என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - எ.வ.வேலு விளக்கம்
    X

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - எ.வ.வேலு விளக்கம்

    • சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
    • கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தே.மு.தி.க. தொடங்கி உள்ளது.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. -பா.ஜ.க. அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.

    சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளது.

    234 தொகுதிகளிலும் விருப்ப மனு விநியோகத்தை த.வெ.க. தொடங்கி உள்ளது.

    சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தே.மு.தி.க. தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வுடன் தி.மு.க. சார்பில் அமைச்சர் எ.வ.வேலு பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில்,

    * தே.மு.தி.க.வுடன் எந்த பேச்சுவார்த்தையும் நான் நடத்தவில்லை.

    * கூட்டணி குறித்து தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×