search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viral fever"

    • குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது.
    • சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக மழை பெய்து வருகிறது. பகலில் சில நேரங்களில் மழையும், வெயிலும் மாறி மாறி அடித்து வருகிறது.

    அத்துடன் இரவில் குளிர்வாட்டி வதைப்பதுடன் அதிகாலை பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்தக் காலநிலை மாற்றத்தால் ஈரோடு மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சளி, இருமலுடன் கூடிய ஒரு வகை வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.

    குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது.

    உடல் சோர்வு, தொண்டைவலி, சளி இருமலுடன் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது. வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் இந்த காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற காய்ச்சல்கள் வருவது இயல்புதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இதுபோன்ற காய்ச்சல், சளி வராமல் இருக்க மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

    காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் குடிநீரை காட்சி குடிக்க வேண்டும். 3 நாளைக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

    தன்னிச்சையாக மருந்தகங்களில் சென்று மாத்திரை வாங்கக்கூடாது. முக்கியமாக வீடுகளை சுற்றி நீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், உரல்கள் பாத்திரங்களை மூடி வைப்பது நல்லது.

    வீடுகளில் கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயம் அருந்தலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக மாறி உள்ளது.

    திருச்சி:

    பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 34 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 83 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தை களாவர். இதற்கிடையே நேற்று 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக மாறி உள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
    • சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல், சளி காய்ச்சல் அதிக அளவில் பொது மக்களை தாக்கி வருகிறது.

    சேலம்:

    நடப்பாண்டில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல், சளி காய்ச்சல் அதிக அளவில் பொது மக்களை தாக்கி வருகிறது.

    நிரம்பி வழியும் கூட்டம்

    இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்தி ரிகளில் காய்ச்சல் பாதித்தவர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சேலம் அரசு தலைமை ஆஸ்பத்தி ரிக்கு வழக்கமாக வெளி நோயாளிகளாக 10 முதல் 20 பேர் காய்ச்சல் சிகிச்சைக்கு வருவார்கள். ஆனால் தற்போது இது தினசரி 150 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி வெளி நோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் காத்து நின்று நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    மேலும் உள்நோயா ளிகளாக காய்ச்சல் சிறப்பு வார்டில் 30 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதில் 2 பேர் டெங்கு காய்ச்சலாலும், 2 பேர் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களும் அடங்குவர், இதே போல புறநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 20-க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    கை, கால் , தலை வலி

    தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகு பவர்களுக்கு கை, கால் வலி, தலை வலி, குளிர், இருமல், சோர்வு என பல்வேறு பாதிப்புகள் ஒரே நேரத்தில் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் பாதித்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகி றார்கள். எனவே காய்ச்சலை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.

    ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் காய்ச்சல் கட்டுக்குள் வரும் என சுகாதாரத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

    எச்சரிக்கை

    மேலும் வரும் நாட்களில் மழை அதிகம் பெய்யும் போது காய்ச்சல் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் குளிர்ந்த உணவுகளை தவிர்த்து சூடான உணவுகளை சாப்பிடு வதுடன், தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.

    • பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது.
    • பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    பெங்களூரு:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    அவர்களில் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், சிலர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் தற்போது அவரது அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    • மழை நீர் தேங்கி டெங்குவை உருவாக்குகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் இந்த காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா, எலி காய்ச்சல் போன்றவை இந்த அளவில் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு உள்ள இந்த காலத்தில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகக் கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதன் மூலம் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது.

    இதனால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, எலி காய்ச்சல் போன்றவை வைரஸ் கிருமிகளால் பாதிப்பை ஏற்படுத்தும். இதுதவிர தற்போதுள்ள காலநிலை மாற்றமும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை உண்டாக்குகிறது.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில் மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. மாறுபட்ட இந்த காலநிலையால் சளி, இருமல், தொண்டைவலி பாதிப்பு அதிகமாக உள்ளது.

    தும்மல், சளி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த வைரஸ் அடுத்துவரும் நாட்களில் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வழக்கமாக வரும் கேஸ்களைவிட தற்போது அரசு, தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

    பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். சளி, இருமல், தொண்டை வலி போன்ற சாதாரண பாதிப்புகளுடன் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள்.

    இந்த பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெரியவர்கள் அதில் இருந்து விடுபட ஒரு வாரம் ஆகிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. குழந்தை மருத்துவரிடம் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. கடந்த வாரம் மழைவிட்டு விட்டு பெய்தும் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 4 நாட்கள் நீடித்த ரம்மியமான சூழலை தொடர்ந்து வெயில் சுட்டெரித்தது. இயல்பு நிலையைவிட வெயில் அதிகரித்துள்ளது. இதனால் உடலில் உஷ்ணம் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    குளிர்ந்த தண்ணீர் குடிப்பது, ஏ.சி.யில் உறங்குவது போன்றவற்றால் சிலருக்கு சளி, இருமல் தொந்தரவு அதிகமாகி காய்ச்சல் பாதித்தது.

    இதுகுறித்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது, தற்போது ஒரு விதமான வைரஸ் பாதிப்பு உள்ளது. அது டெங்கு வைரஸ் இல்லை. ஆனால் டெங்குவிற்கான அறிகுறிகள் போலவே நோயாளிகளுக்கு உள்ளன.

    பரிசோதனை செய்து பார்த்தால் டெங்கு இல்லை என தெரிய வருகிறது. ஆனால் வேறு வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெங்கு பாசிட்டிவ் கேஸ்கள் நிறைய வருகின்றன.

    மழைநீர் தேங்கி டெங்குவை உருவாக்குகிறது. அதனால் சூடுநீர் குடிக்க வேண்டும். சூடான ஆகாரங்களை எடுக்க வேண்டும். கொசு பாதிப்பில் இருந்து காத்து கொள்ள பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    மற்றொரு மருத்துவர் கூறும்போது, தற்போது வரும் வைரஸ் காய்ச்சல் சாதாரணமானது தான். 3 நாட்களில் சரியாகி விடும். தற்போதுள்ள காலநிலை மாற்றத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் நோயாளிகள் அதிகமாக வருகின்றனர் என்றார்.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் இந்த காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா, எலி காய்ச்சல் போன்றவை இந்த அளவில் இருப்பது வழக்கம். பயப்படுகிற அளவிற்கு பாதிப்பு இல்லை. சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருவதால் கட்டுக்குள் உள்ளது. இது கொசு உற்பத்தி காலம்.

    அதனால் மழைநீரை வீட்டை சுற்று தேங்காமல் பார்த்து கொண்டால் டெங்கு வராது. பருவமழை தொடங்கும் காலம் வரை கொசு உற்பத்தியை தீவிரமாக கண்காணித்து ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எவ்வித புதிய வைரஸ் பாதிப்பும் இல்லை. சாதாரண வைரஸ் காய்ச்சல் நிலவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.
    • வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் ஒன்றியம் கோவில்ராமபுரம் ஊராட்சியில் போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.

    இதைத் தொடர்ந்து சிறுமிக்கு உண்ணி காய்ச்சல் வைரஸ் பரவியது என்று மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து கோணுழாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி அருள் ஆகியோர்கள் குழந்தையின் நலன் கருதியும் வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும் சுகாதார பணியாளர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு செய்து தடுப்பூசி மற்றும் சத்து மாத்திரைகளை வினியோகித்து வருகின்றனர்.

    இது குறித்து மருத்துவ அதிகாரி அபினேஷ் கூறியதாவது:-

    கிராமத்தில் வயல்வெளி பகுதிகள் செடி, கொடிகள் மண்டி கிடப்பதால் அதில் உள்ள சிறிய பூச்சிகள் மூலம் உண்ணி காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

    எனவே மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர்க்கு முன்பே அறிந்ததால் உரிய சிகிச்சை அளித்து வருகிறோம்.

    மேலும் கிராமங்களிலும், பரவாமல் தடுப்பு பணிகளை சுகதார பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்ணி காய்ச்சலுக்கு மக்கள் பீதி அடைய தேவை இல்லை என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு 119 பேர் பாதிப்பு அடைந்தனர்.
    • மேலும், 73 வயது முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    மும்பை:

    தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

    மார்ச் 8-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்ததாகவும், தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 119 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், 73 வயது முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

    • சிகிச்சை அளிக்க 30 படுக்கையுடன் கூடிய தனி வார்டு திறக்கப்பட்டு உள்ளது.
    • இந்த வார்டில் தற்போது காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை,

    நாடு முழுவதும் இன்புளூயன்சா வைரசான எச்3 என்2 என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி 2-ந் தேதி முதல் மார்ச் 5-ந் தேதி வரை 9 வாரங்களில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 451 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இத னையடுத்து மாநிலங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் 142 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் 10 பேர் பங்கேற்றனர்.

    மேலும் சுகாதாரத்துறை மருத்துவ ஊழியர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள், 8 வயதுக்குட்பட்ட குழந்தை கள் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசியை செ லுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது கோவை மாவட்டத்தில் இன்பு ளூயன்சா மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி எச்ச ரிக்கை செய்யப்பட்டு உள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் புற நோ யாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை யடுத்து காய்ச்சல் பாதிப்புடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வருப வர்களுக்கு சிகிச்சை அளிக்க 30 படுக்கைகளுடன் தனி வார்டு தயார் படுத்தப்பட்டு உள்ளது. இந்த வார்டில் தற்போது காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணி க்கை அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களை உள்நோயாளிகளான அனுமதித்து சிகிச்சை அளிக்க 30 படுக்கையுடன் கூடிய தனி வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 24 மணி நேரமும் கண்காணி க்கப்படுவார்கள். மருந்து கள் மற்றும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் தடுப்பூசிகளும் உள்ளன. சுகாதா ரத்துறையின் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் பேரில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாநகர் பகுதி மட்டும் அல்லாமல் ஊரக பகுதிகளிலும் இன்பு ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அவர்கள் கிராம புறங்களில் காய்ச்சல் தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    காய்ச்சல் பரவாமல் தடுக்க முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தினசரி 100 முகாம்களை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மற்றும் மருந்து, மாத்தி ரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள வர்கள் மற்றும் மூச்சு விட சிரமப்படும் நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பரவுவது தொடர்பான விழிப்பு ணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். தினசரி மாவட்டம் முழுவதும் 100 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 3 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் டா க்டர்களின் பரிந்துரையின்றி தன்னிச்சையாக மாத்திரைகளை வாங்கி சாப்பிட கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உரிய சிகிச்சை பெற்று 3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.

    இந்த காய்ச்சல் முதல் 3 நாட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும். பொதுமக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.
    • இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு ‘லிஸ்ட்’ அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வுகளை 25 லட்சம் முதல் 27 லட்சம் மாணவர்கள் வரை எழுதுகின்றனர்.

    ஒவ்வொரு தேர்விலும் வழக்கமாக 3 முதல் 4 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத வராமல் 'ஆப்சென்ட்' ஆவது வழக்கம்.

    ஆனால் நேற்று முன் தினம் தொடங்கிய பிளஸ்-2 தமிழ் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுத வரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளி படிப்பின் இறுதி கட்டமான பிளஸ்-2 பொது தேர்வை அதுவும், தாய் மொழியான தமிழ் பாடத்தையே 50,674 மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்தது கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை ஆகியவற்றை முக்கியமான காரணமாக கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.

    கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் முதல் நாளில் தேர்வு எழுத வராத நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராதது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் அரசுப் பள்ளியில் எவ்வளவு பேர் பரீட்சை எழுதவில்லை, தனியார் பள்ளிகளில் எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையில் விசாரித்தபோது கிடைத்த தகவல் வருமாறு:

    பிளஸ்-1 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 83 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று தற்போது பிளஸ்-2 படித்து வந்தனர்.

    மீதம் உள்ள மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில் பிளஸ்-2 வகுப்பில் எப்படி தேர்ச்சி பெற முடியும் என்று பயந்து படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டனர். ஆனால் இவர்கள் பள்ளிக் கூடங்களில் தொடர்ந்து படிப்பது போல் கணக்கு காட்டி மாணவர்களின் எண்ணிக்கையை குறையாமல் காண்பித்துள்ளனர்.

    இந்த மாணவர்களை இடைநிற்றலாக கணக்கு காட்டினால், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டில் பல்வேறு கேள்விகள் எழும்.

    இதை மறைக்கவே இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு 'லிஸ்ட்' அனுப்பி உள்ளனர்.

    அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் 'ஹால் டிக்கெட்' பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் வகுப்புக்கே வரவில்லை என்பதை மறைத்து ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தேர்வுக்கு வரவில்லை என்று கூறி 'ஆப்சென்ட்' பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் காரணம் தெரியவந்துள்ளது.

    மேலும் சில மாணவர்கள் தேர்வு பயம் காரணமாக தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    குறிப்பாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்த பல மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பில் பள்ளிகளில் பங்கேற்கவில்லை. பள்ளிக்கே சரியாக வராத இவர்கள் பரீட்சைக்கும் வரவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை என்கிறார்கள் அதிகாரிகள்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத சூழலில் 'ஆல் பாஸ்' நடைமுறை கொண்டு வரப்பட்டது.

    கொரோனா சரியான நிலையில் கடந்த ஆண்டு முழு பாடத்திட்டங்களோடு தேர்வு நடத்தப்படவில்லை. பாதி படத்திட்டத்தோடுதான் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பொதுத் தேர்வை சந்தித்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. முழு பாடத் திட்டத்தோடு தேர்வு நடைபெறுவதால் பல மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

    ஒட்டு மொத்தத்தில் கொரோனா தாக்கம் மாணவர்கள் மத்தியில் இன்னும் நீடிக்கிறது. அவர்களை மனதளவில் தயார் செய்திருக்க வேண்டும். பள்ளிக்கு சரிவர வராத மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குறை கூறி வருகின்றனர்.

    இதுபற்றி தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு குறைந்தபட்சம் இவ்வளவு என்று இருக்க வேண்டும். பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு டி.சி. கொடுக்க வேண்டும்.

    ஆனால் எதுவும் செய்வதில்லை. அரசு பள்ளியில் பள்ளிக்கே வராத மாணவர்களையும் படிப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். இது தவறு. அரசு பள்ளியின் பாலிசியை மாற்ற வேண்டும், என்றனர்.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டதற்கு மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணங்கள் என்ன என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் ஓரிரு நாளில் விளக்கமாக தெரிய படுத்தப்படும் என்றும் கூறினார்.

    • திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன.
    • புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன. வீடுகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை, சாக்கடை கழிவு நீர் கால்வாய் மற்றும் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகள், செடிகள் நிறைந்த புதர் பகுதி உள்ளிட்ட திறந்த வெளிப் பகுதிகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.

    இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, மாநகராட்சி சுகாதார பிரிவினர் கொசு மருந்து புகை அடித்தல் மற்றும் கொசு புழுஒழிப்பு மருந்து தெளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிக்கு மண்டலவாரியாக, புகை அடிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட தலா ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.சுகாதார பிரிவினர் கூறுகையில், 'வழக்கம் போல் சுழற்சி முறையில் பகுதிவாரியாக புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதார ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றனர்.

    • மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    திருப்பூர்:    

    காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில், வரும், 10ந்தேதி, மெகா மருத்துவ முகாம் நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான, 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.

    பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன், அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கி றது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்க ளுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும், 10ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று, அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.

    • வீட்டில் ஒருவருக்கு வந்தால்... அத்தனை பேரையும் சாய்த்து விடுகிறது.
    • சளி... இருமல் தொல்லை 15 நாட்கள் வரை நீடிப்பதால் கடும் அவதி.

    சென்னை:

    சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே அழைத்து வருகிறது.

    காய்ச்சல் வந்துவிட்டால் எழுந்து உட்கார முடியாத அளவுக்கு தலைவலி, இருமல் ஆகியவை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கிறது.

    அதனுடன் கை, கால் மூட்டு வலி உள்ளிட்டவையும் சேர்ந்து கொண்டு எப்போதும் படுத்தே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன.

    இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பனி காலத்தில் கொசு உற்பத்தி சென்னையில் மிக அதிகமாக உள்ளது.

    அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொசுக்கள் மூலமாக டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் நிலையில் புழு வைரஸ் என்ற புதுவித வைரஸ் தொற்றும் பரவி மக்களை காய்ச்சலில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

    சென்னை மட்டுமன்றி புறநகர் பகுதிகளிலும் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு இருந்து வருவதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார். இதனால் ஒவ்வொரு நாளும் சிறிய கிளினிக்குகள் கூட நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சராசரியாக முப்பது பேர் வரை வந்து செல்வதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.

    இந்த காய்ச்சல் தொடர்பாக டாக்டர்கள் கூறும் போது வீட்டில் ஒருவருக்கு வந்துவிட்டால் அடுத்தடுத்து அனைவரையும் முடக்கி போடும் வகையில் இந்த வைரஸ் காய்ச்சல் வீரியமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீடுகளில் இருந்து இருமும் போது துணியால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் உடனே வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் சளி பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சலில் கொண்டு போய் விட்டு விடும் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வழக்கமாக காய்ச்சல் தலைவலி வந்தால் மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இந்த காய்ச்சல் சரியாவதற்கு 15 நாட்கள் வரை ஆகிறது.

    இந்த 15 நாட்களும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது. மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதற்கும் சிரமமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    இந்த சளித்தொல்லை சிலருக்கு அதிகமாகி நுரையீரலில் போய் சளி கெட்டியாக தேங்கி விடுகிறது. இது இரவு நேரத்தில் தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. இது போன்ற நேரங்களில் நெபுலேசர் வழியாக மருந்தை செலுத்தி சளியை கரைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும் போது, சிலருக்கு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் திடீரென குறைந்து விடுகிறது. இது போன்ற பாதிப்புக்குள்ளாகும் நபர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

    எனவே லேசான சளி தொல்லை மற்றும் இருமல் ஏற்படும் போதே டாக்டர்களிடம் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

    சளி பிரச்சினை ஏற்பட் டால் மருந்து கடைகளில் சென்று டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது நல்லது அல்ல என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள். இது போன்ற நேரங்களில் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றவே மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும். மருந்து கடைகளில் நாமாகவே வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் சளியை உடலுக்குள்ளேயே தேங்கச் செய்து விடும்.

    இது நாளடைவில் இருமலை அதிகப்படுத்தி மூச்சு விடுவதற்கும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். எனவே தற்போதைய சூழலில் காய்ச்சல், சளிக்கு டாக்டர்களிடம் உரிய பரிசோதனை செய்த பிறகே மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.

    மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால் ரத்த பரிசோதனை கூடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இந்த காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பனி சீசன் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    ×