search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாம்
    X

    கால்நடை மருத்துவ முகாம்

    • கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலமானாங்கரை கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கீழச்சாக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் அகத்தியன், சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் இளமதி, கால்நடை உதவியாளர்கள் அன்னலட்சுமி, தங்கராசு ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    193 மாடுகளும், 486 வெள்ளாடுகளுக்கும், 235 செம்மறியாடுகளுக்கும், 38 நாய்களுக்கும், 415 கோழிகளுக்கும் சிகிச்சை தரப்பட்டது. சிறந்த கிடேரி கன்று வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×