search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில்  அருகே கால்நடை மருத்துவ முகாம்
    X

    கோப்புபடம். 

    வெள்ளகோவில் அருகே கால்நடை மருத்துவ முகாம்

    • முகாமில் கலந்து கொண்ட 204 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • துரைசாமி உட்பட விவசாயிகள், கால்நடை மருத்துவ பணியாளர்கள்அ,லுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்.டிச.28-

    வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி கள்ளமடை என்ற இடத்தில் திருப்பூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பிரகாசம் தலைமையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமில் கலந்து கொண்ட 204 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 865 செம்மறி ஆடுகள், 137 வெள்ளாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டது.

    நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டது. தற்போது கால்நடைகளை அம்மை நோய் தாக்கி வருவதால் வெள்ளகோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 8 கால்நடை மருந்தகங்களில்,கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்டு நோய்களிலிருந்து கால்நடைகளை காப்பாற்றி கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவர் பகலவன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த முகாமில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் முன்னாள் பாசன சபை தலைவர் துரைசாமி உட்பட விவசாயிகள், கால்நடை மருத்துவ பணியாளர்கள்அ,லுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×