search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Minister"

    • அவருக்கு சில இருதய பிரச்சினைகள் இருந்தன.
    • இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசில், உணவு வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி (வயது 61). நேற்றிரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தமது வீட்டின் கழிவறையில் உமேஷ், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே உமேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல், சுகாதார அமைச்சர் கே சுதாகர் மற்றும் பல பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.   


    உமேஷ் கட்டியின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன், அவர் எனக்கு சகோதரராக இருந்தார்.  அவருக்கு சில இருதய பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாகேவாடியில் அரசு மரியாதையுடன் உமேஷ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும், பெலகாவி மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமைச்சர் உமேஷ் மறைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    பெலகாவி மாவட்டத்தில் உள்ள பாகேவாடியில் பிறந்த உமேஷ் கட்டி, ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஜே.எச்.படேல், பி.எஸ். எடியூரப்பா, டி.வி.சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷட்டர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக அவர் பணியாற்றியுள்ளார். 

    பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார். #Sasikala #VIPtreatment
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, 2017-ம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்தபோது சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் கூறினார். மேலும் இதற்காக அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதுகுறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு விசாரணை நடத்தி மாநில அரசிடம் அறிக்கை வழங்கியது. அதில், டி.ஐ.ஜி. ரூபா கூறிய அனைத்து புகார்களும் உண்மை என்றும், சசிகலாவுக்கு 5 அறைகளும், சமையல் கூடமும் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும் சிறையை விட்டு சசிகலா வெளியில் சென்றது உண்மை தான் என்றும், இந்த விஷயத்தில் சிறை அதிகாரிகள் சட்டத்தை மீறி தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இதுகுறித்து கருத்து தெரிவித்த ரூபா, “தான் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்றார்.

    இது குறித்து கர்நாடக மாநில போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “பரப்பன அக்ரஹாரா சிறையில் எழுந்த புகார் குறித்து விசாரணை குழு அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை கவனித்தேன். ஊடகங்களிலும் இதுபற்றி வெளியானதை பார்த்தேன். சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #Sasikala #VIPtreatment
    மேகதாது அணை தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் என்று கர்நாடக மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார். #MekedatuDam #DKShivakumar

    சென்னை:

    மேகதாது அணை பிரச்சினை பற்றி “தந்தி டி.வி.” சார்பில் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி சிவக்குமாருடன் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது.

    அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கர்நாடகாவிற்கு மேகதாது அணை ஏன் தேவை?

    பதில்:- இது கர்நாடகாவுக்கு அல்ல. காவேரி இந்த நாட்டின் நதி. இந்த வருடம், கொடுக்க வேண்டிய 177 டி.எம்.சியை தாண்டி, கிட்டத்தட்ட 450 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளது. நாங்களும் பயன்படுத்த முடியவில்லை, தமிழ்நாடும் பயன்படுத்த முடியவில்லை. வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு தான் அதிகம் உதவும். தமிழக விவசாயிகளை பாதுகாக்கவும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவும் தான் இந்த அணை கட்டப்படுகிறது.

    கேள்வி:- தற்போது கபினி, ஹாரங்கி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் காவிரி ஆணைய கட்டுப்பாட்டில் வருகிறது. நீங்கள் கட்டும் புதிய அணையும் அதன் கட்டுப்பாட்டில் வருமா?

    பதில்:- ஆம், நிச்சயமாக. அது அவர்கள் கடமை.

     


     

    கேள்வி:- கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டப்படும் போதெல்லாம், தமிழக விவசாயிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. விவசாயம் செய்யப்படும் பகுதிகளின் பரப்பளவு குறைந்து விடும் என்ற கவலை எழுகிறது. இப்போது மறுபடியும் ஒரு புதிய அணை பற்றி நீங்கள் பேசும்போது, இந்த அச்சம் மீண்டும் ஏற்படுகிறது.

    பதில்:- இல்லை. இதை பற்றி கவலை தேவையில்லை. தமிழகத்திற்கு இந்த அணை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த அணை தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும்.

    கேள்வி:- மேகதாது திட்ட வரைவு நகலில், பெங்களூர் நகருக்கு 5 டி.எம்.சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 டி.எம்.சி எடுத்து கொண்டிருக்கும்போது,  இந்த 5 டி.எம்.சி கூடுதலாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதா?

    பதில்:- இல்லை அப்படி எடுக்க முடியாது. ஏற்கனவே என்ன ஒதுக்கப்பட்டுள்ளதோ அதைதான் எடுக்க முடியும்.

    கேள்வி:- அப்போது இந்த 5 டி.எம்.சி என்பது ஒதுக்கப்பட்ட 14 டி.எம்.சி நீரின் ஒரு பகுதி தானே ?

    பதில்:- ஆம், இது அனுமதிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி தான்.

    கேள்வி:- உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுங்கள் என்று சொன்னபோதெல்லாம் அதை கேட்க கூடாது என்று தீர்மானம் போட்டீர்கள்... இப்போது உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று சொல்வது முரணாக இல்லையா?

    பதில்:- ஆதரவு இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நினைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #DKShivakumar

    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என அம்மாநில அமைச்சருக்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். #MekedatuIssue #CVShanmugam
    சென்னை:

    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி இதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. தற்போது மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மேகதாது விவகாரம் தொடர்பாக பேசி தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை.



    இந்நிலையில், கர்நாடக அமைச்சரின் கடிதத்திற்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறி உள்ளதால் கர்நாடகாவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என கூறியுள்ளார்.

    “தமிழக அரசின் ஒப்புதல் இன்றி காவிரிபடுகையில் கர்நாடக அரசு எந்த அணையையும் கட்டக்கூடாது. ஆனால், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகம் மீறி உள்ளது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதப்படுத்தவே கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும்” என சி.வி.சண்முகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #MekedatuIssue #CVShanmugam
    மேகதாது விவகாரத்தை பேசி தீர்க்க கர்நாடக அரசு விரும்புவதாக கூறி தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். #MekedatuDam #KarnatakaMinister #EdappadiPalaniswami
    பெங்களூரு:

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.



    இதற்கிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்துவருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டம் தொடங்கியதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்றை கொண்டுவர இருக்கிறார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்வு காண விரும்புவதாக கூறியுள்ளார்.

    ‘மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசும் தமிழக மக்களும் நினைப்பது வேறு, ஆனால் உண்மை நிலை வேறு. மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம். சுமுகமாக பேசி தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புகிறது’ என்று அமைச்சர் சிவக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #MekedatuDam #KarnatakaMinister #EdappadiPalaniswami
    மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு நடத்த இருக்கும் கர்நாடக அமைச்சரின் முயற்சியை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GKVasan #MekedatuDam
    சென்னை:

    த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு நடத்த இருக்கும் கர்நாடக அமைச்சரின் முயற்சியை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக் கூடிய அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.

    கர்நாடக மந்திரி தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (7-ந்தேதி) மேகதாது அணை குறித்து ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி அவர் அறிவித்திருப்பதற்கு காரணம் மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதி தான்.

    கர்நாடக அரசு ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான வரைவு அறிக்கையை தாயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் அளித்த போதே மத்திய அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    ஆனால் மத்திய அரசு அரசியல் காரணத்திற்காக கர்நாடகத்தில் மேகதாது அணை விவகாரத்தில் நேரடியாகவே ஆதரவு அளித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    ஆய்வு நடத்த இருப்பதாக கூறியிருக்கின்ற கர்நாடக அமைச்சரின் முயற்சியை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு அனைத்து முயற்சிகளிலும் உடனடியாக ஈடுபட வேண்டும்.

    மத்திய அரசும் கர்நாடக அரசிடம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கோட்பாடுகளையும், அதிகாரத்தையும் குறிப்பிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும்.

    இல்லையென்றால் மத்திய அரசின் தமிழக விரோதப் போக்குக்கு தக்க பாடத்தை வரும் காலங்களில் தமிழக மக்கள் புகட்டுவார்கள். மாநிலங்களுக்கு இடையே நல்லுறவும், நியாயமும் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ஜனநாயகத்தில் மத்திய அரசுக்கு உள்ள பொறுப்பு, கடமை, மக்கள் நலன், மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமை, நாட்டு நலன் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TamilMaanilacongress #GKVasan #MekedatuDam
    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச தயாராக இருப்பதாக கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister
    பெங்களூர்:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் மேலும் ஒரு பிரமாண்ட அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ரூ.5912 கோடியில் மேகதாது அணையை கட்டி முடிப்பதற்கு வரைவுத் திட்டம் ஒன்றை கர்நாடகா அரசு தயாரித்துள்ளது.

    மேகதாது என்ற இடம் ஒகேனக்கல்லுக்கு முன்பாக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அது அடர்ந்த காட்டுப் பகுதியாகும். அங்கு இயற்கையாக இரு பக்கங்களிலும் அமைந்துள்ள பிரமாண்ட மலைகளுக்கு மத்தியில் காவிரி ஆறு பொங்கி வருகிறது.

    அந்த இரு பக்க மலையும் சுமார் 1000 அடி உயரம் கொண்டது. ஒற்றைக்கல் என்று அழைக்கப்படும் அந்த மலைகளுக்கு இடையேதான் புதிய அணையை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டு விட்டால், தமிழ்நாட்டுக்குள் காவிரி தண்ணீர் சுத்தமாக வராது.

    இத்தகைய அபாயத்தை உணர்ந்து தமிழக மக்கள் மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் வரைவுத் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 22-ந்தேதி திடீரென ஒப்புதல் வழங்கியது. மின்சாரம் தயாரிக்கவே இந்த அணையை கட்டுவதாக கூறி கர்நாடகா அரசு ஒப்புதலை பெற்றுள்ளது.

    இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் வரும் 4-ந்தேதி திருச்சியில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

    இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது. மனு மீதான விசாரணை முடியும் வரை மேகதாது அணை தொடர்பான எந்த அடுத்தக்கட்ட பணிகளையும் கர்நாடகா அரசு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி உள்ளது.

    தமிழக அரசின் நடவடிக்கையால் கர்நாடகா அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழக அரசை சமரசம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் உதவியை நாடவும் கர்நாடக அரசு திட்டமிட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகா-தமிழ்நாடு சுமூக தீர்வு ஏற்பட மத்திய அரசு உதவ வேண்டும். இரு மாநில அரசுகளும் இது தொடர்பாக பேச மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசுடன் பேச கர்நாடகா தயாராக இருக்கிறது.

    மேகதாது அணை பற்றிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும். அந்த அறிக்கையை தமிழகத்திடம் கொடுக்க விரும்புகிறோம். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை பற்றி தமிழக அரசிடம் பேச உள்ளோம். இதற்காக தமிழக அரசிடம் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    மத்திய அரசு நீர்வளத் துறை மந்திரியும் இத்தகைய ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உதவ வேண்டும்.



    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசும், தமிழக அரசும் மோதிக்கொள்ள தேவையில்லை என்று நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வந்ததும் தமிழக அரசு அதை பார்வையிடலாம்.

    இந்த திட்டத்தால் கர்நாடக அரசுக்கு பெரிய அளவில் எந்த லாபமும் இல்லை. தமிழக அரசுக்குதான் உண்மையில் லாபமாக இருக்கும்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக பருவ மழை பெய்யும்போது ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் கடலில்தான் வீணாக சென்று கலக்கிறது. அத்தகைய தண்ணீரை இந்த அணையில் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.

    இவ்வாறு கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister


    வருமான வரி ஏய்ப்பு செய்ததோடு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது. #KarnatakaMinister #DKShivakumar
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது டி.கே.சிவக்குமாருக்கு அவருடைய தொழில் பங்குதாரர் சச்சின் நாராயண், நண்பரும்-டிராவல்ஸ் நிறுவன அதிபருமான எஸ்.கே.சர்மா, டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் பணியாற்றி வரும் ஊழியர் அனுமந்தய்யா, கர்நாடக பவன் பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.

    இது சம்பந்தமாக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வரி ஏய்ப்பு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்துக்கு டி.கே.சிவக்குமாருக்கு, சச்சின் நாராயண், எஸ்.கே.சர்மா உதவி செய்துள்ளனர். டி.கே.சிவக்குமார், எஸ்.கே.சர்மா ஆகியோரின் அசையா சொத்துகளை ராஜேந்திரன் நிர்வகித்து வருகிறார். அனுமந்தய்யா ‘ஹவாலா’ முறையில் மாற்றும் பணத்தை டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாத்து வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டவர்கள் மீது நேற்று அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு அனுப்ப வாய்ப்புள்ளது. மேலும் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. #KarnatakaMinister #DKShivakumar
    ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசில் பிளவு ஏற்படாது என்று கர்நாடக மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Congress #JDS #DKShivakumar

    பெங்களூரு:

    கர்நாடக நீர்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் அரசியல் சாசத்துக்குட்பட்டு ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் ஆட்சியை பிடிக்க முடியாத பாரதிய ஜனதா கட்சியினர் இந்த ஆட்சியை கவிழ்க்க தேவையான நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    எங்கள் கூட்டணி ஆட்சி இரும்புக்குடமாகும். இது எங்கிருந்து விழுந்தாலும் உடையாது. ஆனால் பாரதிய ஜனதாவினர் எங்கள் ஆட்சியையும், கூட்டணியையும் மண் குடம் என்று கருதி வருகின்றனர்.

    கர்நாடக சட்டப் பேரவையில் பாரதிய ஜனதா பலம் 104 ஆக உள்ளது. அவர்கள் அறுதி பெரும்பான்மை பெற வேண்டும் என்றால், அவர்களின் பலத்தை 113 ஆக உயர்த்த வேண்டும். இதற்கான முன்பு போல ‘ஆபரேசன் கமலா’ திட்டத்தை பின்பற்ற பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த முறை ஆபரேசன் கமலா திட்டத்தை அவர்கள் பின்பற்றிய போது நாங்கள் அலட்சியமாக இருந்து விட்டோம். அப்போது பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் பாரதிய ஜனதா கட்சியினர் பின்னர் கைவிட்ட கதையை நாடு அறியும்.

    தற்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அதிகம் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஜே.டி.எஸ். கட்சியினர் எம்.எல்.ஏ.க்களை இழுப்பது என்பது முடியாத காரியம். எனவே ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணியிலும் பிளவு ஏற்படாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி ஆட்சி நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக மந்திரி சா.ரா.மகேஷ் தனிப்பட்ட முறையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பற்றி கூறிய கருத்து மாநிலங்களவையின் கண்ணியத்தை குறைப்பதாகும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. #NirmalaSitharaman #SARAMahesh
    புதுடெல்லி:

    கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், பின்னர் மடிகேரி நகரில் மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேஷ், கலெக்டர் ஸ்ரீவித்யா மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனையும் நடத்தினார். இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் உள்ளூர் பா.ஜனதா பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



    அப்போது மந்திரி சா.ரா.மகேஷ் குறுக்கிட்டு “இந்த கூட்டத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய பேச்சை முடியுங்கள்” என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ராணுவ மந்திரி கோபம் அடைந்து எனக்கு பாடம் சொல்லித் தரவேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. மந்திரி சா.ரா.மகேஷ், இது தொடர்பாக ராணுவ மந்திரியை குற்றம்சாட்டி ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தார்.

    இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மாவட்ட நிர்வாகம் வகுத்துத்தந்த நிகழ்ச்சி நிரலின்படிதான் ராணுவ மந்திரி அந்த கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் சா.ரா.மகேஷ், தனிப்பட்ட முறையில் ராணுவ மந்திரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது மாநிலங்களவையின் கண்ணியத்தை குறைப்பதாகும். மேலும் இந்திய ஆட்சி அமைப்பு முறை பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. மாநில மந்திரியின் இந்த செயல் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறப்பட்டு உள்ளது. #NirmalaSitharaman #SARAMahesh
    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மந்திரி சிவக்குமார், ஹவாலா நெட்வொர்க் நடத்துவதாக பெங்களூரு பொருளாதார குற்ற சிறப்பு நீதிமன்றத்தில் வருமானவரித்துறை புகார் அளித்துள்ளது. #ITDepartment #KarnatakaMinister #DKShivakumar #hawalanetwork

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கர்நாடக மாநில நீர்வளத்துறை மற்றும் மருத்துவத்துறை மந்திரியாக உள்ளார். 

    இந்நிலையில், மந்திரி சிவக்குமார் ஹவாலா நெட்வொர்க் நடத்துவதாக பெங்களூரு பொருளாதார குற்ற சிறப்பு நீதிமன்றத்தில் வருமானவரித்துறை புகார் அளித்துள்ளது.

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு உடையவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது இவரது சொத்து மதிப்பு சுமார் 251 கோடி ரூபாய் ஆகும். #ITDepartment #KarnatakaMinister #DKShivakumar #hawalanetwork
    ×