search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்
    X

    மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்

    • மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம் நாளை 3 மண்டலங்களில் நடக்கிறது.
    • மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி சார்பில் நாளை (மார்ச் 25-ந் தேதி), கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மண்டலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மண்டலம் 1 (கிழக்கு) வார்டு எண்.16 முல்லை நகர் தனபால் உயர்நிலைப்பள்ளி, மண்டலம் 2 (வடக்கு) வார்டு எண்.22 தத்தனேரி மாநகராட்சி

    திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.75 சுந்தரராஜபுரம் மாநகராட்சி ஆரம்பபள்ளி ஆகிய 3 இடங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் இதயநோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் ஆகிய 10 துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொள்வார்கள்.மேலும் ரத்த எச்.பி. அளவு, ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவீடு, மலேரியா இரத்தத் தடவல், இ.சி.ஜி. கர்ப்பபைவாய், புற்றுநோய் பரிசோதனை, ஸ்கேன், கண்புரை அளவு, கொரோனா சளி பரிசோதனைககளும் மேற்கொள்ளப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இந்த தகவல் மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×