என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ அமைச்சகம்"

    • ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் எடுத்த 2-வது பெரிய முடிவு இது.

    புதுடெல்லி:

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், முப்படைகளின் போர்த்திறனை அதிகரிப்பதற்காக ரூ.79,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் எடுத்த 2-வது பெரிய முடிவு இதுவாகும்.

    கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதில் இந்திய கடற்படைக்காக போர்க்கப்பல்கள், 30 எம்எம் ரக கடற்படை பீரங்கிகள், அதிநவீன இலகுரக நீர்மூழ்கி குண்டுகள் உள்ளிட்டவை அடங்கும்.

    போர்க்கப்பல்கள், கனரக சாதனங்களையும், தரைப்படை வீரர்களையும் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும். இலகுரக நீர்மூழ்கி குண்டுகள், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்க பயன்படும்.

    இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக, நாக் ஏவுகணை அமைப்பு, எம்கே-2 ரக ஏவுகணைகள், எலக்ட்ரானிக் உளவு அமைப்பு உள்ளிட்டவை வாங்கப்படுகின்றன. எதிரிகளின் போர் வாகனங்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை தகர்க்க எம்கே-2 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.

    கர்நாடக மந்திரி சா.ரா.மகேஷ் தனிப்பட்ட முறையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பற்றி கூறிய கருத்து மாநிலங்களவையின் கண்ணியத்தை குறைப்பதாகும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. #NirmalaSitharaman #SARAMahesh
    புதுடெல்லி:

    கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், பின்னர் மடிகேரி நகரில் மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேஷ், கலெக்டர் ஸ்ரீவித்யா மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனையும் நடத்தினார். இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் உள்ளூர் பா.ஜனதா பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



    அப்போது மந்திரி சா.ரா.மகேஷ் குறுக்கிட்டு “இந்த கூட்டத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய பேச்சை முடியுங்கள்” என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ராணுவ மந்திரி கோபம் அடைந்து எனக்கு பாடம் சொல்லித் தரவேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. மந்திரி சா.ரா.மகேஷ், இது தொடர்பாக ராணுவ மந்திரியை குற்றம்சாட்டி ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தார்.

    இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மாவட்ட நிர்வாகம் வகுத்துத்தந்த நிகழ்ச்சி நிரலின்படிதான் ராணுவ மந்திரி அந்த கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் சா.ரா.மகேஷ், தனிப்பட்ட முறையில் ராணுவ மந்திரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது மாநிலங்களவையின் கண்ணியத்தை குறைப்பதாகும். மேலும் இந்திய ஆட்சி அமைப்பு முறை பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. மாநில மந்திரியின் இந்த செயல் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறப்பட்டு உள்ளது. #NirmalaSitharaman #SARAMahesh
    ×