என் மலர்
நீங்கள் தேடியது "போர் விமானங்கள்"
- இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.
- இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் LCA (Tejas Light Combat Aircraft ) Mark 1A போர் விமானங்களை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.62,000 கோடி மதிப்பீட்டில் 97 விமானங்களை வாங்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் இந்த விமானங்களை தயாரிக்கிறது.
முன்னதாக ஏற்கனவே ரூ. 48,000 கோடி மதிப்பீட்டில் 83, LCA Mark 1A போர் விமானங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஆர்டர், இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.
இந்த புதிய LCA Mark 1A போர் விமானங்கள் மேம்பட்ட ரேடார் மற்றும் மின்னணு அமைப்புகளைக் கொண்டிருக்கும். இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.
- ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது.
- இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 9 ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு விமானம், AWACS (Airborne Warning and Control System) என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய ராணுவம் வசம் உள்ள ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது என்று அவர் தெரிவித்தார்.
மே 7 தாக்குதலின் போது பயங்கரவாத இலக்குகள் சேதமடைவதன் முன்னாள் இருந்த நிலை மற்றும் அதன் பின்னால் சேதமடைந்த நிலை ஆகியவற்றின் செயற்கைக்கோள் படங்களையும் அவர் திரையிட்டு விளக்கினார்.
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு கூறுகிறது.
இதன்போது இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.
- நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது
மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற ஷாங்க்ரி-லா மாநாட்டில் பங்கேற்ற இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.
பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததா என்றும், 3 ரஃபேல் உட்பட ஆறு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது குறித்தும் அவரிடம் செய்தித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசுகையில், மே 7 ஆரம்ப கட்ட தாக்குதல்களில் அவற்றை இழந்தோம், ஆனால் எத்தனை போர் விமானங்கள் இழந்தோம் என்பது முக்கியமல்ல, அவற்றை ஏன் இழந்தோம் என்பதுதான் முக்கியம்.
அவை ஏன் சரிந்தன, என்ன தவறுகள் செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம். நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் சரிசெய்தோம், இரண்டு நாட்களுக்குப் பிறகு எங்கள் அனைத்து விமானங்களும் மீண்டும் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கின" என்று அனில் சவுகான் கூறினார்.
இருப்பினும் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர் மறுத்தார்.
மே 7 அன்று பாகிஸ்தானுடனான மோதல்களில் இந்திய போர் விமானங்களின் நிலை குறித்து இந்திய அரசாங்கமோ அல்லது இராணுவ அதிகாரியோ வெளிப்படையாக பேசியது இதுவே முதல் முறை.
- இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் முதல் முப்பது J-35A ஜெட் விமானங்களைப் பெற உள்ளது.
- ரஃபேல் போர் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து, சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் முதல் முப்பது J-35A ஜெட் விமானங்களைப் பெற உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா தனது போர் விமானங்களை 50% தள்ளுபடியை வழங்கியுள்ளதுடன், எளிதாக கட்டணம் செலுத்தும் ஆப்ஷன்களையும் வழங்கியுள்ளது என கூறப்படுகிறது.
முன்னதாக மோதலில் இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப்பை பயன்படுத்தி தாக்கியது.
- போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
முப்படைகள் இணைந்து நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வான்படை சார்பில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கிடையே பாகிஸ்தான் கூற்றுப்படி, அந்நாட்டு ராணுவம், 3 ரஃபேல் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் தாக்கி அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தி, சண்டையில் இழப்புகள் சகஜம் என்று பொத்தாம்பொதுவாக பதில் கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதலில் இறங்கியது. தொடர்ந்து சர்வதேச தலையீட்டின் பின் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என்று கூறப்படுவதன் காரணமாக அவ்விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாள், மே 8 அன்று, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் பங்குகள் 1.75 சதவீதம் உயர்ந்தன.
ஆனால் அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் ரஃபேலை வீழ்த்தியதாக கூறப்படுவதன் காரணமாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. குறிப்பாக திங்களன்று(மே 12 அன்று) , இந்த நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிவைக் கண்டன. அன்றைய தினம் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் சுமார் 292 யூரோக்களாக இருந்தது. நாள் முழுவதும் அது 291 யூரோக்களுக்கும் 295 யூரோக்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.
ஒருபுறம், ரஃபேல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட அதே நேரத்தில், J-10 போர் விமானங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.

திங்களன்று (மே 12 அன்று) CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இந்த J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது. இந்த J-10 மூலமே 3 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்படுகிறது.
- இந்தியா நடத்தப்போகும் தாக்குதலுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22-ந்தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
சுற்றுலா பயணிகளை பிணைக் கைதிகள் போல பிடித்துக் கொண்டு அவர்களது மாநிலம், மதம் ஆகியவற்றை கேட்டறிந்து மிக கொடூரமாக 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
பஹல்காமில் நடந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த தகவல்கள் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை அதிரடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அடுத்தக்கட்டமாக கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்துநதி நீரை நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் செயல்பாடுகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி தூதரக அளவிலும் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இவற்றின் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா குறி வைத்துள்ளது.
அப்போது நடத்தப்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். இதனால் பாகிஸ்தான் தரப்பில் கடும் பதட்டமும், பீதியும் நிலவுகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ் நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி, கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப் படை தலைமை தளபதி அமர் பிரீத்சிங் ஆகியோர் பங்கேற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பஹல்காம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே முடிவுகளை எடுக்கலாம். நம் நாட்டு பாதுகாப்பு படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பஹல்காம் தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் இந்தியா கடுமையான பதிலடி தர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று இரவே இந்திய போர் விமானங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
எந்த எதிர்ப்பு எந்த திசையில் இருந்து வந்தாலும் அவற்றை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடமண்டலத்தில் இந்திய போர் விமானங்கள் இன்று காலை முழு வீச்சில் தயார்ப்படுத்தப்பட்டன.
இன்று பிரதமர் மோடி 4-வது முறையாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மத்திய மந்திரி சபை கூட்டம், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு கூட்டம் மற்றும் அரசியல் விவகார அமைச்சரவை குழு கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடந்தன.
இந்த கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி விரிவான விவாதம் நடத்தி உள்ளார். இதில் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக இறுதிக்கட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வந்து உள்ளது.
மத்திய அமைச்சரவையின் கூட்டத்தை தொடர்ந்து இன்று இரவு எந்த நேரத்திலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா தரப்பில் தீவிரவாதிகள் மீது பலமுனை தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியா நடத்தப்போகும் தாக்குதலுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. என்றாலும் இந்தியாவின் தாக்குதல் மிக கடுமையாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் அருகே நெருங்கி வருவதால் பாகிஸ்தான் மந்திரிகள் அலற தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவஜா சமீபத்தில் பேசுகையில், "இந்தியா தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய போர் வெடிக்கும்" என்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் செய்தித் துறை மந்திரி அதுல்லா சமூக வலைதளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியா அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானை தாக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காக அவர்கள் தயாராகி விட்டதை உணர முடிகிறது. இந்த போரால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இந்தியாதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
தீவிரவாதத்தை நாங்கள் தூண்டி விடவில்லை. உண்மையில் தீவிரவாதத்தால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். எங்கள் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு பாகிஸ்தான் மந்திரி அதுல்லா சமூக வலைதளத்தில் புலம்பி உள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய பதட்டம் நீடித்து வருகிறது.
- புதிதாக தளவாடங்கள் வாங்க 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதியை பாதுகாப்புத்துறை ஒதுக்கியது.
- இதில் ராடார், பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்திய கடற்படைக்கு மேலும் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசு மற்றும் விமானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்திற்கு ரபேல்-எம் ரக போர் விமானங்கள் தேவைப்படுகிறது. இதற்காக 26 போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் மத்திய அமைச்சகத்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் புதிதாக தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.70 ஆயிரம் கோடி செலவில் 7 போர்க்கப்பல்கள் கட்டுவதற்காக ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த கப்பல்கள் ஒவ்வொன்றும் 8 ஆயிரம் டன் எடை கொண்டவை ஆகும். மேலும் தாக்கும் திறனும் அதிகமாக இருக்கும்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றிருந்தபோது பென்டகனில் ஜெனரல் அணுமின் உற்பத்தியாளர் அவருக்கு பிரிடேட்டர் ட்ரோன்களை பற்றி விளக்கக் காட்சியை வழங்கினார். இதன்பின் இந்த பிரிடேட்டர் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் கையெழுத்தாகிவிடும் என தெரிகிறது.
அதேபோல் ரபேல்-எம் போர் விமானங்களைக் வாங்குவதால் வரும் மூன்று மாதங்களில் இந்திய ஆயுதப் படைகளின் திறன், குறிப்பாக இந்தியக் கடற்படைக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும். மேலும் 3 கூடுதல் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதி அளிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
- தென் கொரியாவின் வான் எல்லைக்குள் 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் வட்டமடித்தன.
- இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.
தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.
முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.
சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
- எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தின.
- விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
புளோரிடாவில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோ ரிசார்ட்டுக்கு மேலே மூன்று பயணிகள் விமானங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது, இதனால் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு துறையின் எஃப்-16 ரக போர் விமானங்கள் சோதனை பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது குறித்து டெய்லி மெயில் வெளியிட்டுள்ள தகவல்களில், எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தி, மூன்று பயணிகள் விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன. இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த மூன்று விமானங்களும் பாம் பீச் வான்வெளியில் ஏன் பறந்தன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
பாம் பீச் போஸ்ட் எனும் உள்ளூர் வலைதளம் வெளியிட்டுள்ள தகவல்களில், மார்-எ-லாகோவிற்கு டிரம்ப் வந்திருந்த போது அந்த இடத்தின் மீது மூன்று முறை வான்வெளி விதிமீறல்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரண்டு முறையும், பிப்ரவரி 17-ம் தேதி ஒருமுறையும் விதிமீறல்கள் நடந்துள்ளன.
வான்வெளி விதிமீறல்களுக்கு எஃப்-16 போர் விமானங்கள் பதிலளித்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரி 18-ம் தேதி பாம் பீச்சிற்குள் மற்றொரு பயணிகள் விமானம் பறந்ததாகவும் கூறப்படுகிறது. போர் விமானங்கள் "பாதுகாப்புக்கு உட்பட்டு பயன்படுத்தப்படும். இவை விரைவாக, தரையில் உள்ள மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது."
எஃப்-16 ரக போர் விமானங்கள் விமானத்தை வான்வெளியில் இருந்து வெளியேற்றிய பிறகு டிரம்ப் தனது ரிசார்ட்டை சென்றடைந்தார்.






