search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Transformer"

    • சிதம்பராபுரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
    • இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் கோட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வழிகாட்டுதலின் படியும் களக்காடு நகர்புற பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சிதம்பரா புரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர் ஏர்வாடி உபகோட்டம் செல்வகார்த்திக், உதவி மின் பொறியாளர் களக்காடு நகர்புற பிரிவு நலீம் மீரான் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி மேலப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்மாற்றியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி மேலப்பாளையம் மெயின் பஜார் பகுதியில், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், நெல்லை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் காளிதாசன் வழிகாட்டுதலின் படியும் வருங்கால மின் நுகர்வோர்களை கருத்தில் கொண்டும் சீரான மின் வினியோகம் வழங்க நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் காளிதாசன், உதவி செயற் பொறியாளர் சிதம்பரவடிவு , உதவி மின் பொறியாளர்கள் ரத்தினவேணி, கார்த்திக்குமார், ஜன்னத்துல் ஷிபாயா, வளர்மதி மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுத்தமல்லி விலக்கு அருகில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும்.

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வழிகாட்டுதலில் சுத்தமல்லி விலக்கு அருகில் நெல்லை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக ரூ.5 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும். நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் (கிராமப்புற கோட்டம்) குத்தாலிங்கம், உதவி செயற் பொறியாளர் (கிராமப்புற உபகோட்டம்) அலெக்சாண்டர், உதவி மின் பொறியாளர் (சுத்தமல்லி பிரிவு) வேலுசாமி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • எல்.எல்.நகரில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் உள்ள எல்.எல்.நகரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதனை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் மற்றும் கோவில்பட்டி, நாலாட்டி ன்புதூர், எப்போதுவென்றான், கயத்தாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த செயற் பொறியாளர், காளிமுத்து, கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர் முனியசாமி, குருசாமி, மிக்கேல், தங்கராஜ், வேலாயு தம், உதவி மின் பொறியாளர் பாலமுருகன், கயத்தாறு இளநிலை பொறி யாளர் சுரேஷ், சுப்பையா மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் செல்வகுமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • இந்த புதிய மின்மாற்றியினால் 60 மின் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.

    உடன்குடி:

    உடன்குடி உப கோட்டம் உடன்குடி நகர் விநியோக பிரிவுக்கு உட்பட்ட, உடன்குடி பேரூராட்சி 7-வது வார்டு ஸ்டாலின் நகர் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு கூடுதல் மின் அழுத்தம்வேண்டியும், சீரான மின்னழுத்தம் வழங்கவும் தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி னர். அமைச்சரின் ஏற்பாட்டில் தூத்துக்குடி, திருச்செந்தூர் மின்சாரத் துறை உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி புதிய மின்மாற்றி ரூ.4.60லட்சம் மதிப்பீட்டில் ஸ்டாலின் நகரில் அமைக்கப்பட்டது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    7-வது வார்டு உறுப்பினர் முத்து சந்திரா முன்னிலை வகித்தார். இந்த புதிய மின்மாற்றியினால் 60 மின் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.

    இந்நிகழ்ச்சியில் உடன்குடி உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம், உடன்குடி உபகோட்ட பிரிவு அலுவ லர்கள் உமா மகேஸ்வரி, உடன்குடி இளமின் பொறி யாளர் (நகர்) சூசைராஜ், இளமின் பொறியாளர் (ஊரகம்) மற்றும் மின்வாரிய பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுடுகாடாக பயன்படுத்தி வரும் அந்த இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு அருகே கலிதீர்த்தாள் குப்பம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் கழிவுநீர் வாய்க்கால் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது அந்த பகுதியில் உள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு மின்சாரம் எடுத்துச் செல்ல சுடுகாடாக பயன்படுத்தி வரும் அந்த இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

     இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால் பொதுமக்கள் இங்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பங்களை உடனடி யாக அகற்ற வேண்டும் என்றும் அப்படி அகற்றா விட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • நேரு எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்
    • புதிய மின்மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்தது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை செங்கேணி அம்மன் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது

    அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு செங்கேணியம்மன் நகர், ஜே.வி.எஸ் வீதி, சுதேசிமில் வளாகத்தில் உள்ள 2 அடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி மின்துறை மூலம் ரூ.15 லட்சம் செலவில் நடந்தது.

    புதிய மின்மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்தது.

    இதனையடுத்து மின்மாற்றியினை அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி  நடந்தது. நேரு எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றியின் செயல்பாடு களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், மற்றும் மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என சுமார் 5 வருடமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய ரூ.6.16லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி நகர் பிரிவு சார்பில் செட்டியாபத்து ஊராட்சிக்குட்பட்ட சிவலூர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    எனவே புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என சுமார் 5 வருடமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய ரூ.6.16லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதை சிவலூர் ஊர் தர்மகர்த்தா முருகன் தலைமையில், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

    இதில் உடன்குடி உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) மகாலிங்கம், உடன்குடி நகர் இள மின்பொறியாளர் உமாமகேஸ்வரி, உடன்குடி ஊரகம் இளமின் பொறியாளர் சூசைராஜ், உடன்குடி மற்றும் மின்வாரிய பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மின்மாற்றி மூலம் 60 வீடுகள் பயன்பெறும், இதன் மூலம் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரமும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    போளூர் மின்விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட போளூர் தொகுதியில் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் போளூர் வடக்கு பிரிவில்-4 அத்திமூர் பிரிவில்- 3, வடமாதிமங்கலம் பிரிவில்- 4 என11 டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளன.

    இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு போளூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமரன் தலைமை தாங்கினார்.

    போளூர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய 11 டிரான்ஸ்பர்களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் மின்வாரிய செயற்கு பொறியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
    • பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக 63 கிலோவாட் மின்மாற்றி ரூ.4.26 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக 63 கிலோவாட் மின்மாற்றி ரூ.4.26 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அப்புதி மக்களுக்கு குறைந்த மின்னழுத்தம் சரி செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதிய மின்மாற்றியை மாநகராட்சி மேயர் சரவணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ, நெல்லை கோட்ட செயற் பொறியாளர் முத்துக்குட்டி, பழைய பேட்டை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சங்கர், உதவி மின் பொறியாளர்கள் சரவணன், ஜன்னத்துல் சிபாயா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
    • நொச்சிக்குளம் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ரூபி மனோகரன் எம்.எல.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஊராட்சி ஒன்றியம் வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இதையறிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய மின் மாற்றி அமைத்து, பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து செல்வதால் நொச்சிக்குளம் குளம் மறுகால் வாய்கால் சாணான்குளம் செல்லும் வாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து செய்து தரும்படியாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    அதன்பின்பு பாளை மகாத்மா காந்திஜீ நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் அலுவலகத்தில் பணியாளர்களை சந்தித்து பேசினார். அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்பு அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    நெசவாளர் மக்களை பெருமைபடுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கனகராஜ், மின்சார துறை பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு தலைவர்கள், மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முக்கூடல் பிரிவுக்கு உட்பட்ட ஓடைமறிச்சான் பகுதியில் மின்னழுத்த குறைபாடு குறித்து புகார் செய்யப்பட்டது.
    • அதை சரி செய்வதற்காக புதிதாக 25 கிலோவாட் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் முக்கூடல் பிரிவுக்கு உட்பட்ட ஓடைமறிச்சான் பகுதியில் மின்னழுத்த குறைபாடு குறித்து புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து அதை சரி செய்வதற்காக மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன் ராஜ் உத்தரவுபடி, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் மேற்பார்வையில் ரூ.6 லட்சத்தில் புதிதாக 25 கிலோவாட் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் மகேஷ்சுவாமிநாத், முக்கூடல் உதவி மின் பொறியாளர் பிரம்ம நாயகம் , பிரிவு அலுவலக பணியாளர்கள் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×