search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயத்தாறில் கார் மோதி வாலிபர் பலி
    X

    கயத்தாறில் கார் மோதி வாலிபர் பலி

    நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் சுரேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள பருத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது19). இவர் 11-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று சுரேஷ் பொருட்கள் வாங்குவதற்காக நாற்கர சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் சுரேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி ஆகியோர் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து விசாரணையின் பேரில் சாத்தூர் சோதனை சாவடியில் சுரேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மடக்கி பிடித்தார். பின்னர் காரை ஓட்டி வந்த மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த அய்யாத்துரை மகன் மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×