search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ரூ.22 கோடிக்கு ஏலம்

    பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விட்டதில் கிடைத்த ரூ.22 கோடி கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடிக்கு பலரும் வழங்கிய பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக புதுடெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் இந்த ஏலத்தை நடத்தியது.

    முதல் கட்டத்தில் 1805 பொருட்களில் 240 பொருட்களும் 2-வது கட்ட மாக 2772 பொருட்களில் 612 பொருட்களும் ஏலம் விடப்பட்டது. 3-வது கட்டமாக 1348 பொருட்கள் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 391 பொருட்கள் ஏலம் போனது. இந்த ஏலத்தின் மூலம் மொத்தம் ரூ 22.5 கோடி கிடைத்தது.

    முதல் ஏலத்தில் ரூ.3.1 கோடியும், 2-வது ஏலத்தில் ரூ.3.6 கோடியும் 3-வது ஏலத்தில் அதிகமாக ரூ.15.8 கோடியும் கிடைத்தது.

    இந்த பணம் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.


    Next Story
    ×