என் மலர்

    நீங்கள் தேடியது "Ruby Manokaran MLA"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • களக்காட்டில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நடைபயணம் மேற்கொண்டார்.
    • பா.ஜனதா ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என ரூபி மனோகரன் கூறினார்.

    களக்காடு:

    ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து அதன் நினைவாக களக்காட்டில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நடைபயணம் மேற்கொண்டார்.

    களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வில் நடைபயணம் தொடங்கிய அவர் சுப்பிரமணியபுரம், ஊச்சிகுளம் விலக்கு, புதூர், பெல்ஜியம், களக்காடு பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் வழியாக 12 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று களக்காடு காந்தி சிலை அருகே நடைபயணத்தை நிறைவு செய்தார்.

    அதன் பின் பொதுக் கூட்டம் நடந்தது. முன்னதாக நடைபயணத்தின் போது ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது,

    'ராகுல் காந்தி மக்களை நேசிக்கும் தலைவர், அவருக்கு பதவி, புகழ் மீது ஆசை கிடையாது. அவரது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை உலகமே பாராட்டியது. நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. நாடு பின்னோக்கி செல்கிறது. ஏழைகள், இன்னமும் ஏழைகளாகவே உள்ளனர்.

    பணக்காரர்கள், பணக்காரர்களாகவே உள்ளனர். விலைவாசி உயர்வை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. பா.ஜ.க.வினர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்து வருகிறது. பா.ஜனதா ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுகின்றனர்.

    இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. இங்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார். இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், மலையடி புதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் உள்பட ஆயிரக்க ணக்கானோர் சென்றனர். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முன்னதாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று நாங்குநேரியில் இருந்து களக்காடு காந்தி சிலை வரை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

    காங்கிரசார் நடைபயணம்

    நாங்குநேரி கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்லூரி முன்பிருந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தொடங்கிய நடைபயணத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் த.காமராஜ், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லப்பாண்டி, சந்திரசேகர், பொதுச்செயலாளர் நம்பித்துரை உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்று நடைபயணம் சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.
    • நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கடந்த 2022-ம் ஆண்டு, இந்திய ஒற்றுமை யாத்திரையை குமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டார்.

    இம்மாதம் 7-ந் தேதி, அந்த நடைபயணம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி, நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக விழிப்புணர்வு பிரசார இயக்கமும், நடை பயணமும் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் கேட்டுக்கொண்டனர்.

    இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில், மாபெரும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

    வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.

    நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.

    தொடர்ந்து, இரவு 8 மணிக்கு, அங்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    எங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைமை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ராகுல்காந்தி எம்.பி. கடந்த ஆண்டு மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரையின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, அந்த வெற்றி யாத்திரை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், மத்திய பாரதீய ஜனதா அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையிலும் விழிப்புணர்வு பிரசார இயக்க நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.

    நாங்குநேரியில் தொடங்கி களக்காடு காந்தி சிலை முன்பு நிறைவு பெறும் இந்த நடைபயணத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள இருக்கி றார்கள்.

    இவ்வாறு ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தட்டான்குளம் கிராமத்திற்கு கூடுதலாக மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • ரூ. 5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் உடனடியாக மின்மாற்றி அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி மேற்கு வட்டாரம் தெற்கு நாங்குநேரி ஊராட்சி தட்டான்குளம் கிராமத்தில் மின் அழுத்த குறைபாட்டினால் பல வீடுகளில் மின் விசிறி, மின்மோட்டார் போன்றவை அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கை

    இது குறித்து கிராம மக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனிடம், மின் அழுத்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக தட்டான்குளம் கிராமத்திற்கு கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் உடனே மின் வாரியத்திடம் மின் அழுத்த குறைபாட்டை நீக்க மின்மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று மின்வாரியத்தின் மூலமாக கிராமப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தட்டான்குளம் கிராமத்தில் ரூ. 5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் மின்மாற்றி உடனடியாக அமைக்கப்பட்டது.

    மின்மாற்றி திறப்பு

    அதனை நேற்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைத்தார். நீண்ட காலமாக இருந்து வந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்த உடனே மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் பாராட்டினர்.

    திறப்பு விழா நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, நெல்லை கிராம புறக்கோட்ட செயற் பொறியாளர் குத்தாலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். சுடலைக்கண், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மறுகால்குறிச்சி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் புஷ்பா பாண்டி, தி.மு.க. ஒன்றிய பொருளாளர் சுரேஷ், நாங்குநேரி உப கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் ராமநாதன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், வின்சென்ட்,

    உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம்) ஆஷா, உதவி பொறியாளர் (கட்டுமானம்) அன்புசரவணன், நாங்குநேரி கிராமப்புற உதவி பொறியாளர் சிவசிவலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரிவாள் வெட்டில் காயமடைந்த சின்னத்துரை,சந்திரா செல்வி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • மாணவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை மற்றும் 9-ம் வகுப்பு படித்து வரும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரும், சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

    மேலும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு மருத்துவர்களை சந்தித்து அவர்கள் இருவரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராஜா, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலை வர் ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகி சுடலை குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது.
    • 136 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. பதவி பெற்றதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது. அதனால் 136 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. பதவியை பெற்றார். இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டம் களக்காடு, மாவடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மாவட்ட வட்டார கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
    • 71 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் களை 18 மாணவர்களுக்கு வழங்கினார்.

    71 மாணவர்கள்

    தொடர்ந்து திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டு வெளிவந்த ஆண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்களை 71 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறு ப்பாளர் வி.என்.கே. அழகிய நம்பி, திருக்குறுங்குடி பேரூ ராட்சி தலைவர் இசக்கி தாய், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். சுடலைகண், மறுகால்கு றிச்சி ஊராட்சி தலைவி சாந்தகுமாரி செ ல்லையா, மாவட்ட துணைத் தலைவர் கக்கன், மாவட்ட பொதுச் செய லாளர் நம்பி த்துரை, தி.மு.க. பொதுக்குழு உறு ப்பினர் மாடசாமி, முன்னாள் மாநில பொ துக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட செய ற்குழு உறுப்பினர் சுந்தர், திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவி ராசாத்தி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், கவுன்சிலர் மீகா, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், முன்னாள் ஏ.ஐ.சி.சி. வசந்தா, நெல்லை பாராளு மன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.எம். ராஜா, தி.மு.க. செயற் குழு உறுப்பினர் மாய கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடையார், ராம நாதன், வின்சென்ட், தங்க லெட்சுமி, லதா மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற அலுவலகத்தில் காமராஜர் உருவ‌ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
    • மாணவ- மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மகாராஜா நகர் சட்டமன்ற அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் காங்கிரஸ் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து நாங்குநேரி யூனியன், பருத்திபாடு ஊராட்சி, சுருளை கிராமத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    அதன்பின்னர் மூலைக்கரைப்பட்டியில் காங்கிரஸ் கொடி ஏற்றி அங்கு நகர காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் மக்கள் நீதி மையத்தின் சார்பில் மூலைக்கரைப்பட்டி ரீச் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.அதன்பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    தொடர்ந்து களக்காட்டில் பெருந்தலைவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கும் மலர் மாலை அணிவித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து களக்காடு தம்பிதோப்பில் களக்காடு நகராட்சி காங்கிரஸ் துணை காமராஜர் தலைமையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்.

    தொடர்ந்து களக்காடு யூனியன், ராஜபுதூரில் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மாவட்ட வட்டார, நகர, கிராம கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோபால் என்ற வியாபாரி தனக்கு சைக்கிள் வாங்கி தர எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விரைவில் சைக்கிள் வாங்கி தருவதாக கோபாலிடம் உறுதி அளித்தார்.

    நெல்லை:

    களக்காடு நகராட்சி, சிதம்பராபுரம் நாராயண சுவாமி கோவில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அப்போது அந்த ஊரை சேர்ந்த கோபால் என்பவர், தான் சிறிய அளவில் வியாபாரம் செய்து வருவதாகவும், சைக்கிள் வாங்கி கொடுத்தால் தன்னுடைய வியாபாரத்திற்கு அது பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    புதிய சைக்கிள்

    அதனை ஏற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விரைவில் சைக்கிள் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதன்படி நேற்று கோபாலுக்கு களக்காட்டில் தனது சொந்த செலவில் புதிய சைக்கி வாங்கி கொடுத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் வி.என்.கே. அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் சந்திர சேகர், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெ க்ஸ், கவுன்சி லர் மீகா, முன்னாள் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள் துரை, முகம்மது அலி, பாஸ்கரன், விபின், லீலாவதி மற்றும் களக்காடு நகராட்சி காங்கி ரஸ் கமிட்டி நிர்வாகி களும் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான, வழக்கில் அவரது மேல் முறையீடு மனுவை குஜராத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    நாங்குநேரியில் போராட்டம்

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநில காங்கிரஸ் பொரு ளாளர் ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல். பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் கேள்வி களுக்கு பதில் அளிக்க முடியாமல், அவர் தெரி விக்கும் குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ள முடியாமல், அவர் பாராளு மன்றத்துக்கு வருவதையே தடுக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு இப்படியொரு நிகழ்வை அரங்கேற்றி இருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

    எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல், மக்கள் ஆதரவு காங்கிரசுக்குத் தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்து பயந்து போய் இருக்கிறது மத்திய அரசு. அதனால்தான், ராகுல்காந்திக்கு எதிரான செயல்களில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

    ஜனநாயகத்துக்கு எதிரான, மக்கள் விரோத பா.ஜ.க. அரசை மக்கள் தூக்கி எறியும் நாள் நெருங்கி விட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா அரசுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள். மோடியை வீழ்த்திவிட்டு, ராகுல்காந்தி நாட்டின் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், மாலையில் அவர்களை விடுவித்தனர்.

    ஆலோசனை கூட்டம்

    இதற்கிடையே நேற்று மாலை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான ஆலோனை கூட்டத்தை நடத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திட்டமிட்டு இருந்தார்.

    சாலை மறியல் போ ராட்டத்தில் தொண்ட ர்களுடன் கைதாகி, திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டதால், ஆலோனை கூட்டம் நடத்த முடியாமல் போனது.

    ஆனாலும், அந்த ஆலோசனை கூட்டத்தில் பேச வேண்டிய விஷய ங்களை, கைதாகி அடைக்க ப்பட்டு இருந்த திருமண மண்டபத்திலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸர் கட்சியினர் எப்படி எதிர்கொள்வது? பூத் கமிட்டியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? என்பது விரிவாகப் பேசினார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வட்டாரத் தலைவரும் தங்கள் பகுதியில் இதுதொடர்பான கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக அனை வரும் கடுமையாக உழைக்க வேண்டும். நம் இலக்கு, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது ஒன்றுதான். அதற்காக ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டரும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும், தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்றும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print