என் மலர்

    செய்திகள்

    அரசியல் உள் நோக்கத்திற்காக மோடி வரம்பு மீறி உள்ளார்- திருமாவளவன் குற்றச்சாட்டு
    X

    அரசியல் உள் நோக்கத்திற்காக மோடி வரம்பு மீறி உள்ளார்- திருமாவளவன் குற்றச்சாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரசியல் உள் நோக்கத்திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார். #thirumavalavan #pmmodi

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசம் காப்போம் மாநாடு ஜனவரிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் மாநாடு தள்ளி வைக்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்னதாக மாநாடு நடைபெறும்.

    அம்பேத்கர் படத்திற்கு முன்பு ஒரு இளைஞர் பெண்களை கொச்சைப் படுத்தி பேசி உள்ளார். அவர் யார் என்று தெரியாத நிலையில் பா.ம.க. எங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறது.

    அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது.


    அரசியல் உள் நோக்கத் திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளையும் மீறி கர்நாடகாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறது. கஜா புயல் உள்ளிட்டவைகளில் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    மேகதாது அணையை கட்ட 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டியது பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #thirumavalavan #pmmodi 

    Next Story
    ×