search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Raja Kannappan"

    • பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
    • துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.

    ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

    தமிழகம் முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெருமை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் பிரச்சனை இன்றோடு முடிந்துவிடும் என்று அவர் கூறினார்.

    • கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
    • பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்கியது. கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    இந்நிலையில், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார்.

    • திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
    • போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே கண்டாங்கி பட்டியில் உள்ள மவுண்ட் லிட்டரா சி.பி.எஸ்.இ. பள்ளியில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மாநிலங்களுக்கு இடையே தமிழக மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 19 வயதுக்குட்பட்ட 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். இறுதி நாள் போட்டியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு பரிசு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் பல தடைகளை மீறி சிறப்பான மக்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். 8½ கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் குறை இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் அணி திரள வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட மாணவ விடுதிகளில் உணவு, சமையலறை, கூடுதல் இடவசதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசின் மீதும், நிர்வாகம் மீதும் விமர்சனங்கள் வருகின்றன.
    • எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வார்கள். அரசுக்கும் அது தெரியும்.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கும் பங்க் திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

    இந்த தொகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நவாஸ்கனி எம்.பி.யும் அவரால் என்ன செய்ய முடியுமோ, அதனை செய்து வருகிறார்.

    தி.மு.க. அரசின் மீதும், நிர்வாகம் மீதும் விமர்சனங்கள் வருகின்றன. இதேபோல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் சமூக வலைதளத்திலும் குறைகள் கூறப்பட்டு வருகிறது. இது இயல்பானது. இதற்காக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வார்கள். அரசுக்கும் அது தெரியும்.

    விமர்சனங்கள் செய்கிறார்கள் என்பதற்காக வீடு வீடாக சென்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாத்திரங்களை துலக்க முடியாது. பொதுமக்களுக்கு தேவையானவற்றை நேரம் வரும்போது சரியாக செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மழை காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் 17 ஆயிரத்து 576 பஸ்கள் பொது மக்களுக்கு இடையூறு இன்றி இயக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்து இருந்த தியாகராயநகர், மந்தைவெளி பணிமனை மற்றும் பட்டினப்பாக்கம், தியாகராயநகர் பஸ் நிலையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வு முடிந்த பின்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 31 பணிமனைகள் சென்னையில் உள்ளன. இந்த 31 பணிமனைகளில் மந்தைவெளி மற்றும் தியாகராயநகர் ஆகிய 2 பணிமனைகளில் மட்டுமே மழைநீர் தேங்கி இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து, இந்த 2 பணிமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டேன். அதில் மந்தைவெளி பணிமனையில் மழைநீரானது முழுவதுமாக அகற்றப்பட்டு உள்ளது. தியாகராயநகர் பணிமனையில் மழைநீரினை மின்மோட்டார் மூலம் உடனடியாக அகற்றிடும் பணி நடந்து வருகிறது. இந்த மழை காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் 17 ஆயிரத்து 576 பஸ்கள் பொது மக்களுக்கு இடையூறு இன்றி இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×