search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Astra missile"

    அதிநவீன அஸ்திரா ஏவுகணை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஒ) மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிப்பது அதிநவீன அஸ்திரா ஏவுகணை.

    இந்நிலையில், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு ரூ. 2,971 கோடி செலவில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2,971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. #Palasore #IAF #AstraMissile #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை நேற்று பிற்பகல் செலுத்தப்பட்டது. இது வானில் பறந்த பான்ஷி ரக ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

    வானில் இருந்து பறந்து சென்று வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை 20 முறைக்கும் மேல் சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 7 முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டு உள்ளது. இறுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.



    அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக விமானப்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் ஆகியோருக்கு பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #Palasore #IAF #AstraMissile #NirmalaSitharaman
    ×