search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் மருத்துவர் சமுதாயத்தின் ஐம்பெரும் விழா- எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப் பங்கேற்பு
    X

    மருத்துவ சமுதாய டீம் அமைப்பின் முன்னாள் பொருளாளர் மாயாண்டி உருவப்படத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் திறந்து வைத்த காட்சி.

    நெல்லையில் மருத்துவர் சமுதாயத்தின் ஐம்பெரும் விழா- எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப் பங்கேற்பு

    • முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினர்.
    • பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    மருத்துவர் சமுதாயத்தின் டீம் என்ற அமைப்பின் 10-வது ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட ஐம்பெரும் விழா வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ரமேஷ் பாபு, அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் நமச்சிவாயம், செயலாளர் செல்வ சூடாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அமைப்பின் முன்னாள் பொருளாளர் மாயாண்டி உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாயாண்டி உருவப்படத்தை திறந்து வைத்து பேசினர். இதனைத் தொடர்ந்து மருத்துவ சமுதாயத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளாக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கும் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு, கல்வி வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ படிப்பில் அந்த சமுதாயத்திற்கு சிறப்பு ஒதுக்கீடு வேண்டும். தியாகி விஸ்வநாததாசுக்கு சென்னை மற்றும் நெல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×