என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக அமைச்சர்"

    • தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக் லைஃப் பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கமல்ஹாசன் பேசும் போது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக பேசினார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    கமல்ஹாசனை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கன்னட அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    மேலும், தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கிடையே கர்நாடக கலாச்சாரஅமைச்சர் சிவராஜ் தங்கட்சி கூறியதாவது:-

    கன்னட நிலம், நீர், மற்றும் மொழி பிரச்சினையில் ஈடுபட்டுள்ள எந்த வொரு பெரிய நபரையும் பொறுத்து கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. கமல்ஹாசன் உடனடியாக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது அனைத்து படங்களும் மாநிலத்தில் தடை செய்யப்படும்.

    நடிப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் நம் மொழி தேவை. இப்போது விளம்பரத்துக்காக இதைப்பற்றி பேசுகிறீர்களா? முன்னதாக சோனுநிகம் கன்னடர்களை பற்றி இதே போல் பேசினார். பின்னர் மன்னிப்பு கேட்டார். அவர்கள் அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

    கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ஒரு மூத்த நடிகர் இது போன்ற அறிக்கையை வெளியிடுவது சரியல்ல. அவரது படங்கள் வெளியிடுவதை தடை செய்ய திரைப்பட வர்த்தக சபைக்கும் கடிதம் எழுதப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் அசோகா கூறுகையில்," கன்னட மொழியை அவமதித்த கமலின் புதிய அல்லது பழைய படங்களை திரையிட கன்னடர்கள் அனுமதிக்கக்கூடாது.

    அரசாங்கமும், கன்னட ஆதரவு அமைப்புகளும் இந்த படங்களை புறக்கணிக்க வேண்டும். கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் பல தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துள்ளார்.

    கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களின் கடனை அடைக்க அவர் நியாயமாக பேசியிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர் கன்னடத்தை அவமதித்துள்ளார். அவரது செயல் சகிக்க முடியாதது" என்றார்.

    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என அம்மாநில அமைச்சருக்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். #MekedatuIssue #CVShanmugam
    சென்னை:

    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி இதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. தற்போது மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மேகதாது விவகாரம் தொடர்பாக பேசி தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை.



    இந்நிலையில், கர்நாடக அமைச்சரின் கடிதத்திற்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறி உள்ளதால் கர்நாடகாவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என கூறியுள்ளார்.

    “தமிழக அரசின் ஒப்புதல் இன்றி காவிரிபடுகையில் கர்நாடக அரசு எந்த அணையையும் கட்டக்கூடாது. ஆனால், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகம் மீறி உள்ளது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதப்படுத்தவே கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும்” என சி.வி.சண்முகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #MekedatuIssue #CVShanmugam
    மேகதாது விவகாரத்தை பேசி தீர்க்க கர்நாடக அரசு விரும்புவதாக கூறி தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். #MekedatuDam #KarnatakaMinister #EdappadiPalaniswami
    பெங்களூரு:

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.



    இதற்கிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்துவருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டம் தொடங்கியதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்றை கொண்டுவர இருக்கிறார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்வு காண விரும்புவதாக கூறியுள்ளார்.

    ‘மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசும் தமிழக மக்களும் நினைப்பது வேறு, ஆனால் உண்மை நிலை வேறு. மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம். சுமுகமாக பேசி தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புகிறது’ என்று அமைச்சர் சிவக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #MekedatuDam #KarnatakaMinister #EdappadiPalaniswami
    ×