என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu fishermen arrest"

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன.
    • மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது எந்திரப் படகினையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளதென குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 2024-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பி உள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்து உள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது. #TNFishermen
    மனாமா:

    பஹ்ரைன் நாட்டில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேர் சவுதி கடல் எல்லைப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சவுதி அரேபியா கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த மீனவர்களை கைது செய்தனர். #TNFishermen
    ×