search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "decree"

    • தேர்வு நிலை அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.
    • ஊதிய மாற்ற அரசாணை நிறைவேற்ற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகராஜன் மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்.ராஜேந்திரன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலாளர் பணி விதிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை அரசாணையை நிறைவேற்ற வேண்டும்,

    கணினி உதவியாளர் பணி வரன்முறை மற்றும் ஊதிய மாற்ற அரசாணை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட துணை தலைவர் நடராஜன், சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா, மாவட்ட துணை தலைவர் லதா, சௌந்தரபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். முடிவில் மாநில பொருப்பாளர் மாரி.தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

    • அரசாணை வெளியானதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மாணவிகளின் நலன் கருதி சீர்மரபினர் மாணவிகள் விடுதி தொடங்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தேவர் கல்லூரி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவிகள் விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவுக் கல்லூரியில் படிக்கும் 100 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் புதிதாக விடுதி கட்டிடம் கட்ட கடந்த 9-ந் தேதி அரசாணை வெளியானது.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • பீடி தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை
    • கலெக்டருக்கு மனு

    திருப்பத்தூர்:

    மாநில காங்கிரஸ் பீடி தொழி லாளர்கள் நல சம்மேளனத் தின் மாநில பொதுச்செயலா ளர் ஆர்.முனிராஜ் தமிழக முதல் - அமச்சர். மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார்.

    அதில் வேலூர், திருப்பத்தூர் ஒருங் கிணைந்த மாவட்டத்தில் 10 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நீண்டநாளுக்கு பிறகு 10.5.2022 அன்று நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்.கிரிலோஷ் குமார், முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் உ.லட்சுமிகாந்தன் முன்னி லையிலும், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராமசந்திரன், தொழிலாளர் துறை ஆணை யாளர்அப்துல் காதர், உதவி ஆணையாளர் இந்துமதி, வேலூர், திருநெல்வேலி மாவட்ட பீடி உற்பத்தியாளர் சங்கம், ஐ.என்.டி.யு.சி. பீடி தொழிலாளர் நல சங்கம் சார்பில் தமிழ்நாடு பீடி தொழிலாளர்கள் சம்மேளத்தின் மாநில தலைவர் சி.சுப்பிரமணி, மாநில பொதுச் செயலாளர் முனீராஜி ஆகியோரும் கலந்து கொண்டு கையொப் இடப்பட்டது.

    பம் இன்றைய தேதி வரையில் இந்த ஒப்பந்த அரசாணை வெளிவரவில்லை. ஆகையால் முன் தேதியிட்டு உடனடியாக தொழிலாளர்கள் நலன் கருதி அரசாணையை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

    • 817 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது,
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அலாவுதீன், துணைமுதல்வர் சேக்தாவூது ஆகியோர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 817 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடந்தது.

    இதில் துணைமுதல்வர் மற்றும் வேலை வாய்ப்பு முதன்மை ஓருங்கிணைப்பாளருமான சேக்தாவுது பேசியதாவது:-

    கடந்த 15 ஆண்டுகளில் 15 ஆயிரம் மாணவர்கள் வளாக நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டு ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாமில் இதுவரை தேர்வு செய்யப்பட்ட 817 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனமான ஓசூர் அசோக் லேலாண்ட், லுகாஸ் டி.வி.எஸ்., கேட்டர்பில்லர் இந்தியா ஓசூர் டி.வி.எஸ்.சுந்தரம் ஆட்டோ காம்போனன்ஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, விப்ரோ சிஸ்டம்ஸ் மற்றும் டி.வி.எஸ்.ட்ரைனிங் மற்றும் சர்வீசஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எந்திரவியல்துறை, மின்னியியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை, கனிணித்துறை மற்றும் கப்பல்துறைகளில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார்.

    எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் ஹமீது இப்ராகிம் சிறப்புரையாற்றி வேலைவாய்ப்பு முகாமில் வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 817 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல் முதுநிலை விரிவுரையாளார் மரியதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அலாவுதீன், துணைமுதல்வர் சேக்தாவூது ஆகியோர் செய்திருந்தனர்.

    ×