என் மலர்
நீங்கள் தேடியது "Jerusalem"
- ஜெருசலேம் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரரால் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
- பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரரால் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது.
இஸ்ரேலின் ஜெருசலேமில் மரம் நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இன்று (திங்கட்கிழமை) ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பில் காலை 10 மணியளவில் காரில் துப்பாக்கிகளுடன் வந்த இருவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு காவலர் திருப்பிச் சுட்டதில் தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்தனர்.
இதற்கிடையே குண்டடிபட்டு போதும்மாக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மற்றும் 12 பேர் காயமடைந்தனர் . அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் மேற்குக் கரையிலிருந்து வந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
- நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
- லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை.
காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவுகிறது.
லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. தீ மேவோ ஹோரோன், பர்மா சாலை மற்றும் மெசிலாட் சியோன் போன்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தேசிய அவசரநிலையை அறிவித்தார்.
- விலையுயர்ந்த சிவப்பு கல்லால் இந்த தங்க மோதிரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது
- ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் செழிப்புடன் வாழ்ந்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.
விலையுயர்ந்த சிவப்பு கல்லால் இந்த தங்க மோதிரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது
இதன்மூலம் ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை இந்த மோதிரம் உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- லெஸ்டர் கடீல் என்ற நபர் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் புதிதாக பஸ் சேவையை தொடங்கியிருந்தார்
- பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் இஸ்ரேல் என்ற பெயரில் ஓடிய தனியார் பஸ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் மூட்பித்ரி[Moodbidri]-முல்கி [Mulki] ரூட்டில் தனியார் டிராவல்ஸ் பஸ் ஒன்றின் பெயர் இணையத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்தது.
அதாவது லெஸ்டர் கடீல் [Lester Kateel] என்ற நபர் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் புதிதாக பஸ் சேவையை தொடங்கியிருந்தார். 12 வருடமாக இஸ்ரேலில் வேலை பார்த்த லெஸ்டர் கடீல் அதை நினைவுகூரும் விதமாக இஸ்ரேல் டிராவல்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். ஆனால் இஸ்ரேல் என எழுதப்பட்டிருக்கும் பஸ்ஸின் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் விட்டால் போதும் என்று தனது பஸ்ஸின் பெயரை கடீல் மாற்றியுள்ளார்.
பாலஸ்தீன நகரங்களின் மீது கடந்த 1 வருட காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை காசாவில் மசூதி மற்றும் பள்ளியின் மீது நடந்த தாக்குதலில் 26 பேர் பலியானார்கள்.
மேலும் லெபானானிலும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த சூழலில் இஸ்ரேல் டிராவல்ஸ் என்று பெயர் வைப்பது பலரின் மனதையும் புண்படுத்தும் வகையில் உள்ளதாக இருப்பதால் கடீலுக்கு கண்டங்கள் எழுந்தது.
எனவே இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரை ஜெருசலேம் டிராவல்ஸ் என்று மாற்றியுள்ளார் ஓனர் கடீல். ஜெருசலேம் என்பது புனிதமான இடமாக கருதப்படுவதால் யாருக்கும் படிப்பில்லை என்ற வகையில் அவர் இந்த பெயர் மாற்றத்தை செய்துள்ளார்.


ஜெருசலேத்திற்கு புனித புனித பயணம் செல்பவர்கள் அரசின் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட்டு வருகிற 10-ந் தேதிக்குள் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807 அண்ணா சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. புனித பயணம் ஜூலை மாதம் முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்‘ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு வருகிற 6-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







