என் மலர்
இந்தியா

என்.டி.ஏ. வென்றால் நிதிஷ்குமார் மீண்டும் முதல் மந்திரியா?: அமித்ஷா விளக்கம்
- பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
- பதிவான வாக்குகளை எண்ணும் பணி 14ம் தேதி நடைபெறுகிறது.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நவம்பர் 6, 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 101, லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் (எல்ஜேபி-ஆர்) 29 , ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 6 , இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொது அவர் கூறியதாவது:
பீகார் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ்குமார்தான் முதல் மந்திரியா என்பதை நான் முடிவு செய்ய முடியாது.
இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி நிதிஷ்குமார் தலைமையில் போட்டியிடுகிறது என்பதை மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியும்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி பேசி அதை முடிவு செய்வார்கள்.
பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை கண்ட மக்கள் மீண்டும் அந்தக் கட்சியை ஆட்சியில் அமர வைக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.






