search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.


    கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

    • கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
    • முகாமில் மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள15-வது வார்டில் செபத்தையாபுரம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நட்டாத்தி பஞ்சாயத்து துணை தலைவர் பண்டாரம், சுப்பிரமணியபுரம் சேகர குரு டேவிட் ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் பொதுமக்கள் அனைவருக்கும் பொதுமருத்துவம் நீரழிவு நோய்,கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் லேப் கண் சிகிச்சை ஹோமியோபதி, சித்தா மருத்துவம் டெங்கு பற்றி விழிப்புணர்வு, தொழுநோய் சிகிச்சை, மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பணி செட்டி குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், தூய மேரி நர்சரி பள்ளி தாளாளர் சுதாகர் மைக்கேல், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், சுப்பிரமணிய புரம் சேகர பொருளாளர் தேவ ஆசிர்வாதம், செயளாலர் ஜோசப் மாசில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பொற்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை ஏரல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் செய்து இருந்தார்.

    Next Story
    ×