search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister udayakumar"

    தமிழக அரசின் திட்டங்களால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். #ministerudayakumar #admk #TNElections2019

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் இன்று வாக்குப்பதிவு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசின் திட்டங்களால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

    தேர்தலின்போது ஆளும் தரப்பு மீது வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக புகார் எழுப்புவது, வழக்கமான ஒன்றுதான்.

    சித்திரை திருவிழாவினால் வாக்குப்பதிவு குறையாது. மக்கள் திருவிழாவைக் கொண்டாடிவிட்டு வாக்குப்பதிவு செய்ய வந்து விடுவார்கள்.

    சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதனை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து வாக்குப்பதிவு தொடர்ந்து வருகிறது.

    வாக்குப்பதிவு எந்திரம் பழுதான இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை சிறிது நேரம் அதிகரிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerudayakumar #admk #TNElections2019 

    மேகதாது பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறோம். ஒருபோதும் தமிழக உரிமையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ministerudayakumar #tngovt

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்காக முதற் கட்டமாக ரூ.1,264 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு வரவழைத்து ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிய தமிழக முதல்- அமைச்சர், துணை முதல்வர், பிரதமர் ஆகியோருக்கு அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் தோப்பூரில் நேற்று நடந்தது.

    இதில் அ.தி.மு.க புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள், சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், அமைப்பு செயலாளர் முத்து ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரவை மாநில நிர்வாகிகள் வெங்கடசாலம், இளங்கோவன், வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், ஐ.பி.எஸ். பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நன்றி அறிவிப்பு தீர்மானங்களை வாசித்து பேசியதாவது

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமையவேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

    அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு ஜெயலலிதாவின் எண்ணத்தை முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் இணைந்து பிரதமரிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். அதற்கு பலனாக தற்போது தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முதன்முதலாக வித்திட்டவர் ஜெயலலிதா தான். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும்.

    எங்களை எதிர்கட்சிகள் மத்திய அரசின் அடிமை என்று குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் அடிமைகள் கிடையாது. தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் திட்டங்களுக்கு உடந்தையாக இருந்தால் மத்திய அரசை எதிர்க்க தயங்கமாட்டோம்.

    இதே காவிரிக்காக நாடாளுமன்றத்தை 24 நாட்கள் முடக்கினோம். தற்போது மேகதாது பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறோம். ஒருபோதும் தமிழக உரிமையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #ministerudayakumar #tngovt

    கஜா புயல் முன்னேற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். #gajacyclone #rain #ministerudayakumar #edappadipalanisamy
    சென்னை:

    வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகை கடற்கரையில் இருந்து 138 கி.மீ. தொலைவில் உள்ளது. கஜா புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும்.  

    சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மணிக்கு 16.8 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டு இருந்த நிலையில் அதன் வேகம் 10 கி.மீட்டராக குறைந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் முனேற்பாடுகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் உதயகுமாரிடம்  முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். கஜா புயல் முன்னேற்பாடுகளை குறித்து முதல்-அமைச்சரிடம்  வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விளக்கினார். 

    ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முதல்-அமைச்சர் அலுவலகத்திடம் வருவாய்துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர். #gajacyclone #rain #ministerudayakumar #edappadipalanisamy
    வெள்ள அபாயம் உள்ள ஆற்றுப்பகுதியில் சிறுவர்-சிறுமிகள் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை கூறி உள்ளார். #MinisterUdayakumar #Selfie
    மதுரை:

    தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடப் பாண்டிற்கான வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வருகிறது. இந்த நிலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகளுடன் 4 முறை ஆலோசனை கூட்டம் நடத்தி பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வறிக்கை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையை பொறுத்தமட்டில் தொலை நோக்கு திட்டங்களுடன் பருவ மழையை எதிர்கொண்டு வருகிறோம். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நிவாரண நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.



    வைகை அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. வினாடிக்கு 5,571 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணையில் இருந்து 38 ஆண்டுகளுக்கு பிறகு உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட பாசன நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    வெள்ள அபாய எச்சரிக்கையை பொறுத்தமட்டில் அது விழிப்புணர்வு செய்தி மட்டுமே. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். எனவே யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

    மேலும் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இது விடுமுறை காலம் என்பதால் சிறுவர்-சிறுமிகள் வெள்ள அபாயம் உள்ள ஆற்றுப் பகுதியில் சிறுவர்-சிறுமிகள் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. ஆற்றங்கரையில் எந்த நேரமும் நீர்மட்டம் அதிகரிக்கலாம்.

    வைகை ஆற்று கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது. இதில் அழைத்தால் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுபவார்கள்.

    வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த மழை பெய்யும் என்பதால் அதிகாரிகளுக்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு உதவ 9597176061 என்ற அலைபேசி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdayakumar #Selfie
    டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அவர் ஏற்கனவே அம்மாவால் வெளியேற்றப்பட்டவர் என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ministerudayakumar #dinakaran

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சிலைமான் பகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்கனவே அம்மா பேரவை சார்பில் அரசின் சாதனைகளை விளக்கி இளைஞர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியை நடத்தி வருகிறோம். இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியிலும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது. இதில் பெண்களும் அரசின் சாதனைகளை விளக்கி கூறுவதற்காக சைக்கிள் பேரணியில் பங்கேற்கிறோம் என்று ஆர்வம் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் வருகிற 24-ந் தேதி 2,500 பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி உள்ளிட்ட 15 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சைக்கிள் பேரணியில் பங்கேற்கும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ரிங்ரோடு வேலம்மாள் திருமண மண்டபத்தில் நாளை (13-ந் தேதி) பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    இதில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, வளர்மதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    அரசின் சாதனைகளை எடுத்துக்கூறும் இந்த சைக்கிள் பேரணி ஜெயலலிதா பேரவை சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.

    ஒரு தனி நபரால் இதை செய்ய முடியாது. அனைவரின் கூட்டு முயற்சியோடு இதை நடத்தி வருகிறோம்.

    இந்த சைக்கிள் பேரணிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், தேவையற்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து ஒருங்கிணைப்பாளர்- துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தைைமையின் கீழ் செயல் பட்டு வருகிறோம்.

    டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அவர் ஏற்கனவே அம்மாவால் வெளியேற்றப்பட்டவர்.

    1.10 கோடி உறுப்பினர்கள் கொண்ட அ.தி.மு.க. வில் தங்களது உறுப்பி னர் அட்டைகளை புதுப்பித்தவர்கள் தான் உறுப்பினர் என்ற தகுதியை பெறுவார்கள். தினகரன் போன்றவர்கள் உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்கும் தகுதி இல்லாதவர்கள்.

    அவர் அ.தி.மு.க.வில் உறுப்பினராவது என்பது முடிந்து போன ஒன்று. ஆனால் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தொண்டர்களிடம் சலசலப்பை உருவாக்கவும் தினகரன் போன்றவர்கள் அவ்வப்போது அவதூறு செய்து வருகிறார்கள். அது எடுபடாது.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்பது ஒரு அங்கீகாரம் இல்லாத இயக்கம். தினகரன் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, தனக்கு பதவியை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம் தான் அ.ம.மு.க. இதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் வழங்கவில்லை.

    தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாகத்தான் இன்னும் இருக்கிறார். கருத்து தெரிவிக்கும் அமைச்சர்கள் மீது அவர் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். அதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வழிகாட்டுதலில் அ.தி.மு.க. தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

    கற்பை இழந்த பெண் கண்ணகியை அடையாளம் காட்ட முடியாதது போல தினகரன் அ.தி.மு.க.வில் சேரும் தகுதியை இழந்து விட்டார்.


    தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் நாங்கள் தான் தோளில் தூக்கிச் சுமந்தோம். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக, நிலையாக பயணித்து வருகிறோம்.

    அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு யுக்திகளை செய்து வருகிறார்கள். தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தினகரன் செய்து வரும் சூழ்ச்சிகள் தமிழகத்தின் சாபக்கேடு.

    தி.மு.க.வில் ஒதுக்கி வைத்துள்ள அழகிரியுடன், தினகரன் கள்ள கூட்டணி வைத்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் அ.தி.மு.க. வின் தோல்வி பயத்தால் தள்ளி வைக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை அ.தி.மு.க.வினர் தினமும் சந்தித்து வருகிறார்கள். நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

    எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பேட்டியின் போது சரவணன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன், மாரிச்சாமி உள்ளிட்ட பலர் இருந்தனர். #ministerudayakumar #dinakaran

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. இதை அவர்களுக்கு ஒரு சவாலாகவே கூறுகிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #parliamentelection #admk

    பீளமேடு:

    அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டு அழைப்பு கொடுத்தும் நீங்கள் ஏன் புறக்கணித்திருக்கிறீர்கள்?

    பதில் : புரோடாகால் படி எம்.எல்.ஏ.க்கள் பெயரை போட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான். உண்மையிலேயே நாங்கள் வர வேண்டும் என்று நினைத்தால் எங்களுடைய அவைல பிலிட்டியை தெரிந்து கொண்டு தான் யாரும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் வைப்பார்கள்.

    புரோடாகால்படி சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரை போட்டுள்ளனர். ஈரோட்டில் இன்று அருந்ததியர் சமுதாயம் சார்பாக நடக்கிற மாநாட்டில் நான் பங்கேற்க இருப்பது 2, 3 மாதங்களுக்கு முன்பு திட்ட மிடப்பட்டது. எங்கள் கட்சி நிகழ்ச்சி என்றால் கூட தள்ளி வைத்துக் கொள்ளலாம்.

    அ.தி.மு.க.வில் உயிரோட்டமான தொண்டர்கள் இப்போது இல்லை. ஆட்சி அதிகாரத்தை வைத்து 2 நாளைக்கு 1000 ரூபாய் கொடுத்து சுற்றுலா செல்லலாம் என கூறி இலவச வாகனத்தில் மக்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்கின்றனர். தொண்டர்கள் அவர்களிடம் இருப்பதாக காட்டுவதற்காகவே இது போன்று மக்களை தேடி, தேடி அழைக்கிறார்கள்.

    கேள்வி : உங்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்கப்பட்டதா?

    பதில்: அரசு நிகழ்ச்சிகளில் வழக்கப்படி அழைப்பிதழில் அந்தந்த சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பெயர்களை சேர்ப்பது வழக்கம். ஆனால் நான் ஏற்கனவே திட்டமிட்டடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வில்லை.

    கேள்வி : நூற்றாண்டு விழாவுக்காக விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

    பதில் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை இவர்கள் கேட்பார்களா? அதேநேரம் அ.ம.மு.க.வின் பிளக்ஸ் பேனர்களை காவல்துறையை வைத்து அகற்றுவது என்பது கேவலமான செயல். உயர் நீதிமன்றம் சொல்லியும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா இவர்கள் இருவரையும் ஏன் கைது செய்யவில்லை?

    கேள்வி : எச்.ராஜா விவகாரம் குறித்து அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் : அமைச்சர் பதவியில் இருப்பதால் ஆர்.பி. உதயகுமார் மேதாவிகள் போல பேசுகிறார்? பொறுப்பு இல்லை எனில் யாரும் இவரை சீண்ட மாட்டார்கள்.

    கேள்வி : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என தம்பிதுரை கூறி உள்ளாரே?


    பதில் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. இதை அவர்களுக்கு ஒரு சவாலாகவே கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விமான நிலையத்தில் டி.டி.வி. தினகரனுக்கு கோவை மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், உடுமலை சண்முகவேல், புறநகர் மாவட்ட செயலாளர் சுகுமார், தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் அகஸ்டஸ், பொற்காலம் ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கணேஷ்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.என்.ஆர். ராமலிங்கம், வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயசுதா, மாணவரணி மாவட்ட செயலாளர் சஞ்சீவிநாதன், பகுதி செயலாளர்கள் தங்கவேலு, நாகராஜ், ஜெயராஜ், மற்றும் கோபிநாத், மா.பா. ரோகிணி, அமைப்புச் செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #dinakaran #parliamentelection #admk

    வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 250 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். #NortheastMonsoon #MinisterUdayakumar
    சென்னை:

    வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பான மழையளவில் பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மழை வெள்ளத்துக்கு 4399 பகுதிகள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 250 இடங்கள் பாதிக்கும் பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    8417 நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 6,534 பாலங்களின் அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    7,256 தடுப்பணைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் குடிநீர் பயன்பாட்டிற்கான கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் குடிமராமத்து மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களின் மூலம் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை தூர்வாரி, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீரை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பணைகள் கட்டுவதற்கான இடங்களை இந்த மாத இறுதிக்குள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NortheastMonsoon #MinisterUdayakumar
    சிலர் வாய் சவடால் மட்டும் பேசுவார்கள், சுயேச்சை வெற்றிபெற்றால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக் குட்பட்ட தனக்கன்குளம், நிலையூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் அம்மா திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா போன்ற நல உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.

    கலெக்டர் நட ராஜன் தலைமை தாங் கினார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள், அதிகாரிகளை தேடி சென்ற நிலை மாறி, அதிகாரிகளே மக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறார்கள்.

    இது அம்மா ஏற்படுத்தி தந்த அரசு. அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோரது வழிகாட்டுதலோடு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    திருப்பரங்குன்றம் தொகுதி என்றைக்குமே அ.தி.மு.க.வின் கோட்டையாகும். 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீனிவேல், 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    மீண்டும் ஒரு இடைத் தேர்தலை சந்திக்க இருக் கிறோம். இதில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறுவதற்கு உறுதியாகி விட்டது. ஏனென்றால், கடந்த இடைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

    திருப்பரங்குன்றம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவதுதான் அ.தி.மு.க. அரசின் முக்கிய நோக்கம். அம்மாவின் பிள்ளைகளாகிய எங்களால்தான் அது முடியும்.

    சிலர் வருவார்கள், வாய் சவடால் பேசுவார்கள், சுயேச்சையால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு காண்கிறார்கள். இந்த ஆட்சியும், கட்சியும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழக மக்களுக்கு சேவை செய்யும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுகின்ற வகையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி அமைய வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வெற்றிவேல், தமிழரசன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, முத்து இருளாண்டி, திருநகர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #ministerudayakumar

    ராஜபாளையம்:

    அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் சாத்தூரில் தொடங்கிய சைக்கிள் பேரணி ராஜபாளையம் சென்றது. பேரணியில் வந்த அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 137 பயனாளிகளுக்கு ரூ. 82.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி. உதயகுமார் வழங்கினர்.

    பின்னர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட புலித்தேவன் 303-வது ஆண்டு விழாவில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளோம். அ.தி.மு.க. மனிதனால் ஏற்படுத்தப்பட்டதல்ல. எம்.ஜி.ஆர் என்ற புனிதனால் தொடங்கப்பட்டது. இதை யாராலும் அழிக்க முடியாது. அ.தி.மு.கவுக்கு வீழ்ச்சி 1 சதவிகிதம் என்றால், வளர்ச்சி 99 சதவிகிதம்.

    அம்மா வாக்கு தெய்வ வாக்கு. உங்கள் கட்சி அழிந்து விடும் என விஜயகாந்த் சட்ட மன்றத்தில் சாபமிட்டார். ஆனால் தற்போது அவர் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அம்மா சொன்னது போல் அவருக்கு பின்னாலும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் ஆளும்.

    மற்ற கட்சி போல உருவத்தை பார்த்து பதவி கொடுக்கப்படுவதில்லை. உழைத்தால் தான் முன்னேற முடியும். படிப்படியாக மட்டுமே முன்னேற முடியும். கட்சியில் சில குளறுபடிகள் ஏற்பட்டு விட்டது என எதிர் கட்சியினர் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதை உடைத்து அ.தி.மு.க. கட்சியின் சக்தியை காட்டவே இந்த ஓராண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உயதகுமார், எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை போற்றும், வணங்கும் தலைமை அ.தி.மு.க.வின் உடையது. அந்த தலைமையை அம்மா வளர்த்தெடுத்தார். தற்போது அதை மருது சகோதரர்களான ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் கட்டி காத்து வருகின்றனர்.

    எதிரணியினர் மாற்றுவோம் என கூறுகின்றனர். அ.தி.மு.க. என்ன பாட புத்தகமா ? மாற்றுவதற்கு ? பலர் முன்னிலையில் புரட்சி தலைவி அம்மாவின் அரசு 17-வது மாதம் முடிந்து 18- வது மாதத்தில் அடி எடுத்து வைக்கிறது.

    இந்த 17 மாத கால ஆட்சியில் ரூ. 23 ஆயிரம் கோடியில், 40 ஆயிரம் திட்டங்களை மக்களுக்காக அர்பணித்திருக்கும் அ.தி.மு.க. அரசின் இந்த சாதனைகளை யாரும் மறுக்க முடியுமா ?

    239 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காவிரி பிரச்சினையை, அம்மாவின் அருளாசியோடு சட்ட போராட்டத்தில் மருது சகோதரர்கள் ஆனவர்கள் மாபெரும் வெற்றியை உச்ச நீதி மன்றத்தில் பெற்றுள்ளனர்.

    அண்டை மாநிலங்களில் இல்லாத எய்ம்ஸ் மருத்துவ மனை தமிழகத்தில் வர வேண்டும் என விதை விதைத்தார் அம்மா. ரூ. 2 ஆயிரம் கோடியில் அதை சத்தமில்லாமல் மருது சகோதரர்கள் அறிவிப்பாக பெற்று தந்துள்ளனர்.

    பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தலை நகரம் என சென்னை தேசிய விருதை பெற்றுள்ளது. இது போல மக்கள் நல்வாழ்வு துறை, விவசாய துறையில் பரிசு, பள்ளி கல்வி துறையில் மறு மலர்ச்சி போன்ற நலத்திட்டங்களை வழங்கியது அம்மாவின் அரசு.

    ஆவின் பால் இது வரை இந்தியாவிற்குள் மட்டும் கிடைக்கப் பெற்றது. ஆனால் தற்போது ஆவின் பால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அம்மாவின் அரசின் சாதனைகளை அமெரிக்கா என்ன ? நிலவு வரை எடுத்து செல்வோம். ஆனால் அங்கு சைக்கிள் செல்லாது.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #ministerudayakumar

    ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளார் பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி நடத்தி வருகிறது. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தற்போது முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். சுமார் 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது.

    இந்த பேரணி வரும் வழியில் அரசின் சார்பில் மரகன்றுகள் நடும் விழா, புத்தகம் வழங்கும் விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    ஒவ்வொரு தொகுதியில் ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்து உள்ளது பாராட்டுக்கு உரியது. திருவண்ணாமலையில் அரசின் சார்பில் கிரிவலப் பாதை மேம்பாட்டு பணி, யாத்ரி நிவாஸ் போன்றவை நடைபெற்று வருகிறது. ரூ.30 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் அறிவித்த திட்டங்கள் இவர்கள் செயல்படுத்துவார்களா, இல்லையா என்று கேள்வி எழுப்பினர். நாங்கள் உயிரோடு இருக்கும் வரை ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வருவாய்த்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத் துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை சார்பில் 410 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் மனோகரன், அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில்குமார், மாவட்ட பேரவை இணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி வெங்கடேசன், நகர செயலாளர் செல்வம், நகர துணை செயலாளர் அரசப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கத்தில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வி.பன்னீர்செல்வம், தூசி மோகன் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளார் பெருமாள் நகர் கே.ராஜன், முன்னால் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் எம்.எஸ்.ை நனாக்கன்னு, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஆர்.டி.ஓ தங்கவேல்,சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரேனுகா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து 582 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள், உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் வழங்கினர். இதை நிகழ்ச்சியின் முடிவில் தாசில்தார் ரேணுகா நன்றி கூறினார். முன்னதாக கலசப்பாக்கத்திலிருந்து செங்கம் வரை அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

    அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் வீடுகளை முற்றுகையிட முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர். #ministersellurraju #ministerudayakumar

    மதுரை:

    சீர்மரபினரை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கள்ளர் சீரமைப்பு சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

    அதன்படி இன்று காலை கள்ளர் சீரமைப்பு சங்க மாவட்ட நிர்வாகி சகாதேவன் தலைமையில் 7 பெண்கள் உள்பட 20 பேர், அண்ணாநகர் செண்பக தோட்டம் பகுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டை முற்றுகையிட புறப்பட்டனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று நடுவழியிலேயே அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் மதுரை செல்லூரில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட சென்ற 30 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். #ministersellurraju #ministerudayakumar

    நீர்நிலைகளில் ‘செல்பி’ எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    மதுரை:

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த 9-ந் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்றும், காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். இதன் பேரில் மாவட்ட கலெக்டர்கள் நேரடி கண்காணிப் பில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவர்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை வழங்குவார்கள். வெள்ளம் சம்பந்தப்பட்ட தகவல்களை தண்டோரா மூலமும், ஊடகங்கள் மூலமாகவும் வருவாய்த்துறை வழங்கும். எனவே அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்.

    கடந்த 2015-ம் ஆண்டில் நூற்றாண்டு காலம் இல்லாத அளவிற்கு மழை பெய்தது. அந்த மழையையே சமாளித்தோம். எப்பபடிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்நோக்க தயார் நிலையில் தமிழக அரசு இருக்கிறது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் குறிப்பாக வட ஆந்திர கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். குழந்தைகள் காவிரி கரையோர பகுதிகளில் குளிப்பது, விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. நீர் நிலைகளில் செல்போன் மூலம் ‘செல்பி’ போட்டோ எடுப்பதையும் மக்கள், இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    ×