என் மலர்
இந்தியா

பீகாரில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை தானே அறிவித்தார் தேஜஸ்வி யாதவ்
- ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
- இந்த யாத்திரையில் தேஜஸ்வி யாதவும் இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கலந்து கொண்டார்.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார். இந்த யாத்திரையில் பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவும் ராகுல்காந்தியுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பீகாரில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் தன்னிச்சையாக தம்மை அறிவித்தார்.
வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல்காந்தி மற்றும் அகிலேஷ் யாதவின் முன்னிலையில் தேஜஸ்வி யாதவ் இதனை அறிவித்தார்.
Next Story






