search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு பன்னீர்குளத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
    X

    முகாம் நடைபெற்ற காட்சி

    கயத்தாறு பன்னீர்குளத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

    • ஊராட்சிமன்ற தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கால்நடைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகளும், மருந்து- மாத்திரைகள் வழங்கினர்

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமை தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி இயக்குனர் டாக்டர் விஜய்ஸ்ரீ, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் மனோஜ் குமார், புனிதா ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகளும், மருந்து- மாத்திரைகள் வழங்கினர். இதில் 550 பசு மாடுகள், 1700 செம்மறி ஆடுகள், 360 வெள்ளாடுகள், 400 கோழிகள் ஆகியவற்றிற்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை கயத்தாறு கால்நடை மருத்துவ அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×