

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
இதனுடைய செய்தியாளர்களை சந்தித்தா காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "மத கலவரங்களை ஏற்படுத்துவது, அணைத்து மக்களும் அமைதியாக வாழ்வதை அனுமதிக்க முடியாது என்று கங்கணம் கட்டி கொண்டிடுக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் முகமாக பிரதமர் மோடி உள்ளார்.
பிரதமர் மோடி எதனை முறை இங்கு வந்தாலும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை. திருப்பரங்குன்றம் என்றில்லை ஆறுபடை கோயிலுக்கு சென்றாலும் கூட பிரதமர் மோடியை முருகன் மன்னிக்க மாட்டார்" என்று தெரிவித்தார்.