என் மலர்
நீங்கள் தேடியது "இலங்கை கடற்படை"
- தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன.
- மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது எந்திரப் படகினையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளதென குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 2024-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பி உள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்து உள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
- இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
- 102 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், 6 படகுகள் ஐ.எம்.பி. எல்லை தாண்டியதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி:
காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க எம். பி. க. செல்வம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
மார்ச் 12 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்களை விடு விக்ககோரி, தமிழக முதலமைச்சர் மார்ச் 13 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது ஒரு மாதத்திற்குள் மூன்றாவது சம்பவமாகும். மேலும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கிறது. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் மனதில் அச்ச மனநோயை உருவாக்குகிறது. 102 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், 6 படகுகள் ஐ.எம்.பி. எல்லை தாண்டியதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையால் விடுவிக்கப்பட்டவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. முன்னதாக, தமிழகத்தின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் (தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) அவர்களது இயந்திரப் படகுகளுடன் பிரித்தானியரின் டியாகோ கார்சியாவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். எனவே, அனைத்து இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி கப்பலையும் உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- மீனவர்களின் விசைப்படகையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்கள் 14 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






