என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே ரூ.5½ லட்சத்தில் புதிய மின்மாற்றி
    X

    நெல்லை அருகே ரூ.5½ லட்சத்தில் புதிய மின்மாற்றி

    • சுத்தமல்லி விலக்கு அருகில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும்.

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வழிகாட்டுதலில் சுத்தமல்லி விலக்கு அருகில் நெல்லை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக ரூ.5 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும். நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் (கிராமப்புற கோட்டம்) குத்தாலிங்கம், உதவி செயற் பொறியாளர் (கிராமப்புற உபகோட்டம்) அலெக்சாண்டர், உதவி மின் பொறியாளர் (சுத்தமல்லி பிரிவு) வேலுசாமி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×