search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defence ministry"

    • ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ளது.
    • இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன.

    புதுடெல்லி:

    ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து உள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன.

    இந்நிலையில், குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் அக்னி 1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், அக்னி-1 என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையின் வெற்றிகரமான பயிற்சி ஏவுதல் வியாழக்கிழமை ஒடிசாவின் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இருந்து மூலோபாயப் படைகளின் கட்டளையால் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஏவுகணை ஒரு நிரூபிக்கப்பட்ட அமைப்பு. மிக உயர்ந்த துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. பயனர் பயிற்சி ஏவுகணையின் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

    • இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
    • இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும்

    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ஆயுதங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், இந்த கொள்முதல் திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.

    இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதாவது, ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பில் 60 ஹெலிகாப்டர்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர, இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், இந்திய ராணுவத்திற்கு 307 ஏடிஏஜிஎஸ் ஹோவிட்சர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு 9 ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாங்கப்படும்.

    • இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடை விட கூடுதலாக இருக்கும்.
    • பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தம் செய்யப்படும்.

    அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் 4 வருடங்கள் மட்டும் பணி வழங்கப்படுவதற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு, பணி நிறைவுக்கு பிறகு அவர்களின் தகுதிக்கு ஏற்ப, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கடலோர காவல்படை உள்பட 16 பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் டெல்லியில் இன்று ஆலாசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான முன்மொழிதலுக்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடை விட கூடுதலாக இருக்கும் என்று தமது டுவிட்டர் பதிவில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பான ஆட்சேர்ப்பு விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குரிய ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்ய அறிவுறுத்தப்படும் என்றும், தேவையான வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்களில் 25 சதவீதம் பேர் பணி நிறைவுக்கு பின்னர் ராணுவத்தில் வழக்கமான சேவைக்காக நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதிநவீன அஸ்திரா ஏவுகணை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஒ) மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிப்பது அதிநவீன அஸ்திரா ஏவுகணை.

    இந்நிலையில், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு ரூ. 2,971 கோடி செலவில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2,971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவை ஏற்று, பாதுகாப்பு துறை செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார். #SrilankaBlast #ColomboBlast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில்  359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 



    இதற்கிடையே, பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி பாதுகாப்பு செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில், இலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த ஹேமசிரி பெர்னாண்டோ தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்தார். #SrilankaBlast #ColomboBlast
    இந்திய கடற்படைக்காக தேவைப்படும் நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பாதுகாப்புத்துறை கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #DefenceMinistry
    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக தேவைப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. #DefenceMinistry
    இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #Women #MilitaryPolice
    புதுடெல்லி:

    பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிர்மலா சீதாராமன். இந்திய ராணுவத்தில் பெண்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில், இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவத் துறையில் உள்ள போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். அதன்படி மொத்தம் உள்ள காலியிடங்களில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #Women #MilitaryPolice
    பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற ராணுவ கொள்முதல் குழு கூட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு போர் ஆயுதங்களை வாங்க இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. #DefenceMinistry #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் போர் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்காக ராணுவ கொள்முதல் குழு கூட்டம் இன்று பாதுகாப்பு துறை சார்பில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.



    இந்த கூட்டத்தில், இந்திய கப்பற்படையில் உள்ள 2 கப்பல்களுக்காக பிரமோஸ் ஏவுகணைகள் வாங்குவது மற்றும் இந்திய ராணுவத்தின் அர்ஜுன் பீரங்கிக்கான மீட்பு வாகனங்களை வாங்குவது உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட போர் ஆயுதங்கள் சுமார் ரூ.3,000 கோடி மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
    #DefenceMinistry #NirmalaSitharaman
    பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் - டசால்ட் நிறுவனம் செய்துகொண்ட ஏற்பாடுகளுக்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பு இல்லை என ராணுவ அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. #Hollande #RafaleDeal #DefenceMinistry
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்தத்தால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் டசால்ட் விமான தயாரிப்பு நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் முற்றிலுமாக அவ்விறு நிறுவனங்களுக்கும் இடையிலான விவகாரம் என்றும், இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை எந்த வகையிலும் இந்திய அரசு தேர்ந்தெடுத்து டசால்ட் நிறுவனத்திடம் முன்மொழியவில்லை, இதில் அரசுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பத்திரிகை பேட்டியை வைத்து தேவையில்லாத சர்ச்சைகள் எழுப்பப்படுவதாகவும் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hollande #RafaleDeal #DefenceMinistry
    பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி வேறு இடத்துக்கு மாற்றப்படாது என பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது. #Bengaluru #AeroIndia
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆண்டு தோறும் விமான கண்காட்சி நடப்பது வழக்கம். கடந்த 1996-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கண்காட்சியை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    விமான கண்காட்சி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதும், கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு பெங்களூருவில் நடைபெறும் உலக புகழ்பெற்ற விமான கண்காட்சியை உத்தரப்பிரதேசத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டினார். விமான கண்காட்சியை மாற்றக் கூடாது என பிரதமர் மோடிக்கி கடிதம் எழுதியிருந்தார்.



    இந்நிலையில், பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி வேறு இடத்துக்கு மாற்றப்படாது என பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவில் நடைபெற்று வந்த விமான கண்காட்சி வேறிடத்துக்கு மாற்றப்படாது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறவுள்ளது. என குறிப்பிட்டுள்ளது. #Bengaluru #AeroIndia
    ×