search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mekedatu"

    • யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை.
    • மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

    பெங்களூர்:

    கர்நாடக காங்கிரஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது:-

    காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டமிட்டுள்ளோம். யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை. மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பிரியங்க் கார்கேவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்தித்த நிலையில் கர்நாடக மந்திரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    • மேகதாது அணை பிரச்சனைக்காக 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன்.
    • கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் வந்து சேராமல் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக ஆக்கப்படும்.

    மதுரை:

    மதுரை செக்கானூரணியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரெயில்வே துறை வரலாற்றிலேயே மிக கொடூரமான, கோரமான விபத்து ஒடிசாவில் ஏற்பட்டது. இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது சதி வேலையா? என்பது பிரச்சனைக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    அப்படி சதி வேலையாக இருக்குமானால் அதை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள், 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே ரெயில் பயணம் என்பதே ஆபத்தை உண்டாக்கும் என்கிற பயத்தை உண்டாக்கி இருக்கிறது.

    இந்த சூழலில் இதை தீவிரமாக ஆய்வு செய்து உண்மை காரணத்தை கண்டுபிடித்து, அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. இதில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி வைத்து செயல்பட்டது பாராட்டுக்குரியதாகும்.

    மேலும் மேகதாது அணை பிரச்சனைக்காக 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன். அப்போதே மேகதாதுஅணை கட்டியே தீருவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பணமும் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மத்திய அரசு அதை வேடிக்கை பார்க்கும். அது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கிருஷ்ண ராஜசாகரில் தண்ணீர் வந்து சேராமல் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக ஆக்கப்படும். இது நமது தலைக்கு மேலே கத்தி போல தொங்கி கொண்டிருக்கும் பேராபத்து. மத்திய அரசு இதில் வஞ்சகம் செய்யும் என்பதுதான் என் குற்றச்சாட்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பூமிநாதன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செய லாளர் முனியசாமி, பாஸ்கர் சேதுபதி, மகபூப்ஜான் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த வைகோ, மதுரை 44-வது வார்டு கவுன்சிலர் தமிழ் செல்வியின் பேரனுக்கு ஆதித்த கரிகாலன் என்று பெயர் சூட்டினார். 

    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    பா.ஜனதா மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததால் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக உள்ளார். தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றித் தரும் போது அதனை கூட்டணியில் சேர்த்ததில் என்ன தவறு? ஊழல் செய்ததற்காக ஆட்சியை பறி கொடுத்த ஒரே கட்சி இந்தியாவில் தி.மு.க. மட்டும்தான். தற்போது உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் நடக்காததற்கும் தி.மு.க.தான் காரணம்.

    ஆனால் இதனை மறைத்து ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை மக்களிடம் கூறி வருகிறார். பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. அவரது மகன் எப்படி இருப்பார்? மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது.



    ஊழல் இல்லாத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு? மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறது. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறோம்.

    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருகிறது. அதனை தமிழக அரசு சட்டப்படி தடுத்து நிறுத்தியது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேகதாது என்பதற்கு பதிலாக மீத்தேன் என அமைச்சர் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    மேலும் அவர் பேசுகையில் மத்திய மந்திரி விஜய் கோயல் எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வுடன் பேசி வருகிறார் என்றார். பியூஸ் கோயல் என்பதற்கு பதிலாக விஜய் கோயல் என கூறியதால் தொண்டர்களிடம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார். உப்புமா சாப்பிட்டார் என உங்களிடம் பொய்சொல்லிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

    மற்றொரு கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சசிகலா குடும்பத்தினர் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டனர் என்றார்.

    ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன்சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றார்.

    வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை அடிக்கடி பிரதமர் நரசிம்மராவை சந்தித்து வருகிறார் என்றார். அந்த கூட்டத்திலும் பிரதமர் பெயரை மாற்றி கூறினார். இதுபோல பல்வேறு கூட்டங்களில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் பேசிய சர்ச்சை கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    மேகதாது பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறோம். ஒருபோதும் தமிழக உரிமையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ministerudayakumar #tngovt

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்காக முதற் கட்டமாக ரூ.1,264 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு வரவழைத்து ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிய தமிழக முதல்- அமைச்சர், துணை முதல்வர், பிரதமர் ஆகியோருக்கு அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் தோப்பூரில் நேற்று நடந்தது.

    இதில் அ.தி.மு.க புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள், சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், அமைப்பு செயலாளர் முத்து ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரவை மாநில நிர்வாகிகள் வெங்கடசாலம், இளங்கோவன், வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், ஐ.பி.எஸ். பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நன்றி அறிவிப்பு தீர்மானங்களை வாசித்து பேசியதாவது

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமையவேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

    அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு ஜெயலலிதாவின் எண்ணத்தை முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் இணைந்து பிரதமரிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். அதற்கு பலனாக தற்போது தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முதன்முதலாக வித்திட்டவர் ஜெயலலிதா தான். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும்.

    எங்களை எதிர்கட்சிகள் மத்திய அரசின் அடிமை என்று குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் அடிமைகள் கிடையாது. தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் திட்டங்களுக்கு உடந்தையாக இருந்தால் மத்திய அரசை எதிர்க்க தயங்கமாட்டோம்.

    இதே காவிரிக்காக நாடாளுமன்றத்தை 24 நாட்கள் முடக்கினோம். தற்போது மேகதாது பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறோம். ஒருபோதும் தமிழக உரிமையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #ministerudayakumar #tngovt

    ஸ்டெர்லைட் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #sterliteplant #mekedatu

    நாகர்கோவில்:

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் குழித்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இதை விடுதலை சிறுத்தை கட்சி வழி மொழிகிறது. வரவேற்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக சாதி, மத, மோதல், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    எனவே காங்கிரஸ் தலைமையில் மதசார்பற்ற கட்சிகள் ஒரு அணியில் திரள வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் திருச்சியில் தேசம் காப்போம் என்னும் மாநாட்டை நடத்துகிறோம். இதில் பங்கேற்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். அவர், பங்கேற்கும் தேதி உறுதி செய்யப்பட்ட பின்னர் மாநாட்டு தேதி அறிவிக்கப்படும்.

    கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் தமிழக அரசு, ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. ஒகி புயல் நிவாரணத்திற்கு ரூ.22 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் அதில் 10 சதவீதம் கூட மத்திய அரசு வழங்க விலலை.


    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அளித்ததற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்று கொள்ள வேண்டும். பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக முதல்வர் அறிவிததுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

    ஸ்டெர்லைட் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #sterliteplant #mekedatu 

    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என அம்மாநில அமைச்சருக்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். #MekedatuIssue #CVShanmugam
    சென்னை:

    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி இதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. தற்போது மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மேகதாது விவகாரம் தொடர்பாக பேசி தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை.



    இந்நிலையில், கர்நாடக அமைச்சரின் கடிதத்திற்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறி உள்ளதால் கர்நாடகாவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என கூறியுள்ளார்.

    “தமிழக அரசின் ஒப்புதல் இன்றி காவிரிபடுகையில் கர்நாடக அரசு எந்த அணையையும் கட்டக்கூடாது. ஆனால், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகம் மீறி உள்ளது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதப்படுத்தவே கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும்” என சி.வி.சண்முகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #MekedatuIssue #CVShanmugam
    பாரதீய ஜனதா வாக்கு அரசியல் நாடகம் நடத்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். #seeman #pmmodi #gajacyclone

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாது அணை கட்டினால் தஞ்சை படுகை விவசாயிகளின் வாழ்வதாரம் மோசமாகி விடும். வரும்பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. வாக்கு அரசியல் நாடகம் நடத்துகிறது.

    கர்நாடக அமைச்சர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி விட்டு அணை பகுதியை பார்வையிடுவது நாடகம். மலைகள், நதிகளை பாதுகாக்க முடியாமல் அழிக்கின்றனர், உருவாக்க முடியாததை ஏன் அழிக்கின்றனர். மணல், மலை போன்றவற்றை 3 அடிக்கு எடுக்க அனுமதி வாங்கி விட்டு 30 அடி தோண்டுகின்றனர்.


    8 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கும் பிரதமருக்கு ,புயலால் பாதித்த மக்களை பார்வையிடவோ? நிதி ஒதுகவோ நேரம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #seeman #pmmodi #gajacyclone

    அரசியல் உள் நோக்கத்திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார். #thirumavalavan #pmmodi

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசம் காப்போம் மாநாடு ஜனவரிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் மாநாடு தள்ளி வைக்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்னதாக மாநாடு நடைபெறும்.

    அம்பேத்கர் படத்திற்கு முன்பு ஒரு இளைஞர் பெண்களை கொச்சைப் படுத்தி பேசி உள்ளார். அவர் யார் என்று தெரியாத நிலையில் பா.ம.க. எங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறது.

    அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது.


    அரசியல் உள் நோக்கத் திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளையும் மீறி கர்நாடகாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறது. கஜா புயல் உள்ளிட்டவைகளில் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    மேகதாது அணையை கட்ட 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டியது பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #thirumavalavan #pmmodi 

    மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக பாரதீய ஜனதா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். #tamilisai #bjp #mekedatu

    கோவை:

    பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளைக் செய்து வருகிறது. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாரமன் மூலமாக, என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அதற்கு தீர்வு காண்பதற்கு அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

    டெல்டா பகுதிகளில் நடக்கும் மீட்பு பணிகளில் மத்திய அரசின் பங்குள்ளது, ஆனால் இன்னும் எந்த நடவடிக்கைகயும் எடுக்க வில்லை என எதிர்கட்சிகள் அவநம்பிக்கையோடு பேசி வருகின்றன.

    மத்திய அரசிடம் வீடு கட்டி தருவது, சாலைகள் அமைப்பது, பயிர் கடன்களைக்ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைக் நிதி அமைச்சகத்திடம் நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். ஆனால் சில கட்சிகள் இங்கு அரசியல் செய்து கொண்டு இருக்கின்றன.

    மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுக்கப்பட வில்லை. ஆய்வு செய்ய மட்டும் தான் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக பாரதீய ஜனதா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்.

    தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது. தமிழக அரசும் அனுமதிக்காது. வேண்டு மென்றே மேகதாது விவாகரம் தொடர்பாக எதிர்கட்சிகள் நடத்தும் ஆர்பாட்டம் கண் துடைப்பு நாடகம் ஆகும்.

    அருகில் உள்ள மாவட்டங்கள் கண்ணீரில் இருக்கும் போது கண்ணீரைக் துடைக்க வேண்டிய காலகட்டத்தில் கண்துடைப்பு நாடகத்தைக் நடத்துகிறார்கள். தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு தமிழக பாரதீய ஜனதா தனது முழுமையான ஆதரவைக் தரும்.

    சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்.மானிக்கவேலை மீண்டும் விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது, நியாயத்திற்க்கு கிடைத்த தீர்ப்பாகவே நாங்கள் பார்க்கிறோம். 

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #bjp #mekedatu 

    மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். #Seeman #MekedatuDam


    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகாவில் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணைகட்ட முனையும் கர்நாடக அரசின் செயல்திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் மத்திய அரசின் செயலானது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. தமிழர்களின் உரிமையினை மறுத்து உணர்வினை உரசிப் பார்க்கும் பா.ஜ.க. அரசின் தமிழர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    காவிரி நதிநீர் சிக்கலில் தொடக்கம் முதலே விதிகளை மீறிப் பல்வேறு அணைகளைக் கட்டியும், நிர்ணயிக்கப்பட்டதைத் தாண்டிப் பாசனப் பரப்பைப் பலதருணங்களில் விரிவுப் படுத்தியும் அராஜகப் போக்கைக் கையாண்டு வந்தது கர்நாடக அரசு.

    அதுமட்டுமல்லாது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஒரு ஆண்டுகூட செயல்படுத்தாமல் இருந்த தோடு, உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் பொருட்படுத்தவில்லை.இதனால் காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழர்களுக்கு எட்டாக் கனியாக மாறிப்போனது.

    மத்திய அரசின் பாரா முகத்தாலும் கர்நாடக அரசின் தொடர் தமிழர் விரோதப் போக்காலும், முப்போகம் விளைவித்த காவிரிப் படுகையின் வேளாண் பெருங்குடி மக்கள் இன்றைக்கு ஒருபோக விளைச்சலுக்கும் வழியின்றி வேளாண்மையைக் கைவிடுவதும், தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதுமானப் பெருந்துயரம் இம்மண்ணில் பன்னெடுங் காலமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டிவிட்டால் சொட்டு காவிரி நீரும் இனி தமிழகத்திற்கு இல்லை எனும் பேராபத்து நிலை உருவாகும். அதன்மூலம், காவிரிப்படுகையின் வேளாண் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டு முழுமையாக வெளியேற்றி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எரிகாற்று வளங்களை நீரியல் விரிசல் முறையில் மண்ணைப் பிளந்து எடுத்துப் பொருளீட்டலாம் எனும் பெரும் வணிக சதி இதனுள் ஒளிந்திருக்கிறது. இந்த திட்டங்களை இனியும் அனுமதிக்க மாட்டோம்.

    தமிழர்களின் உணர்வினை மதித்து காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அளித்திருக்கும் அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.கர்நாடக அரசின் செயலைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Seeman #MekedatuDam

    ×