என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bihar assembly"

    • பீகார் மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
    • இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சியை கைப்பற்றியது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி 202 தொகுதிகளில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.

    இதையடுத்து, பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார்.

    இந்நிலையில், பீகார் சட்டசபை டிசம்பர் 1-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியது.

    இந்தக் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சபாநாயகராக ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவருமான நாராயணன் செயல்பட்டு வருகிறார்.

    இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
    • சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது.

    பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பீகார் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகார் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.

    2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

    பீகார் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரிடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதே போல சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.

    இதனால் பீகார் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

    வாக்காளர் பட்டியலில் முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டு தற்போது 7.42 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    பீகாரில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. லோக் ஜன சக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

    • பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அம்மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

    ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. கூட்டணியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் தீவிரமாக உள்ளன. இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதில், பீகாரில் காங்கிரஸ் கட்சி அமைத்தால் பெண்களுக்கு 2500 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    • 2005ல் முதல்முறையாக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்
    • இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் என்பது குறிப்பிடத்தக்கது

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம் சமர்ப்பித்தார். புது அரசு உருவாகும் வரை நிதிஷ் காபந்து முதல்வராக நீடிப்பார்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அரசியல் பயணத்தில் அதிக யு-டர்ன் அடித்த தலைவர்

    2000ல் முதல் முறையாக முதல்வரான நிதிஷ், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் பதவியை துறந்தார்.

    2005ல் பா.ஜ.க.வுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார்.


    2013ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நரேந்திர மோடியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய கூட்டணியில் முடிவு எடுக்கப்பட்டது. இதை தீவிரமாக எதிர்த்த நிதிஷ், சுமார் 17-வருட கால கூட்டணியை முறித்தார்.


    தொடர்ந்து 2014 மக்களவை தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிட்டார். ஆனால், நிதிஷ் குமாரால் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து, கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அக்கட்சியின் ஜிதேன் ராம் மஞ்சி முதல்வரானார்.

    2015 பீஹார் சட்டசபை தேர்தலில், தனது அரசியல் எதிரியான லல்லு பிரசாத் யாதவின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

    ஆனாலும், 2016ல் பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டி செயலாக்கத்தையும் லல்லு உட்பட பலர் எதிர்த்தாலும், நிதிஷ் ஆதரித்தார்.


    2017ல் லல்லுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல்வர் பதவியை மீண்டும் ராஜினாமா செய்தார். ஆனால், உடனடியாக தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் மீண்டும் முதல்வரானார்.

    2020ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்.

    2022 ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க.விற்கு மாநிலத்தில் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து கூட்டணியை மீண்டும் உடைத்தார்.

    ஆனால் அடுத்த நாள், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெல்வதையும், பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவதையும் தடுக்க மோடி எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு, கடந்த வருடம், காங்கிரஸ் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளின் ஒத்துழைப்புடன் "இந்தியா கூட்டணி" எனும் பெரும் கூட்டணி உருவானது.

    அந்த கூட்டணியில் மம்தா, கெஜ்ரிவால் போன்ற தலைவர்களை போல் முக்கிய உறுப்பினராக இருந்தவர் நிதிஷ் குமார்.


    இந்நிலையில், தற்போது நிதிஷ் மீண்டும் முதல்வர் பதவியை துறந்து விட்டார்.

    மீண்டும் தான் எதிர்த்த பா.ஜ.க.வுடன் இணைந்து அக்கட்சி பிரமுகர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி, நிதிஷ் முதல்வராக முயல்வதாக வெளியாகி உள்ள தகவல்களால் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அரசியல் வாழ்க்கையில் தான் எதிர்த்தவர்களிடமே ஆதரவு கோரி முதல்வர் பதவியில் தொடர்வது நிதிஷ் குமாருக்கு கை வந்த கலை என சமூக வலைதளங்களில் பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    • பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்
    • 125 பேர் ஆதரவும், 112 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது

    பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

    இன்று நிதிஷ் குமாரின் ஆட்சி மீதான நம்பிக்கை குறித்து முடிவாக உள்ள நிலையில், முன்னதாக சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரி (Awadh Bihari Choudhary) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிர்த்து 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    இதனையடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்ஜேடி கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ், பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வரானார்
    • 243 இடங்கள் உள்ள சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 இடங்கள் வேண்டும்

    பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்.

    கடந்த ஜனவரி 28 அன்று அக்கூட்டணியிலிருந்து விலகி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.

    இன்று நிதிஷ் குமார் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    பீகார் மாநில சட்டசபையில் 243 இடங்கள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது.

    முன்னதாக, சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து சவுத்ரி பதவி விலகி, துணை சபாநாயகர் மகேஸ்வர் அசாரி (Maheswar Hazari) புதிய சபாநாயகராக பொறுப்பேற்றார்.

    ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவினர். தேஜஸ்வி யாதவ் தலைமையில் எதிர் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    புதிய சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் 129 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்ததால் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்.



    • சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டார்.
    • சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் செயல்பட்டு வருகிறார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.

    இதற்கிடையே, கடந்த மாதம் கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், திடீரென பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதா தள நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரியும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டார்.

    சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் செயல்பட்டு வருகிறார்.

    ×