search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாமை ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம்

    • முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் கே.மேட்டுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
    • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    கோபி:

    தமிழக முதல்-அமைச்ச ரின் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பொம்ம நாயக்கன் பாளை யம் அடுத்த கே.மேட்டு ப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி யில் நடந்தது. இதில் 1062 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    இந்த முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முன்னதாக கோபிசெட்டி பாளையம் வட்டார சுகா தார மேற் பார்வையாளர் செல்வன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றி னார். பொம்மநாயக்கன் பாளையம் ஊராட்சி முன் னாள் தலைவர் சண்முக த்தரசு முன்னிலை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி உறு ப்பினர் சிவகாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துளசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 67 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, 127 பேருக்கு ஈசிஜி பரிசோதனை, 56பேரு க்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    மேலும் 539 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, 64 பேருக்கு விடிஆர்எல் பரிசோதனை, 890 பேருக்கு சிறுநீரில் உப்பு, சர்க்கரை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் 5 பேர் கண் அறுவை சிகி ச்சைக்கு அனுப்பி வைக்க ப்பட்டனர். காச நோயால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முகாமில் அமைக்கப்பட்ட டெங்கு, தொழு நோய், மக்களை தேடி மருத்துவம், காச நோய், எய்ட்ஸ் கட்டுப் பாடு, ஊட்டச்சத்து கண் காட்சியை ஏ.ஜி.வெங்கடா ச்சலம் எம்.எல்.ஏ. பார்வை யிட்டார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கல்பனா 138 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்தார்.

    கூகலூர் ஆரம்ப சுகா தார நிலைய டாக்டர் 124 பேருக்கு பல் சிகிச்சை அளித்தார். பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மூலம் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தோல் டாக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோபி செட்டிபாளையம் தஷின் மருத்துவ மனை குழுவின ரும், கோபிசெட்டிபாளை யம் எம்.எஸ். மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட த்தின் கீழ் மருத்துவ பரிசோதனை மேற் கொள்ள ப்பட்டது.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற் பார்வை யாளர் செல்வன் தலைமை யில் சுகாதார ஆய்வாளர்கள் சேதுராமன், சுகந்த், வேலு மணி, நவீன்குமார், சிவா, சக்திவேல், கிரண், செவிலி யர்கள் சுலோச்சனா, லதா ராணி உள்பட பலர் செய்திருந்தனர்.

    Next Story
    ×