search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Rajakannappan"

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்தில் நிரந்தர மேற்கூரையை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
    • முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் மற்றும் கமுதி வட்டத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் விழாவை–யொட்டி மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டப்பணி களை பார்வையிடுதல் மற் றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் பங்கேற்பு

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப் பினர் முருகேசன் முன்னி லையில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புதிய திட்டப்பணிகளை பார்வையிட்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத் தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச் சர் ராஜகண்ணப்பன் பர மக்குடி வட்டம், பார்த்திப னூர் பகுதியில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையிலி ருந்து கமுதி புறவழிச்சாலை ரூ.35.24 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினை பார்வை யிட்டு, நாளை (30.10.2023) பசும்பொனில் நடைபெறு கின்ற பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பொதுமக்க ளுக்கு பயன்பெறும் வகை யில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன், இந்த புறவழிச்சாலையின் மூலம் பசும்பொன்னிற்கு வரக்கூடியவர்கள் பார்த்தி பனூர் நகர் பகுதிக்குள் வராமலும் எந்த ஒரு இடையூ றுமின்றி பசும்பொன் செல் வதற்கு ஏதுவாக பயனுள்ள தாக இருக்கும் என தெரி வித்தார்.

    பின்னர் அபிராமம் அருகே உள்ள மார்னிங் ஸ்டார் பெண்கல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணி கள் நிழற்குடை மற்றும் பசும்பொன்னில் முதுகுளத் தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட் டப்பட்ட பயணிகள் நிழற்கு டையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் சென்று வரும் வழியில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் நிரந் தர மேற்கூரை அமைக்கப் பட்டுள்ளதை அமைச்சர் திறந்து வைத்தார்.

    பின்னர் பசும்பொன்னில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுப்புறத் தார்சா லையினை பார்வையிட்ட துடன், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மருத் துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளை போதியளவு அமைத்து செயல்படுத்திட வேண்டுமென அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரெத்தினசாமி, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜா, கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ் செல்வி, கமுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாசு தேவன், வட்டாட்சியர் சேது ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    • வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள்.
    • முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் வினா-விடை நேரத்தில் வந்தவாசி தொகுதியில் கோரைப்பாய் நெசவு பூங்கா அமைக்க அரசு முன் வருமா? என வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:-

    கதர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வந்தவாசி மத்திய பாய் நெசவாளர்கள் மற்றும் கோரை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் 1962 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உயர்ந்துள்ளது.

    சங்கத்தில் 36 வகைகளில் காதி கிராப்ட், அரசு மருத்துவமனைகள் சர்வோதய சங்கங்கள், அரசு பள்ளிகள், கல்லூரி விடுதிகள் அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் வாரியத்தால் நடத்தப்படும் கண்காட்சிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள். இச்சங்கத்தின் பாய் வகைகள் கதர் வாரியத்தின் வழிகாட்டுதலின்படி உரிய வகையில் சந்தை படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தில் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய ஒரு பாய் உற்பத்தி செய்யும் சங்கம் உள்ளது. வந்தவாசியிலும் சிறுபான்மையினர் சார்பில் அதிக நபர்கள் வசிக்கிறார்கள். இடம் வழங்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.

    ஆவூர் மற்றும் வந்தவாசியில் பாய் நெசவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். சீர்காழியில் இருக்கும் பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது இல்லை. அதே போன்று பாய் நெசவு பூங்கா அமைத்து தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கீழ்பெண்ணாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப் பன், "ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து மின்சாரத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பாய் நெசவு தொழில் பொருட்கள் அரசு நிறுவனங்களுக்கு முறையாக அளிக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி அல்லது ஆவூரில் பாய் உற்பத்தியாளர் சங்கம் அமைக்கப்பட்டு பாய் நெசவுப் பூங்கா அமைப்பது குறித்து இடம் வழங்கப்படுமானால் பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    • பனை விதைகள் நடும் தொடக்க விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
    • நிர்வாகிகள், உறுப்பினர்கள்‌ திரளாக கலந்து கொண்ட னர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பை யூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரி யம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உத்தரவின்படி, சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாரா யணன் வழிகாட்டுதலின் படி பனை விதை நடும் விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வ நாதன் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், பனைமர வாரிய ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கலா கணேசன்,

    சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் பி.ஜி.ஜெகன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முரு கன், சாயல்குடி பேரூர் கழக செயலாளர் ஜெயபால், நகர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் குலாம் மைதீன், ஆப்பனூர் ஆறுமுக வேல், கோவிந்தராஜ், அண்ணாமலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநி திகள், பனைமர தொழிலா ளர் நலவாரியம் சார்ந்தோர், மற்றும் பொதுமக்கள், தமிழ் நாடு நாடார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.

    • அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவாஸ் கனி எம்.பி. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த நவாஸ் கனி எம்.பி., இது குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்கு புரிகிறது. ஆனால் கவர்னருக்கு புரியவில்லை.

    திசையன்விளை,மே.11-

    திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்திற்கு ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன்

    ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாவட்ட முன்னாள் பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாபுரம் யூனியன் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிற்படு த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு இணைந்து கலைஞருக்கு பிறகு இவர்தான் தகுதியான தலைவர் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்கு புரிகிறது. ஆனால் கவர்னருக்கு புரியவில்லை.

    திராவிட மாடல் ஆட்சி

    எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. கூட்டணி தர்ம த்தை மதிப்பவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால் தான் தொழிலாளர் சட்டத்தை வாபஸ் பெற்றார். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு காலாவதியாகி விட்டது. இனி தி.மு.க. தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். அண்ணா மலைக்கும், கவர்னர் ரவிக்கும் அரசியல் தெரியாது. அவர்கள் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகமணி, மார்த்தாண்டம், மாவட்ட பிரதிநிதி சமுகை முரளி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை நகர இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் ராஜா, உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி. அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் எம்.என். கண்ணன் நன்றி கூறினார்.

    • இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது.

    மதுரை:

    மதுரை முத்துப்பட்டியில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் ரூ.23 லட்சம் மதிப்பிலான கட்டிடப் பணிகளை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் செயல்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் கடந்த ஆட்சியை விட திறம்பட செயல்பட்டு வருகின்றன.

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை சார்பிலான பள்ளிகளில் நடைபெறும் கட்டிடப் பணிகளையும், வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

    இன்று மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. கள்ளர் சீரமைப்பு துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளை மேம்படுத்த முதலமைச்சர் ரூ.100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

    மேலும் தமிழக முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் 1356 பள்ளிகளிலும், விடுதிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், கள்ளர் சீரமைப்புத்துறை செயலாளர் நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக அரசு விழாவில் கலந்து கொள்ள 7-ந்தேதி நெல்லை வருகிறார்.
    • கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வரும் அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    நெல்லை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள்(புதன்கிழமை) நெல்லை வருகிறார். 8-ந்தேதி காலை நெல்லை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்கும் அவர் நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்து முடிந்த பணிகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

    இதையொட்டி நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று முதல்முறையாக அரசு விழாவில் கலந்து கொள்ள 7-ந்தேதி நெல்லை வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வரும் அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அன்று இரவு தாழையூத்தில் தங்கும் அவர், மறுநாள் காலை (8-ந்தேதி) நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்கிறார். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுமார் ரூ.330 கோடி மதிப்பில் சுமார் 29 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். தமிழகத்தில் 88 சதவீதம் பேர் திராவிட இயக்க மக்கள் தான் உள்ளனர். தமிழகத்தில் திராவிட ஆட்சிதான் எப்போதும் நடக்கும். வேறு யாரும் கால் ஊன்ற முடியாது.

    திராவிட இயக்கத்தின் ஒரே தலைவராக நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உள்ளார்.

    பெண்களுக்கு 50 சதவீதமும் பொறுப்புகள் அளித்து முன்மாதிரி கட்சியாக தி.மு.க. விளங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 வாரங்களாக கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளது.
    • விரைவில் அனைத்து குவாரிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் அரசின் ஆய்வில் உள்ளது

    நெல்லை:

    நெல்லையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெருமை அடைகிறேன். தகுதியும் திறமையும் உள்ள அனைவரும் நல்ல2 நிலையை அடைய முடியும்.

    கல்விக்கு தமிழகம் தான் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் தான் கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகம்தான் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு சென்னை உள்பட 3 மாவட்டங்களில் சற்று அதிகரித்துள்ளது. எனினும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 வாரங்களாக கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளது. ஆனாலும் இதுவரை கல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கல்குவாரியை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர் என்பது மறுக்க முடியாதது.

    விரைவில் அனைத்து குவாரிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில் குவாரிகள் திறக்கப்படும்.

    3 சதவீதம் வரையிலான குவாரிகள் சட்டவிரோதமானவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து குவாரிகளையும் மூட வேண்டும் என்பது அரசினுடைய நோக்கம் அல்ல என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    • கல்வியில் முன்னேற்றம் அடையும்போது எல்லா துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும்.
    • தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி கனவு என்ற தலைப்பில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் பாளை சாரதா கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கல்வியில் முன்னேற்றம் அடையும்போது எல்லா துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும். நம் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

    இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிவிகள் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

    இத்திட்டத்தின் மூலம் 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவ-மாணவிகள் எதிர்காலத்தில் உயர்கல்வி கற்பதை எளிமையாக தங்களின் திறமைக்கேற்ப நீங்களே தேர்தெடுத்து படிக்க உறுதுணையாக இருக்கும்.

    மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியெல்லாம் நீங்கள் இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது.

    இருந்தாலும் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தப்படிப்புகளை தேர்தெடுக்கலாம், எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன, இதையெல்லாம் எடுத்து கூறி நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான் இந்த நிகழ்ச்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் நூல்களை வழங்கினார். மேலும் 12 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 156.25 லட்சம் கல்விக்கடன் உதவிகளையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷாப், திட்டஇயக்குனர் பழனி, தேசிய தகவலியல் மையம் ஆறுமுகநயினார், பாளை யூனியன் தலைவர் தங்கப்பாண்டியன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் முன்னிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் விநியோகம், சீரான குடிநீர் விநியோகம், காவிரி கூட்டு குடிநீர் விநியோகத் திட்ட பராமரிப்பு, வடகிழக்கு பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா மற்றும் பருவமழைக்கால வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மின்சார விநியோகம், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

    பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்டத்தில் எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 42 இடங்கள் கண்டறியப்பட்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடரை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் தற்போது வரை மழை வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும் விழிப்புடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான போதிய உரம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தன. உடனடி நடவடிக்கை மூலம் இன்று மாவட்டத்திற்கு 1,300 டன் அளவில் உரம் வர உள்ளன. இதனை அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்படும்.

    உரத்தட்டுப்பாடு என்ற வார்த்தைக்கே இடம் இல்லாத வகையில் இந்த அரசு செயல்படும்.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருகிற நிதியாண்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.

    தமிழக போக்குவரத்து துறைக்கு புதிதாக 2,500 பஸ்கள் வாங்கப்பட உள்ளன. அவைகளில் 500 பஸ்கள் மின்னணு பஸ்களாகும். மேலும் பழுதான பஸ்களை சீரமைக்க நிதி உதவி கேட்டுள்ளோம். இன்னும் 2,3 மாதங்களுக்குள் அந்த பஸ்களை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×