான் கூறுகையில், " நான் இந்திய ஆயுதப்படைகளின் மிக உயரிய பதவியை ஏற்றுக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். முப்படைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்; அனைத்து சவால்களையும் சிரமங்களையும் ஒன்றாகச் சமாளிக்க முயற்சி செய்வேன்" என குறிப்பிட்டார்.

    அவருக்கு ரைசினா ஹில்சில் சவுத் பிளாக் புல்வெளியில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி மற்றும் கடற்படை துணைத்தளபதி எஸ்.என். கோர்மேட் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    ஜெனரல் அனில் சவுகான் முப்படைகளின் தலைமைத்தளபதி பொறுப்பேற்றபோது அவரது துணைவியார் அனுபமா உடனிருந்தார்.

    முப்படை தலைமைத்தளபதி பொறுப்பை ஏற்ற பின்னர் அனில் சவுகான், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

    இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்கள் கூறுகின்றன.

    ஜெனரல் அனில் சவுகான், பிபின் ராவத்தைப் போன்றே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள பவுரி கர்வால் மாவட்டம், குவானாவில் 1961-ம் ஆண்டு, மே 18-ந் தேதி பிறந்தவர் ஆவார்.

    கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியிலும் படித்தவர்.

    1981-ம் ஆண்டு, இந்திய ராணுவத்தின் 11 கூர்க்கா ரைபிள்ஸ் படையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து, கிழக்கு பிராந்திய ராணுவ தளபதியாக பணியாற்றி, 40 ஆண்டு கால சேவைக்குப்பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் 31-ந் தேதி பணி நிறைவு செய்தவர் ஆவார். அதன்பின்னர் அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவல் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

    இவர் சீன விவகாரங்களில் நிபுணராக பார்க்கப்படுகிறார். கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லை பிரச்சினை நீடித்து வருகிற நிலையில், இவரது நியமனம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

    இந்தியாவில் 3 நட்சத்திர அந்தஸ்துடன் ஓய்வு பெற்ற ஒருவர் 4 நட்சத்திர அந்தஸ்து பதவிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனில் சவுகான் 2021-ம் ஆண்டு ராணுவத்தின் கிழக்குப் பகுதியின் கமாண்டராக பணி ஓய்வு பெற்றார்.
    • முப்படை தலைமை தளபதி மட்டுமின்றி இந்திய இராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார்

    புதுடெல்லி:

    முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் புதிய தளபதியை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்திவந்தது.

    இந்த நிலையில், இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் (வயது 61) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரலான அனில் சவுகான், கடந்த 40 ஆண்டுகளாக பல முக்கிய ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

    1961-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி பிறந்த அனில் சவுகான், கடக்வாஸ்லாவில் உள்ள என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். பின்னர் 1981-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கோர்க்கா ரைபிள்ஸ் படைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். இவர் 2021-ம் ஆண்டு ராணுவத்தின் கிழக்குப் பகுதியின் கமாண்டராக பணி ஓய்வு பெற்றார். மேலும் இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநராகவும், ஐ.நா சபை திட்டங்களிலும் பணியாற்றி உள்ளார்.

    ×