search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் 30 பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    மாநகராட்சிகளில் அனைத்து பணிகளையும் ஒப்பந்ததாரர் மூலம் வழங்குவதற்கான அரசாணை 152 ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று நடந்த முற்றுகை போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், கணக்கர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தற்காலிக முறைப்படி அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 30 பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×