search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கை கடற்படை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
    X

    ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் மீனவர் சங்க நிர்வாகிகள் குழு டெல்லியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவை சந்தித்து மனு அளித்தனர்.

    இலங்கை கடற்படை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

    • தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
    • டெல்லியில் மத்திய மந்திரியிடம் ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ குழுவினர் மனு அளித்தனர்.

    ராமேசுவரம்

    மன்னார் வளைகுடா கடலில் காற்றாலை அமைக் கும் திட்டம், கடல் அட்டை தடை நீக்கம், இலங்கை கடற் படை தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவை ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க நிர்வாக குழுவி னர் டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் மீனவர் சங்க நிர்வாகிகள் குழுவினர் அளித்த மனுவில் கூறியதாவது:-

    மந்திரியிடம் மனு

    மன்னார் வளைகுடா பகுதி ராமநாதபுரம் மாவட் டம் பாம்பன் தீவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரவியுள்ளது. இது 10,500 சதுர கி.மீ. பரப்ப ளவைக் கொண்டது. இதில் பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை 560 சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட 21 தீவுகள் மன்னார் வளை குடா கடல் வாழ் உயிரின தேசியப் பூங்காவாக 1986-ல் மத்திய அரசால் அறிவிக் கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இது தென்கிழக்கு ஆசியா வில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும். இப்பகுதியில் 2,700-க்கும் மேற்பட்ட பல்வகை கடல் வாழ் உயிரி னங்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் கொண்டு வருவது மீன் வளத்தையும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அத்துடன் மீன வர் வாழ்வாதாரம் பேர ழிவை சந்திக்கும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இலங்கை கடற்படையி னர் பல ஆண்டுகளாக நமது மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தடுத்தது நிறுத் தப்பட்டவேண்டும். இப்பி ரச்சினைக்கு நிரந்தர தீர்வு கான ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தின் கீழ் மீனவர்க ளுக்கு 100 சதவீதம் மானி யத்துடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் கடல் அட்டைகளை பிடிக்க தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, மீனவர்கள் நலன் கருதி கடல் அட்டை களை ஏற்றுமதி செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க் கின்றனர். கடல் அட்டைகள் பிடிப்பதற்கான சிறப்பு வலை இல்லாததால், கடல் அட்டைகள் மீன்பிடி வலை யில் தானாகவே சிக்குகின் றன. கடல் அட்டைகள் அழிந்து வரும் இனம் அல்ல ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 லட்சம் குஞ்சுகளை பொரிக்கும் திறன் கொண் டது

    கடந்த 22 ஆண்டுகளாக கடல் வெள்ளரிக்கு விதிக் கப்பட்ட தடையால் அதனை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. பல வெளிநா டுகளில் கடல் அட்டைகளை பிடித்தல் முறைப்படுத்தப் பட்டு அனு மதி வழங்கப்பட் டுள்ளது. இதனை அடிப்ப டையாகக் கொண்டு நமது நாட்டிலும் அனுமதி வழங்கு மாறு கேட்டுக்கொள்கின் றோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த குழுவில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் செந்தில், அழகுபாண்டி, முகேஷ், மீனவ மகளிர் சங்க நிர்வாகிகள் வடகொரியா, ஏ.சண்முககனி, காளியம் மாள், அனிதாசீலி, லெட்சுமி, ஆ.நம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×