போர் பதற்றம்.. தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீன, ரஷிய இராணுவ விமானங்கள்

தென் கொரியாவின் வான் எல்லைக்குள் 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் வட்டமடித்தன.இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.
போர் பதற்றம்.. தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீன, ரஷிய இராணுவ விமானங்கள்
Published on

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.

முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.

சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com