என் மலர்
செய்திகள்

விமான கண்காட்சி பெங்களூருவில் இருந்து மாற்றப்படாது - மத்திய அரசு
பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி வேறு இடத்துக்கு மாற்றப்படாது என பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது. #Bengaluru #AeroIndia
புதுடெல்லி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆண்டு தோறும் விமான கண்காட்சி நடப்பது வழக்கம். கடந்த 1996-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கண்காட்சியை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
விமான கண்காட்சி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதும், கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு பெங்களூருவில் நடைபெறும் உலக புகழ்பெற்ற விமான கண்காட்சியை உத்தரப்பிரதேசத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டினார். விமான கண்காட்சியை மாற்றக் கூடாது என பிரதமர் மோடிக்கி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி வேறு இடத்துக்கு மாற்றப்படாது என பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவில் நடைபெற்று வந்த விமான கண்காட்சி வேறிடத்துக்கு மாற்றப்படாது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறவுள்ளது. என குறிப்பிட்டுள்ளது. #Bengaluru #AeroIndia
Next Story