search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே சாஸ்தா கோவிலில் உண்டியல்களை உடைத்து திருட்டு
    X

    உடைக்கப்பட்ட உண்டியல்கள்.

    கயத்தாறு அருகே சாஸ்தா கோவிலில் உண்டியல்களை உடைத்து திருட்டு

    • கயத்தாறு அருகே சாஸ்தா கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
    • சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமத்தில் பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி கோவில் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கோவிலில் உள்ள 3 உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா கிருஷ்ணன் மற்றும் நாட்டாமைகள் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டோனிதீலீப், காசி லிங்கம், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×